இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள் ü   வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம் ''கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிஇருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1443, 1444, 5797) ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அ

ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்!

இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை. முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது. அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. இறைவனது இந்த சட்டதிட்டங்களை அனைத்துத் தரப்பு மனிதர்களும் ஏற்று நடப்பார்களேயானால், இவ்வுலக வாழ்க்கையே சுவர்க்கலோக வாழ்க்கையாக ஆகிவிடும். இறைவனது இறுதித் தூதரையும், இறுதி வேதத்தையும் ஏற்று நடக்கும் முஸ்லிம்கள், தாங்கள் பெரும் சிரமப்பட்டு, கடல் கடந்து சென்று, மனைவி மக்களைப் பிரிந்து, நெற்றி வியர்வை சிந்தி ஈட்டும் அதிகப்படியான செல்வத்தில் ஏழைகளதும் பங்கு இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது அவர்களுக்குரிய பங்கை முறையாக

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

o  நோன்பு நாளில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நடந்து கொள்ளும் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? o நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா? o பிறரது எச்சிலை விழுங்குவது சம்பந்தமான சட்டம் o நோன்பிருக்கும் நிலையில் கணவனும் மனைவியும் சல்லாப விளையாட்டில் ஈடுபடுவது o ரமளான் மாதத்தின் இரவில் உடலுறவு கொண்ட ஒருவர் (ஜனாபா), அதிகாலை நேரம் வரை குளிப்பதைப் பிற்படுத்தலாமா? நோன்பு நாளில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நடந்து கொள்ளும் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? கேள்வி : நோன்பு வைத்திருக்கின்ற கணவன் நோன்பு வைத்திருக்கின்ற மனைவியிடம் நடந்து கொள்ளக் கூடிய அனுமதிக்கப்பட்டவைகள் யாவை? பதில் :  எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! ஷெய்க் இப்னு உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இது பற்றிக் கேட்ட பொழுது அவர் இவ்வாறு பதில் கூறினார் : கடமையான நோன்பு வைத்திருக்கின்ற ஒருவர், தன்னுடைய விந்து வெளியாகும் அளவுக்கு தன்னுடைய மனைவியிடம் (நெருக்கம் கொள்வதற்கு) அனுமதிக்கப்பட்டவரல்ல. உச்சகட்டத்தை அடைவதென்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு உடனடியாக

இரவு வணக்கத்தை அனைவரும் சுவைக்க முயற்சி செய்வோம்

இரவு வணக்கமென்பது நாம் அனைவரும் சுவைக்க வேண்டிய ஒன்றாகும்.  அதற்கான ஆசை எம்மனைவரிலும் இன்னும் இன்னுமின்னும் வளர வேண்டும். நாம் எமது முன்னைய சமுதாயத் தவர்களோடு நன்மைகளால் போட்டுபோடுவதற்கான மிகப் பெரும் சந்தர்ப்பம் இந்த இரவு வணக்கமாகும். உடம்பு சோம்பல் பட்டாலும் கூட நாம் முனைப்போடு செய்யவேண்டிய ஒரு அமலாக இது காணப்படுகிறது. கல்வி கற்கும் மாணவனுக்கு கல்வியில் தேற இது ஒரு கட்டுச்சாதம். கற்பிக்கும் ஆசான் கற்பித்தலில் தேற இது ஒரு கட்டுச்சாதம். வாழ்வை ருசிக்க வேண்டுமென விரும்பும் இளைஞனுக்கான ஒரு கட்டுச் சாதம். இல்லர வாழ்வில் சந்தோசம் விளைய வேண்டுமென விரும்பும் தம்பதியினருக்கான ஒரு கட்டுச்சாதம். கியாமுல் லைல் வீட்டின் சிறந்த தலைவனாக இருக்க விரும்புபவருக்கான ஒரு கட்டுச்சாதம். வீட்டின் சிறந்த தலைவியாக இருக்க வேண்டுமே என விரும்பும் பெண்ணுக்கான ஒரு கட்டுச் சாதம். தனது தொழிலை திறன் பட செய்ய வேண்டும் என விரும்பும் தொழிலாளியின் கட்டுச் சாதம். வியாபாரத்தில் இலாபம் கிடைக்க வேண்டுமென பாடுபடும் வியாபாரிக்கான கட்டுச் சாதம். இஸ்லாமிய அழைப்பாளனுக்கான மிகப்பெரும் கட்டுச் சாதம். எனவேதான், மிகப்பெரும் தாஈ