பணம் - ஓர் இஸ்லாமிய பார்வை!

                                
1    أَلْهَاكُمُ التَّكَاثُرُ2   حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-  நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. 102:1,2
பணம் என்றால் என்ன?
எல்லாருடைய வாழ்க்கையிலும் பணம் என்பது இன்றியமையாதது.
பணத்தைபெறுவதற்காக மனிதன் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றான்எதார்த்தத்திலே பணத்தை நாம் எதற்கு பயன் படுத்துகிறோம்?
வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்துகிறோம்.
 ஆரம்பகாலத்திலே பண்டமாற்றுமுறை என்பதுதான் இருந்து வந்தது.
தன்னிடம் உள்ள பொருட்களை கொடுத்து வேறு பொருளை வாங்கிக் கொள்வார்கள்.கல்லையும் மண்ணையும் குழைத்து வீடு கட்டினார்கள். தென்னை ஓலையிலே கூரைமேய்ந்து கொண்டார்கள்.
 பருத்திச் செடியிலே இருந்து பயன்பெற்று பருத்தியாடைகளைஅணிந்து கொண்டார்கள்.
அவ்வளவுதான் மனிதனுடைய தேவை முடிந்தது. எனவே அப்போது மக்களுக்குபணத்துடைய தேவைக்கும் அவ்வளவாக முக்கியம் ஏற்படவில்லை. யாரும் பணம்வைத்திருக்கவில்லை. தங்கம் வெள்ளி உலோகங்கள் பூமியிலிருந்து கண்டெடுத்த பிறகுமக்கள் தங்கத்தையும் வெள்ளியையும்
 பணமாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். தங்கநாணயங்கள் உருவாக்கப்பட்டன.
பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலே மக்களிடம்தங்க நாணயங்கள் கையிருப்பு இருக்க ஆரம்பித்தன.
பாதுகாப்பு கருதி தங்க நாணயங்களை பொற் கொல்லனிடம் கொண்டு போய் கொடுத்துவைத்தார்கள். அத்தாட்சிக்காக அவன் மக்களிடம் ஒரு காகித்தில் ஐ.ஓ.யு என்று ஒழுதிக்கொடுத்தான். ஐ.ஓ.யு என்றால் "நான் உனக்கு இவ்வளவு தர வேண்டும். அந்தளவு கடன்பட்டிருக்கிறேன்" என்பது அந்த வாசகத்தின் பொருள். தேவைப்படும்போது அந்தகாகிதத்தை பொற்கொல்லனிடம் கொண்டு வந்து கொடுத்து தங்க நாணயங்களை
பெற்றுக் கொண்டார்கள்.
காலப் போக்கிலே என்ன ஆகிற்று என்றால் அந்த எழுதிக் கொடுக்கப்பட்ட காகிதத்தைபொற்கொல்லனிடம் கொண்டு வந்து கொடுத்து பணத்தை பெருவதற்கு பதிலாக அந்தகாகிதத்தை வியாபாரியிடம் கொண்டு சென்று இவ்வாறு எனக்கு இவ்வளவு தங்கம்இருக்கின்றது. அதற்கு இந்த காகிதம் அத்தாட்சி. இதை பெற்றுக் கொண்டு எனக்குபொருளைத் தரவும். இந்த காகிதத்தை நீ பொற் கொல்லனிடம் கொண்டு போய்கொடுத்தால், தங்க நாணயம் பெற்றுக் கொள்ளலாம். என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
அதுவே காலப் போக்கில் சாதாரண பழக்கமாகப் போய்விட்டது.
நாகரீகமும் நாடுகளும் வளரவளர அந்த சாதாரண காகிதம் அரசாங்க முத்ததிரையோடுஅச்சடிக்கப்பட்ட பணமாக வெளியிடப்பட்டது. 
என்றாலும் கூடஅந்த பழைய பழக்கம்அப்படியேதான்
இருக்கின்றது. பொற்கொல்லனிடம்எந்தளவு தங்க நாணயம்கொடுத்தோமோ அந்தளவுக்குத்தான் அவன் காகிதம் எழுதிக் கொடுப்பான். அதுபோலத்தான் ஒரு நாடு எவ்வளவு தங்கம் கையிருப்பு வைத்திருக்கிறதோ
 அந்தஅளவுக்குத்தான் அந்த நாட்டில் பணம் அச்சடித்து
வினியோகம் செய்ய முடியும்.அதற்கென்றே எல்லா நாடுகளிலும் ரிஸர்வ்
வங்கிகள் இருக்கின்றன. அந்த வங்கிகள்கரன்சிகளை பணத்தை 
கட்டுப்படுத்தக் கூடியவைகளாக இருக்கின்றன. நாம் ஒரு இலட்சரூபாயை கையில் வைத்திருக்கிறோம் என்றால் அதற்கு நிகரான தங்கத்தை ரிஸர்வ் வங்கிதன்னிடம் கையிருப்பாக வைத்திருக்கிறது என்பது தான் உண்மை நிலை . ஆனால்அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின்அடிப்படையில் தங்கம் மட்டுமல்ல 
இன்னும் வேறு சில பொருட்களையும் வைப்புநிதியாக வைத்துக் கொள்ளலாம் என்று தெரிகின்றது.
தங்கத்தை வைத்துக் கொள்ளலாம் வெள்ளியை வைத்துக் கொள்ளலாம்.
கோதுமை,பார்லி, உப்பு இதுபோன்ற பொருட்களையும் நாம் வைப்பு நிதியாக வைத்துக கொண்டுநாம் ""மீடியம் ஆஃப் எக்சேன்ஜ்- பரிவர்த்தன சாதனமாக" பயன்படுத்திக் கொள்ளலாம் எனநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றைக்கேசொல்லியிருக்கிறார்கள்.
சரி, ஒரு நாட்டிலே தங்கம் கிடைக்கவில்லை அரிசிதான்விளைகிறது என்று சொன்னால் அந்த அரிசியை ரிஸர்வாக -வைப்பு நிதியாக வைத்துஅதை தங்கமாக பயன்படுத்தலாம் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள்
 அன்றைக்கே நமக்கு அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இது பணத்தைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம். அடுத்து இவ்வளவு பெரிய காகிதப் பணங்கள் எல்லாம் எப்படிபுழக்கத்திற்கு வந்தது?
பணத்தை இறைவனாக்காதீர்
காசு பணம் விஷயத்தில் கடந்த காலத்தில் வாழ்ந்த மக்கள்  மிகப் பெரும் பேணிக்கைஇருந்ததாக நபிமொழிகளில் நாம் காண்பதுண்டு.
பணத்திற்கு ஆசைப்படாமல், அடுத்தவர் பணம் 'நமக்கு வேண்டாம்' என்ற எண்ணத்தில்வாழ்பவர்களும், தனக்கு தேவை இருக்கும் நிலையில் தனது பணத்தை தன்னை விடஅதிகம் தேவையுள்ளவர்களுக்கு வாரி வழங்குபவர்களே வெற்றியாளர்கள் என்றுதிருக்குர்ஆன் கூறுகின்றது.
   وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்59:9.

அதிகரித்து வரும் பணத்தின் மீதான பயபக்தி
ஆனால் நிகழ்கால உலகில், பணத்தையும் – உணவையும் மையமாக  மையமாக கொண்டமுதலாளித்துவ,
 கம்யூனிச கொள்கைகளின் தாக்கத்தினால் மனிதர்களின் உள்ளங்களில்பணத்தின் மீதான பயபக்தி அதிகரித்துள்ளது.
பண விஷயத்தில் மனிதர்களிடம் இருந்து வந்த நேர்மை – அச்சம் அகன்று போய்,'பணம்தான் எல்லாம்', 'பணத்திற்காக எதுவும் செய்யலாம்' என்ற மனநிலை மனிதர்களிடம்உருவாகியுள்ளது.
இதனை முஸ்லிம்களாகிய நாம் மேற்கத்திய கொள்கைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கவேண்டும்.
இஸ்லாத்தின் பண கொள்கை
இறை மார்க்கமான இஸ்லாம் வாழ்க்கைத் தேவைக்காக பணம் சம்பாதிப்பதைஆதரிக்கவே செய்கிறது.
உழைத்து பணம் சம்பாதிப்பதை கடமை என்று அறிவித்த மார்க்கமும் 
இஸ்லாம் தான்.
எல்லாவற்றிலும் பணத்தை எதிர்பார்க்கலாமா?
செய்யும் தொழிலில் சம்பள பணத்தை எதிர்பார்ப்பது இஸ்லாத்தில் குற்றமில்லை..
கூலியை உடனே கொடுக்க கட்டளையிடும் இஸ்லாம் வேலை செய்த ஒருவன் அதனைஎதிர்பார்ப்பதை நிச்சயம் குற்றமாக கருதாது தான்.
செய்யும் வேலைக்கு பணத்தை எதிர்பார்ப்பதை குற்றமாக கருதாத இஸ்லாம்எல்லாவற்றிலும் பணத்தை எதிர்பார்ப்பதை ஆதரிக்காது.
ஏனெனில், சில காரியங்களை ஆதாயங்களுக்காக செய்வதைப் போன்று, சிலகாரியங்களை இலவசமாகவும், சில பணிகளை சேவையாகவும், சில பணிகளைஉதவியாகவும் எதையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். இஸ்லாம் அதனைகட்டளையிடவே செய்கிறது.
ஏனெனில்,பணத்தை எதிர்பார்க்காமல் சில பணிகளை, சேவைகளை, உதவிகளைசெய்வது ஒருவன் தனது ஆத்மாவுக்கு அவன் செய்யும் தர்மமாக 
இஸ்லாத்தில்கருதப்படுகிறது.




பெருகி வரும் கமிஷன் கலாச்சாரம்
நாகரிக உலகில் முதலாளித்துவம் அறிமுகப்படுத்திய 'கமிஷன் கலாச்சாரம்' இன்று மதம்,இனம் , நாடு ஆகியவற்றை கடந்து எல்லா மக்களையும் 
ஆட்டிப் படைத்து வருகிறது.
குறிப்பிட்ட வேலையில் அல்லது பொருளில் சதவீத அடிப்படையில்  பணத்தைகமிஷனாக பெறுவதே 'கமிஷன் கலாச்சாரம்' ஆகும்.
 வாங்கும் பொருட்களில் கமிஷன்
முன்பெல்லாம் வீடுகளில் தச்சு வேலைகள் நடக்கும் சமயத்தில், அவ்வேலையில்ஈடுபவர்கள் குறிப்பிட்ட கடையில் நம்மை பொருள் வாங்குமாறு பரிந்துரைந்து விட்டு,நாம் வாங்கிய பிறகு அந்த கடையில் சென்று கமிஷன் வாங்கும் 'பண்டைய கமிஷன்பழக்கம்' இன்று எல்லா பொருட்களிலும் வந்து விட்டது.
வீட்டு கட்டுமானப் பொருட்கள் முதல் எலக்ட்ரிகல்  எலக்ட்ரானிக்ஸ்
பொருட்கள் வரைஇன்று கமிஷன் தலைவிரித்தாடுகிறது.
எதை வாங்குவதற்கும் யாருடைய உதவியையும் நாட முடிவதில்லை. சின்ன உதவிக்கும்கமிஷன் தந்து விட வேண்டும் என்ற நிலைமையே
 பரவலாக காணப்படுகின்றது.
மனிதநேயம் செத்து விட்டதோ என்னவோ?
இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோர்களாகிய சாதாரண மக்கள் தான்.
கமிஷன் தொகை வழங்குவதில் வியாபாரிகளிடம் போட்டி ஏற்பட்டு ஏறும் பொழுதும்,கூடுதலாக கமிஷன் தரும் கடையை நோக்கி நுகர்வோர் நகர்த்தப்படும் பொழுதும்தேவையற்ற விலையேற்றமும், தரமற்ற பொருட்களை கட்டாயமாக வாங்கும் நிலையும்பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.
வேலைக்காரன் ஒருவன் அவன் வேலை செய்யும் வீட்டுக்காரருக்கு தெரியாமலே அவர்வாங்கும் பொருட்களில் கமிஷன் பெறுகிறான்.
நிச்சயமாக இது பொதுமக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் மோசடியாகும்.  يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ ۖ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا
ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத்தவிரவேறு(எதனையும்)அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. 4:120
பணிகளில், வேலை வாய்ப்புகளில் கமிஷன்
குறிப்பிட்ட பெரிய கம்பெனி தனக்கு வேலையாட்கள் தேவைப்படும் பொழுதுஏஜென்ட்கள் மூலம் ஆட்களை தேடும் போது  ஏஜென்ட்கள் மூலம் கிடைக்கும்ஊழியர்களின் சம்பளத்தை நேரடியாக அவர்களிடம் வழங்காமல் அந்த கம்பெனிகள்ஏஜென்ட்களிடம் தருவதும், அல்லது ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட ஒருதொகையை ஏஜென்ட்களுக்கு வழங்குவதும் தற்காலத்தில் சில இடங்களில் நடந்துவருகிறது. நிச்சயமாக இது வட்டியை விட மிக மோசமான பாவமாகும்.
குறிப்பிட்ட தொகையை தந்துவிட்டு எந்த உழைப்பும் இன்றி மாதம் - மாதம் ஒருகுறிப்பிட்ட ஒரு தொகையை வட்டியாக பெறுவதே தடுக்கப்பட்டிருக்கும் பொழுதுநிச்சயமாக இது ஹலாலாக எவ்வாறு ஆகும்?
அடுத்தவனின் சம்பாதித்தியத்தை அவனுக்கே தெரியாமல் உண்டு வாழும் இவ்வாழ்க்கைவட்டியை விட மிக மோசமானதே..
புரோக்கர் கமிஷன்
'ரியல் எஸ்டேட்' என்ற நாகரிக வாசகத்தில்  சொல்லப்படும் இந்த புரோக்கர் தொழில்இன்று சமுதாயத்தில் விரைவாக செல்வந்தராகும் தொழிலாக பார்க்கப்படுகின்றது.
பண்டைய காலங்களில் மனித நேயமாக செய்யப்பட்டு வந்த உதவிகளுக்கு தான்இப்போது 'புரோக்கர்' என்ற பெயரில் கமிஷன் பெறப்படுகின்றது.
வட்டிக்கு கூட முதலீடு இருக்கும் நிலையில், உலகில் முதலீடு ஏதும் இல்லாத ஒரேதொழில் இந்த புரோக்கர் தொழில் தான். வாயில் இருந்து வெளிவரும் வார்த்தைகளைத்தவிர வேறு எதுவும் இதில் முதலீடாக இல்லை.
முன்பெல்லாம் சாதாரணமானவர்களால் செய்யப்பட்டு வந்த இத்தொழில் இன்றுகட்சிக்காரர்களாலும், அமைப்பினர்களாலும் செய்யப்படும் 'மாபியா' தொழிலாகமாறியிருக்கிறது.
இத்தனை பேர் இந்த வீடு அல்லது நில விற்பனையில் பங்கு கொண்டுள்ளோம் என்று'மிரட்டி பணம் வாங்கும்' அவலங்களும் ஆங்காங்கே நடக்கின்றன.
இதில் வேதனைக்குரிய விஷயம் தற்காலத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், சில இடங்களில்இமாம்கள், மோதினார்கள் கூட இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வீடு, நிலங்களில் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டதற்கு இந்த புரோக்கர்களும்,இவர்கள் உருவாக்கும் போலி டிமான்டுகளும் தான் காரணம்.
பஞ்சாயத்து கமிஷன்
முற்கால இஸ்லாமியர்களிடம் காணப்படாத கமிஷன் தான் 'பஞ்சாயத்து 
கமிஷன்' ஆகும்.
கணவன்  மனைவி அல்லது இரு தரப்பினர் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டால்இருவருக்குமிடையே பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும், நல்லவர்கள் இதில்ஈடுபட வேண்டும் என்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
கணவன் –மனைவி பிரச்சினையில் சமசரசம் செய்து வைத்தல்;
وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِن بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ۚ وَالصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ الْأَنفُسُ الشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 4:128

 وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِن يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا
 (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான். 4:35
இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறில் சமரசத்தில் ஈடுபடுதல்
وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا ۖ فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَىٰ فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّىٰ تَفِيءَ إِلَىٰ أَمْرِ اللَّهِ ۚ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ۖ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். 49:9
பொதுவான பிரச்சினைகளில் சமரசம் செய்தல்
 إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10
காசுக்காக நடந்திடும் கட்டப் பஞ்சாயத்து
சமரசம் செய்து வைக்கும் நோக்கில் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் காசு வாங்கக்கூடாது.ஏனெனில், அதை தொழிலாக கொள்ள ஆரம்பித்தால் ஒரு பக்கச் சாய்வும், ஒரு தலைபட்சஅநியாயம் நடக்கவும் அது காரணமாகும்.
ஆபத்தான ஷிர்க்
பணம் கிடைக்கிறது என்பதற்காக பொய், ஏமாற்று, புரட்டு, மோசடி , பித்தலாட்டம் எனஎல்லாவற்றுக்கும் இறைவனை அஞ்சாமல் மனிதன் துணிகிறான் என்றால் இவன்பணத்தின் மீதான பயபக்தியினால் அதை மனதளவில் இறைவனாக ஏற்று விட்டான்என்பதே பொருளாகும்.
நிச்சயமாக இவன் அல்லாஹ்வின் அடிமையாக இருக்கவில்லை. மாறாக தன்னைபணத்தின் அடிமையாக ஆக்கியவன். இவனைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
பள்ளிவாசல்களில், மதரஸாக்களில், தர்மப் பணத்தில் இயங்கும் அமைப்புகள் மற்றும்அறக்கட்டளைகளில் ஊழல் நடப்பதும் அவற்றில் கமிஷன்கள் தலைவிரித்தாடுவதும்பணத்தை இறைவனாக தேர்ந்தெடுத்ததின் விளைவாகும்.
தற்காலத்தில் முழுவீச்சில் ஒழிக்கப்பட வேண்டிய ஷிர்க் பணத்தை இறைவனுக்கு நிகராகஅல்லது இறைவனை விட மேலாக கருதும் ஷிர்க் தான்.
ஆனால் ஆபத்தான இந்த ஷிர்க்கை யாரும் கண்டு கொள்வதும் இல்லை. சிந்திப்பதும்இல்லை. இதைப் பற்றி பேசுவோர் மிகக் குறைவு தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001