இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலக்குகளின் துஆவைப் பெற….

    இறைவனி ன் படைப்புகளில் மிக அற்புதமான படைப்பு மலக்குகள் ஆவார்கள் . என்னதாம் மனிதன் சிறந்த படைப்பாக இருந்தாலும் , சிந்திக்கும் திறன் இருந்தாலும் இறைவனுக்கு மாறு செய்யும் குணம் அவனிடம் அதிகமாகவே இருக்கிறது . ஆனால் மலக்குமார்கள் இறைவனின் கட்டளையை அப்படியே பி ன்பற்றி நடப்பவர்கள் . இறைவனுக்கு மாறு செய்யவே தெரியாதவர்கள் . திருக்குர்ஆனில் இறைவன் இவர்களைப் பற்றி கூறும்போது தங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யமாட்டார்கள் என வர்ணிக்கின்றான் .   இந்த நல்லோர்கள் நமக்காக துஆ செய்தால் எப்படி இருக்கும் . மலக்குகள் நமக்காக துஆ செய்வது சாதாரண விஷயமா ? அவர்களின் துஆவில் நாம் இடம் பெறுவது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமே . ஏனெனில் இறைவன் நமக்காக துஆ செய்யுமாறு கட்டளையிட்டால் மட்டுமே மலக்குகள் துஆ செய்வார்கள் . தாமாக துஆ செய்ய மாட்டார்கள் . நாம் பிறரிடம் துஆ செய்ய வேண்டிக்கொள்கிறோம் . ஆனால் அதை விட ஒரு படி மேலாக மலக்குமார்களிடம் துஆசெய்ய சொன்னால் என்ன ? நமக்காக துஆ செய்யும்படி மலக்குமார்களிடம் நேரிடையாக க