இடுகைகள்

குர்பானி (உழ்ஹிய்யா) ஏன் ?எப்படி?

  துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து , அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம் , ஆடு , மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும் . பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும் . குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் வித்தியாசங்கள் உள்ளன . குர்பானை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் . எதை வேண்டுமானாலும் குர்பான் கொடுக்கலாம் . ஆனால் , உழ்ஹிய்யாவுக்கு காலம் , நேரம் , கொடுக்கப்படும் பிராணி அனைத்துமே வரையறை செய்யப்பட்டதாகும் . • அரபி மொழியில் உழ்ஹிய்யாவின் பொருள் முற்பகலில் பலிப் பிராணியை அறுப்பது என்பதாகும் ! அல்லாஹ்விற்காக ஆடு , மாடு , ஒட்டகம் இவற்றை ஒரு குறிப்பிட்ட நாளில் அறுப்பதையே குர்பானி என்கிறோம் . இது வசதி வாய்ப்பு உள்ள ஒவ்வொரு முஸ்லீம் மீதும் குர்பானி கொடுப்பது கடமையாகும் ! وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ  بَهِیْمَةِ ...