இடுகைகள்

நவீன யுகத்தின் சவால்களும், இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வியல் தீர்வுகளும்

  ஜும்மா உரைத் தொகுப்பு உரைத் தலைப்பு: நவீன யுகத்தின் சவால்களும், இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வியல் தீர்வுகளும்  1. முகவுரை (முத்தமீது) – (5 நிமிடங்கள்) "அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா அஷ்ரஃபில் அன்பியாயி வல் முர்ஸலீன், ஸய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்." மதிப்பிற்குரிய பெரியோர்களே, என் அன்பான தற்கால வாலிப சகோதரர்களே! அல்லாஹ்வை முழுமையாக அஞ்சி, அவனது வரம்புகளைப் பேணி வாழுமாறு முதற்கண் எனக்கும் உங்களுக்கும் வஸிய்யத் செய்து கொள்கிறேன். இன்று நாம் வாழும் 2026-ஆம் ஆண்டு உலகம் எப்படிப்பட்டது? வசதிகள் அதிகம், ஆனால் நிம்மதி குறைவு. தொழில்நுட்பம் அதிகம், ஆனால் தனிமை அதிகம். எங்கு பார்த்தாலும் மன அழுத்தம் (Depression), எதிர்காலத்தைப் பற்றிய பயம் (Anxiety), குடும்ப உறவுகளில் விரிசல். "எல்லோரும் இருக்கிறார்கள், ஆனால் எனக்காக யாரும் இல்லை" என்ற ஏக்கம் இன்று பலரிடமும் உண்டு. இப்படிப்பட்ட நவீன காலத்து மனிதர்களுக்கு, மன அமைதியோடும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடும் வாழ்வது எப்படி என்பதற்கு மிகச்சிறந்த 'வாழ்க்கை வழிக...

குர்பானி (உழ்ஹிய்யா) ஏன் ?எப்படி?

  துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து , அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம் , ஆடு , மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும் . பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும் . குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் வித்தியாசங்கள் உள்ளன . குர்பானை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் . எதை வேண்டுமானாலும் குர்பான் கொடுக்கலாம் . ஆனால் , உழ்ஹிய்யாவுக்கு காலம் , நேரம் , கொடுக்கப்படும் பிராணி அனைத்துமே வரையறை செய்யப்பட்டதாகும் . • அரபி மொழியில் உழ்ஹிய்யாவின் பொருள் முற்பகலில் பலிப் பிராணியை அறுப்பது என்பதாகும் ! அல்லாஹ்விற்காக ஆடு , மாடு , ஒட்டகம் இவற்றை ஒரு குறிப்பிட்ட நாளில் அறுப்பதையே குர்பானி என்கிறோம் . இது வசதி வாய்ப்பு உள்ள ஒவ்வொரு முஸ்லீம் மீதும் குர்பானி கொடுப்பது கடமையாகும் ! وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ  بَهِیْمَةِ ...