இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இல்லறம் -பூத்துக் குலுங்க!

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது. இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது. "நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன." (அல்குர்ஆன் 30:21) இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்ன

பிரார்த்தனையின் ஒழுக்கங்கள்

1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்     1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.     இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!    அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவ

அல்குர்ஆன் உயிருடன் உள்ளவனுக்கா? மரணித்தவனுக்கா?

இவருக்கு (முஹம்மத் நபிக்கு) கவிதையை நாம் கற்றுக் கொடுக்கவில்லை. (அது) அவருக்கு தேவையுமில்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை. உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும் (நம்மை) நிராகரிப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்) (சூரா யாஸீன்: 69-70). கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வின் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவானது. உயிருடன் நடமாடிக் கொண்டு (வாழ்ந்து கொண்டு) இருப்பவனுக்கு வழிகாட்டியாக அருளப்பட்டதுதான் இக் குர்ஆன். அல் குர்ஆன் 23 வருடங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அருளப்பட்டது. குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை தனிமனித வாழ்க்கை அரசியல் பொருளாதாரம் என்று ஒவ்வொரு துறைக்கும் தெளிவுரையாக அல்குர்ஆன் அருளபட்டது. பூரணமான வாழ்க்கை திட்டத்திற்கு; வழிகாட்டியாக அருளப்பட்ட இக்குர்ஆனை உயிரோடு நடமாடுகின்ற மனிதனுக்கு ஓதிகாட்டி வழிநடாத்த வேண்டும். அப்போது அவனது வாழ்க்கை இறை திருப்;திக்கு உட்பட்டதாக அமையும்.  மனிதன் வாழ்வதற்கான அறிவுரைகள் மிகத் தெளிவாக குர்ஆனில் சொல்லப்பட்டி ரு

ஜின்களை உணர்வது எப்படி?

ஜின் எனும் படைப்பு!  இந்த உலகத்தில் எத்தனையோ ஜீவராசிகளை படைத்துள்ள அல்லாஹ் கண்ணுக்குத் தெரியாத படைப்புகளையும் படைத்துள்ளான் காற்று நெருப்பு நீர் மேகம் உயிர் இவைகளில் சிலதை உணரலாம் சிலதை உணரமுடியாது அப்படி மனித கண்ணுக்குத் தெரியாத ஒரு படைப்புதான் ஜின் என்பதாகும் இஸ்லாத்தின் மிக முக்கிய நம்பிக்கையில் ஒரு நம்பிக்கை ஜின்களுக்கு இறைச்செய்தி அறிவித்து அவர்களும் அல்லாஹ்வின் விலக்கள் ஏவல் கட்டளை உண்டு என்பதையும் அவர்களிலிலும் இறை அடிமைகளும் இறை நிறகரிப்பாளர்கள் உண்டு என்பதையும் அவர்களுக்கும் நமக்கும் சேர்த்தே இறுதி தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவதாகும். இப்படி ஒரு படைபினம் இருப்பதை திருகுர் ஆன் கூறுகிறது ஜின்களில் ஒரு கூட்டத்தார் (இந்தக் குர் ஆனை) செவியுற்று நாங்கள் ஆச்சரியமான குர் ஆனை செவியுற்றோம் எனக்கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என கூறுவீராக! அது நேர்வழியைக் காட்டுகிறது எனவே அதை நாங்கள் நம்பினோம் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம், குர் ஆன் 72:1,2, என அவர்களும் இந்த இஸ்லாமிய மார்கத்தை நெறியாக கொண்டிருக்கிறார்கள் என விளங்குகிறது. இவ்வாறு ஒரு பட

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

  1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்   சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல்   மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்   நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.  5.மாசு நிறைந்த காற்று மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.  6.தூக்கமின்மை   நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.   7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது   தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள்

உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா?

பெற்றோர்களே ! …                                                        படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு இந்திய புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது. 1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது. 2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். (தூங்குவதைத்தவிர). 3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான். 4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன. 5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன. குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்: 1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. 2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்

ஜும்ஆ குத்பா உரை நிகழும்போது சுன்னத் தொழலாமா?

படம்
கேள்வி 1 : வெள்ளிக்கிழமை தாமதமாக பள்ளிவாசலுக்கு வரநேர்ந்தால் ஜும்ஆ குத்பா உரை நிகழும் போது சுன்னத் தொழுகை தொழலாமா? அல்லது குத்பா உரைக்கு முக்கியத்துவம் தந்து தொழுகாமல் அதனை கேட்க வேண்டுமா? கேள்வி 2 : 15 வயதுடையவர் ஏழு வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, இப்போது 25 வயதான பிறகு அதை நினைத்து வருந்துகிறார். அவருக்கு மன்னிப்பு உண்டா? முதல் கேள்விக்கான பதில்: முதலில் ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வதன் சிறப்பை அறிந்து விட்டு உங்கள் கேள்விக்கு வருவோம். ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள். 'பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.  நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழ

நீங்க தவ்ஹீதா... ?சுன்னத் ஜமாத்தா..?

தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள். அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர். அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்   'அஹ்லுஸ் ஸூன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர் இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார

மனிதா! உன்னுடையஎதிரி[ஷைத்தான்]பற்றித் தெரிந்து கொள்

படம்
    மனிதா! உன்னுடைய எதிரியைத் தெரிந்து கொள்  அல்லாஹ் கூறுகிறான்: ''ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.'' (அல்குர்ஆன் 35:6) "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் ஷைத்தான் கூறினான்). (அல்குர்ஆன் 7:16,17)  இடது கையால் சாப்பிடுவான்  நீங்கள் சாப்பிடும் போது வலது கையால் சாப்பிடுங்கள் குடிக்கும் போது வலது கையால் குடியுங்கள். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3764)   தொழ விடமாட்டான்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப் பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான