இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்றைய சூழலில்முஸ்லிம்களும் தற்காப்பு கலையும்

ஒரு சமூகத்தின் ஜீவ நாடியாகவும் , மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் இருக்க வேண்டியவர்கள் இளைஞர்கள். ஏனெனில் , இளைஞர்கள் சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி அதன் தலைமைத்துவத்தை சுமக்கப் போகின்றவர்களாக இருக்கின்றார்கள்.ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும்   பாதுகாப்பிற்கும் பயன்படுவதில்லை என்பதையும் தாண்டி ஒழுக்க சீர் கேடான குணா திசை/ செயல் பாடுகளால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை . وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا (30 ) இந்த சமுதாயத்தினர் குர்ஆனை வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள் என்று இந்த சமுதாயத்தினர் மீது மிகுந்தபாசம் கொண்ட நபி(ஸல்) அவர்களே குற்றம் சுமத்தி கூறுவார்கள் ” என்ற கீழ் தரமான அளவிற்கு முஸ்லிம்கள் குர்ஆனுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டு வாழ்ந்தால் அல்லாஹ்வின் உதவிகள் இந்தசமுதாயத்திற்கு எப்படி வரும் ? நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு : நப

நரகில் தள்ளும் நச்சு வார்த்தைகள்

இன்றைய முஸ்லிம் பெண்கள் தாம் என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுவதைப் பார்க்கலாம். அப்படி பேசக்கூடிய பேச்சுக்களில்  பல வார்த்தைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வார்த்தைகளாக இருப்பதையும் காணலாம். சில காரியங்களைச் செய்தால் அதனால் தீங்கு ஏற்ப்படும் என்றும் நம்புகின்ற னர். குறிப்பிட்ட நேரங்களில் தர்மமோ, அல்லது இரவலாக பொருளோ தந்தால் வறுமை ஏற்ப்படும் என்றும் நம்புகின்றனர். இவை சரியா என்று பார்ப்போம். இருட்டு வந்து விட்டால் இரவல் கிடையாது... அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் திடீரென்று தமக்குத் தேவைப்படும் ஒரு பொருளைக் கேட்கின்றனர். பகலில் கேட்டால் கொடுக்கும் குணமுடையவர்கள் கூட மாலை நேரத்திலோ இரவிலோ கேட்டுவிட்டால் போதும், இவளுக்குக் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லை, நேரம் காலம் தெரியாம கேக்கரா பாரு! ஊசி, தண்ணீர், பணம், கேட்டால் மாலை நேரங்களில் கொடுக்கக் கூடாதுன்னு தெரியாதா! என்று கேட்கின்றனர். இதனால் தரித்திரம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுகின்றன ர் . இரவு நேரத்தில் பணம் கொடுத்தால் நம்முடைய பரகத் (பணம்) அவங்களுக்குப் போய்விடும். அந்த நேரத்திலே தண்ணீர் கொடுத்தால் நம

ஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும்!

மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றாக வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு செல்லக்கூடிய இடங்கள் நாம் வேலை செய்யும் அலுவலகம், கடைவீதிகள், பேருந்து நிறுத்தங்கள், காய்கறிகடைள், ரயில் நிலையங்கள், திருமண மண்டபங்கள், இப்படி பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். இங்கே நம்மை போல் பலரும் வருவார்கள். இவ்வாறு கூட்டமாக சேருமிடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.       புறப்படும் போது       முதலில் வீட்டை விட்டு வெளியே போகும் போதே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து செல்ல வேண்டும். ஏனென்றால் நாம் போகும் இடங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அல்லாஹ்வை பொறுப்பாளனாக்கி செல்வதே சிறந்தாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது துஆச் செய்து செல்வார்கள்.  أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ بِسْمِ اللَّهِ رَبِّ أَعُو