ஆண் பெண் உரையாடல் , கலப்பு என்றால் என்ன
ஆண் பெண் உரையாடல் , கலப்பு என்றால் என்ன ?.....! அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் இருப்பதற்கு தான் இஸ்லாத்தில் தடை .மாறாக ஆண்களும் பெண்களும் உள்ள சபையில் அருகருகில் நிற்பதற்கு எந்த தடையும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்கள் இருக்கும் சபையில் ஒரு பெண் வந்து நபியிடம் 'என்னை திருமணம் முடிக்கின்றீர்களா?' என்று கேட்கும் அளவு ஆண்களும் பெண்களும் ஒன்றாக நின்றுள்ளனர்.நபியவர்கள் அந்த பெண்ணை மேலும் கீழுமாக பார்த்தார்கள். நபிகளார் அந்தப் பெண்ணிற்கு மறுமொழி கூறவில்லை. பின்பு ஸஹாபி ஒருவர் அந்த பெண்ணை தான் முடிக்க கேட்டார். பெண்கள் பள்ளிவாசலில் நபி ஸல் அவர்களிடம் நேரடியாக சென்று மார்க்கக் கேள்விகள் கேட்டனர். சில சமயங்களில் ஆண் ஸஹாபாக்களும் அங்கே இருந்தனர். Jamila bint Thabit ( சில அறிவிப்புகளில் வேறு பெயரும் வருகிறது ) நபி ஸல் முன் வந்து கணவரிடமிருந்து பிரிவை விரும்புவதாகக் கூறினார். நபி ஸல் விசாரித்து குலாவை ஏற்பாடு செய்தார்கள். (ஸஹீஹ் புகாரி) அஸ்மா பிந்த் யஸீத் (ரலி) பெண்களின் சார்பில் பேசியது Asma bint Yazid பெண்களின் பிரதிநிதியாக நபி ஸல் முன் வந்து பல கேள்விகளைக் கேட்...