இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மணப்பெண் தேடும் படலம்!

படம்
[ பெண் பார்க்கச் செல்லும் முன் பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து பார்ப்பது வழக்கம். காலம் மாறி மாப்பிள்ளை படிப்பு குடும்பம் பற்றி விசாரிப்பு அதிகமாகி விட்டது. ஆணை விட பெண் படிப்பு அதிகமாகிவிட்ட காலம். பெண் வீட்டார் வரதட்சணை தர விரும்பாத நிலை. படிக்காத குடுப்பத் தலைவன் வெளிநாடு சென்று படிக்காததால் தான் படும் சிரமம் தன பிள்ளைகளுக்கு வரக் கூடாதென்று தனது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வழி செய்து விட்டமையால் அவரது குடும்பத்தில் அனைவரும் படித்தவர்களாக மாறிவிட்டனர். பணம், வரதட்சணை முதலியவைகள் பேசுவதென்றால் பெண் கொடுப்பதனை தவிர்த்து விடுகின்றனர். சிலர் படித்த பெண்கள் நமக்கு சரிவராது என்று நினைப்பதுமுண்டு. நமக்கு கிடைத்தது புரட்சியல்ல. நாம் அடைந்திருப்பது மறுமலர்ச்சி. மறுமலர்ச்சியில் ஒரு சில தவறுகள் நடக்கலாம். அதற்காக அனைத்துமே தவறு என்ற முடிவுக்கு வரக்கூடாது. வீட்டில் அடைபட்டிருந்த பெண்கள் வெளியில் வந்து படிக்க ஆரம்பித்த அருமையான மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது . படிக்கச் சென்ற ஒரு பெண் செய்த தவறினால் ஒட்டு மொத்த பெண்களுமே தவறு செய்து விடுவார்கள் என்பது எவ்வ

அழகினை மறைத்தலும், மறைத்தலின் அழகும்![இது கதையேயல்ல:வலி]

படம்
[ இது அப்படி ஒன்றும் வாசகனைக் கதையோடு அல்லது அங்குள்ள சூழலோடு ஒன்ற வைப்பதற்காக எழுதிய ஒன்றல்ல. முதலில் இது கதையேயல்ல: இந்த வலி/ வழியினூடாக ஒரு ‘பெட்டிசத்தைத்’ தருவது இலகுவழியாயிருந்தது. அவ்வளவுதான்.] சட்டத்தரணி நயீமின் மனைவியினுடைய வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்தது. அவன் நீதிமன்றம் வந்தடையும் போது பாபு தனக்காக நீதிமன்ற வாசலில் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். வெட்கமாக இருந்தது .மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பாபு அவனுடைய நண்பனாகினும் சட்டத்தரணித் தொழிலில் பாரிஸ்டர் பட்டமும் அனுபவமும் அதிகம் பெற்றவன். நயீம், பாபுவைக் கேட்டான். ‘இன்றைக்கு, யார் நீதிபதி?" ‘உனக்குப் பரிச்சயமானவர். அதே ஆள்தான்’ ‘அப்படியானால் இன்றைக்கும் ஒரு பாரிய சமர் இருக்கப் போகிறதென்று சொல்’ ‘அவருக்கு உன்னை நினைவில்லாதிருக்க வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்’ ‘என்னால் நம்ப முடியவில்லை, அவர் அனறையதினத்தை இலேசில் மறந்திருப்பார் என்று’ உண்மைதான் இலேசில் நினைவைவிட்டு அகலாத தினம்தான் அது . பாபுவுக்கு அந்த வழக்கே விநோதமான ஒன்று . ஐரோப்பிய சட்டத்தின்படி அந்த வழக்கில் .நயீம்தான் குற்றவாளி என்

எழுத்தாளர்ஆகுவதுஎப்படி? படி!

1. ஆற்றலுள்ள எழுத்தாளருக்கு விலைவாசியைச் சமாளிக்கும் அளவிலான வருமானம் இருக்கணும். கையேந்தக்கூடாது. நெஞ்சு படபடப்பில்லாமை. கண் பார்வை தெளிவு. வியாதியில்லாத உடல் ஆரோக்கியம் அவசியம். 5 மணி நேரம் இருக்கையில் இருந்தபடி எழுதும் உடல் திடம் தேவை. இல்லாதோர் எழுதவியலாது. எழுத்து வராது. 2. குடும்ப உறுப்பினர்கள் எழுத அனுமதிக்கணும். கேஸ் வாங்கி வா. ரேஷன் கடைக்குப் போ. டெலிபோன், கரண்டுக்கு பணம் கட்டு. பிள்ளைகள் பெயரன், பெயர்த்தியரை பள்ளியில், டீயுசனில் விட்டு வா. பால் வாங்கி வா ஏவல்கள் இல்லாத சுதந்திரப் போக்கு இல்லத்தில் தரப்படுமானால். எழுத்து வரும். 3. எழுத்தாளரிடம் பேசவேண்டும். போன் வருகிறது. என் கணவர் முக்கியமான கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார். தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறார். இடைமறித்தால் சிந்தனை டைவேர்சன் ஆகும் தயவு செய்து பிறகு போன் செய்யுங்கள் என்று கூறினால், தனது மனைவியை மிகச் சரியாக உருவாக்கியிருக்கிறார் அந்த எழுத்தாளர். எங்க வீட்டுக்காரவுக ரேஷனுக்கு போயிருக்காங்க. பிள்ளையை ஸ்கூலுக்கு கூட்டிப் போயிருக்காங்க. இன்ன பிற காரணங்கள் கூறப்பட்டால் தமது இல்லத்தில் கடுமையான தோல்வியைச் ச

டென்ஷன் ஏன்?

உலகளாவிய கட்டுரைப் போட்டி யில் (ஹிஜ்ரி 1430) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான இன்பங்களையும், துன்பங்களையும் சந்திக்கின்றான். இது மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகையில், நிச்சயமாக கஷ்டத்துடனேதான் இலகு உள்ளது. (அல்குர்ஆன் 94:6) மேலும் ஓரிடத்தில், நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம் பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155) அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடினால் அவரை அவன் சோதிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் புஹாரி, முஸ்லிம்) இவ்வாறு அல்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் ஏராளமாகச் சொல்லப்பட்டு விட்டது. இவைகளையெல்லாம் அதிகமானோர் பார்ப்பதுமில்லை, சிந்திப்பதுமில்லை. மாறாக எதற்கெடுத்தாலும் வீணான தடுமாற்றம், நிலைகுலைதல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றால் ‘ டென்ஷன் ’ எனும் நோய்க்குள்ளாகியே தனது வாழ்வில் பாதியை நரகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். பூமியிலோ உங்களிலோ எ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே அன்பிற்குரிய நண்பர்களே....உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். மேலும் தங்களின் சிறந்த கருத்துகளை பதிவு செய்யுங்கள். இந்த BLOG கை அறிமுகம் செய்யுங்கள்

பாலியலும் இஸ்லாமும்

இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:   1. இராணுவ ரீதியான படையெடுப்பு 2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு முதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. ‘உலகமயமாக்கல்’ எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன. உலகமமயமாதலும் பாலியல் சீர்கேடுகளும் மேற்குலகம் சுதந்திரமான

மனைவியின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்!திருமணமான ஒவ்வொரு ஆணும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை

படம்
மனைவியின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்! படுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே! என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர். குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம். தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை. ஒரு பெண் மருத்துவர் சொல்கிறார்; என் தோழிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார். அவள் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத