இடுகைகள்

ஆளுமை (Character / True Personality)என்றால் என்ன?

 ஆளுமை (Character / True Personality)என்றால் என்ன? ஆளுமை என்பது பேப்பர் தகைமைகள் அல்ல. பட்டங்களும், பதவிகளும் அல்ல. ஒருவரின் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் சேர்க்கப்படும் அடைமொழிகள் அவரின் உண்மையான ஆளுமையை தீர்மானிப்பதில்லை. ஆளுமை என்பது அனுபவங்களால் உருவாகும் ஒரு திறமை. வாழ்க்கைப் பாடங்களால் செதுக்கப்படும் ஒரு பண்பு. காலம் கற்றுத்தரும் ஒரு முதிர்ச்சி. உண்மையான ஆளுமை என்பது… தலைக்கனம் இல்லாத தன்மை. தான் அறிந்ததை விட பிறரிடமிருந்தும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மனநிலை. தன்னை உயர்த்திக் காட்டாமல், மற்றவர்களையும் மதித்துப் பழகும் பண்பு. ஆளுமை என்பது… எல்லோரையும் மதிக்கும் மனப்பக்குவம். ஏழையா? பணக்காரரா? படித்தவரா? படிக்காதவரா? பதவியில் இருப்பவரா? சாதாரண மனிதரா? என்ற வேறுபாடுகளை பார்க்காமல் மனிதனை மனிதனாக மதிக்கும் உயர்ந்த குணம். ஆளுமை என்பது… விட்டுக்கொடுக்கத் தெரிந்த மனம். எல்லாவற்றிலும் நான் தான் வெல்ல வேண்டும் என்று நினைக்காமல், தேவையான இடத்தில் பின்வாங்கத் தெரிந்த முதிர்ச்சி. ஏனெனில் சில நேரங்களில் வெற்றி பெறுவதை விட உறவை பாதுகாப்பது பெரிய சாதனையாகும். ஆளுமை என்பது… உதவும் மன...

உறவுகளைப் பேணுவோம்.

 ஆதாரம்: "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தங்களுக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புள்ள உறவினர்களையும் (மதித்து நடந்து கொள்ளுங்கள்)." (அல்குர்ஆன் 4:1) நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்" என்று(நூல்: புகாரி) நாம் இன்று கூடியிருப்பது ஒரு திருமண விழாவில். திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணையும் நிகழ்வு மட்டுமல்ல, அதுவரை அறிமுகமில்லாத பல புதிய உறவுகளை நம் வாழ்வில் இணைக்கும் ஒரு பாலம்.  அடிநாதமான சிந்தனை: இஸ்லாம் என்பது தனி மனித மார்க்கம் அல்ல; அது சமூக மார்க்கம். சமூகத்தின் மிகச்சிறிய அலகு (Unit) குடும்பம். குடும்பத்தின் வேர் 'உறவுகள்'. வேர் அழுகினால் மரம் வீழும்; உறவுகள் முறிந்தால் சமூகம் சீரழியும். இஸ்லாத்தில்உறவுகளின் அந்தஸ்து. (இந்தப் பகுதியில் குர்ஆனின் ஆழமான கருத்துக்களை முன்வைக்க வேண்டும்) ஆதாமுக்கு அடுத்தபடியாக மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் இட்ட முதல் கட்டளை: உறவுகளைப் பேணுங்கள் என்பதுதான். உறவுகளைப் பேணுவதால் ஏற்படு...