தூய்மையான பாவமன்னிப்பு (தவ்பா நஸூஹா)( ஓர் ஆழமான பார்வை)
தூய்மையான பாவமன்னிப்பு ( தவ்பா நஸூஹா ) ( ஓர் ஆழமான பார்வை) இஸ்லாமிய மார்க்கத்தில் ' தவ்பா '( இஸ்திஃபார் : இஸ்திஃபார் என்ற அரபி சொல்லுக்கும் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பது என்பது பொருள் ஆகும் ! ) என்பது வெறும் வார்த்தை அல்ல ; அது ஒரு மனிதன் தன் படைப்பாளனிடம் மீண்டும் திரும்பும் உன்னதமான பயணம் . " தவ்பா நஸூஹா " என்பது கறைபடியாத , உண்மையான மற்றும் தூய்மையான பாவமன்னிப்பைக் குறிக்கிறது . குர்ஆனின் பார்வையில் தூய்மையான பாவமன்னிப்பு அல்லாஹ் திருக்குர்ஆனில் நம்பிக்கையாளர்களுக்கு மிகத்தெளிவான அழைப்பை விடுக்கின்றான் : یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَی اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ " ஈமான் கொண்டவர்களே ! நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் தூய்மையான முறையில் தவ்பா செய்து ( பாவமன்னிப்பு கோரி ) மீளுங்கள் ." ( 66 : 08) இங்கு ' நஸூஹா ' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது . இதற்கு ' பழுதுபார்த்தல் ' அல்லது ' தூய்மைப்படுத்துதல் ' என்று பொருள் . ஒரு கிழிந்த ஆடையை தைத்...