வட்டி ஓர் மா பாவம்!
வட்டி ஓர் மா பாவம்! -ஜலீல் மதனி. வட்டி மாபெரும் குற்றம். இது சைத்தான் தீட்டிய திட்டம். இதை வாங்கியவன் அடைவான் நட்டம். இது இறைவன் போட்ட சட்டம். வட்டி என்றால் என்ன? என்பதைப்பற்றி நம்மில் அறியாதவர் யாருமில்லை. ஆனால், வட்டியைப் பற்றியும் அதன் தாக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதைப்பற்றியும் நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோமா?, என்றால் “இல்லை” என்ற பதில் தான் பலமாக எதிரொலிக்கிறது. வட்டிக்கு வாங்கி தொழில் செய்து குறுகிய காலத்தில் குபேரனாக மாற எண்ணி குழிக்குள் வீழ்ந்த யானையைப்போல், தங்களின் வாழ்வையே தொலைத்துவிட்டு திண்டாடுகின்ற எத்தனையோ மனிதர் களை நமது சமுதாயத்தில் தினம்தினம் காண முடிகிறது. நம்; ஒவ்வொருவருமே தனக்குத் தெரிந்த சம்பவம் பலதை உதாரணங்களாகக் கூறமுடியும் என்கின்ற அளவிற்கு சம்பவங்கள் மலிந்து கிட க்கின்றன. இருப்பினும் கூட நெருப்பின் பக்கம் செல்லாதே எனத் தடுத்தும் அதில் போய் வீழ்ந்து தன் உயிரையே மாய்;த்துக் கொள்ளும் புற்றீசல் போல் எத்தனையோ படிப்பினைகளையும் சம்பவங்களையும் கண்டும் கேட்டும் கூட சமுதாயத்தில் வட்டித்தொழில் புரையோடிய புற்ற...