இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமிய பார்வையில்வர்தா புயல்...

16.12.2016   மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராக வேண்டும். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதல்ல. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. வரம்புகளுக்குட்பட்டது. எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர். வரம்பு மீறாதீர் என அல்லாஹ். எச்சரித்துள்ளான்.அவற்றை உணர்ந்துக் கொண்டே மனிதன் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான். சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள், பூகம்பங்கள்,சுனாமி பேரலைகள், புயல் சீற்றங்கள், கடல் கொந்தளிப்புகள் என இயற்கை பேரழிவுகள் குறித்த செய்திகளை கண்டும், கேட்டும் மனிதஇனம் கலங்கிப்போயிருப்பதை காண்கின்றோம். மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆற்றல் என்னமுடியாது. ஆனால் மனிதனோ தன்னை படைத்த அல்லாஹ்வையே மறந்து அவன் விதித்த விதிமுறைகளை மீறி நடக்கும் போது தன்னையும், தன் ஆற்றலையும், தன் சிந்தனையையும் மனிதனுக்கு உணர்த்திட பேரழிவுகளை எச்சரிக்கையாகவும் படிப்பினைப் பெற்று பக்குவம் பெறுவதற்காகவும் ஏற்படுத்துகிறான் . ஆயினும் மனித சமுதாயம் படிப்பினை பெ
சுவர்க்கத்தை பரிசாகபெற்றுத் தரும் நற்கிரியைகள் 1. அநாதையைப் பொறுப்பேற்றல்: "அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி). 2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்: "எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ). ஆயத்துல் குர்ஸி: "அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் " (பகரா 2:255). 3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை: 'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு: 'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்

தண்ணீர் ஒர் மாபெரும்அருட்கொடை!

உலக   அளவில்   தண்ணீர்   ஒரு   மாபெரும்பிரச்சனையாக   உருவெடுத்துள்ளது . உலகில்   40 சதவீத   மக்கள்   தண்ணீர்   கிடைக்காமல்அவதிப்படுகிறார்கள் . பல   கோடி   மக்கள்   நீர்பற்றாக்குறை   உள்ள   பகுதியில்   வசிக்கின்றார்கள்என்று   ஐ . நா . சபை   தெரிவிக்கின்றது . எதிர்கால   தண்ணீர்   தேவையைமனதிற்கொண்டு   சந்திரன் ,   செவ்வாய்   கிரகத்தில் மனிதன்   உயிர்   வாழ   முடியுமா ? அங்கு   தண்ணீர்உள்ளதா ? என   விஞ்ஞானிகள்   தீவிர   ஆராய்ச்சியில்ஈடுபட்டு   வருகின்றனர் . உலகத்தில்   97.5   சதவீதம்   உப்பு   சுவைகொண்ட   நீர்   உள்ளது . மீதமுள்ள   2.5   சதவீதம்   தான்சுத்தமான   நீர் . அதிலும்   2.24   சதவீதம்   துருவபகுதிகளில்   பனிப்பாறைகளாகவும் ,   மக்கள் பயன்படுத்த   முடியாத   நிலையிலும்உள்ளது . மீதமுள்ள   0.26   சதவீத   தண்ணீரைத்தான் உலகமனைத்திலுமுள்ள   மனிதர்கள்   அனைவரும்குடிநீராகவும் ,   விவசாயத்துக்கும்   பயன்படுத்தும்நிலை   உள்ளதாக   ஒரு   புள்ளி   விவரம்கூறுகின்றது . தண்ணீருக்கான   சண்டைகள்   நாள்   தோறும்நடந்து   கொண்டிருக்கின்றன . வீதிகளில் மட்டுமில்லாமல்   மாநி