இடுகைகள்

வட்டி ஓர் மா பாவம்!

 வட்டி ஓர் மா பாவம்!             -ஜலீல் மதனி. வட்டி மாபெரும் குற்றம். இது சைத்தான் தீட்டிய திட்டம். இதை வாங்கியவன் அடைவான் நட்டம். இது இறைவன் போட்ட சட்டம். வட்டி என்றால் என்ன? என்பதைப்பற்றி நம்மில் அறியாதவர் யாருமில்லை. ஆனால், வட்டியைப் பற்றியும் அதன் தாக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதைப்பற்றியும் நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோமா?, என்றால் “இல்லை” என்ற பதில் தான் பலமாக எதிரொலிக்கிறது.  வட்டிக்கு வாங்கி தொழில் செய்து குறுகிய காலத்தில் குபேரனாக மாற எண்ணி குழிக்குள் வீழ்ந்த யானையைப்போல், தங்களின் வாழ்வையே தொலைத்துவிட்டு திண்டாடுகின்ற எத்தனையோ மனிதர் களை நமது சமுதாயத்தில் தினம்தினம் காண முடிகிறது. நம்; ஒவ்வொருவருமே தனக்குத் தெரிந்த சம்பவம் பலதை உதாரணங்களாகக் கூறமுடியும் என்கின்ற அளவிற்கு சம்பவங்கள் மலிந்து கிட க்கின்றன. இருப்பினும் கூட நெருப்பின் பக்கம் செல்லாதே எனத் தடுத்தும் அதில் போய் வீழ்ந்து தன் உயிரையே மாய்;த்துக் கொள்ளும் புற்றீசல் போல் எத்தனையோ படிப்பினைகளையும் சம்பவங்களையும் கண்டும் கேட்டும் கூட சமுதாயத்தில்   வட்டித்தொழில் புரையோடிய புற்ற...

கடன் பற்றி அறிந்து கொள்ளுவோம்

• இஸ்லாத்தில் அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது! மேலும் தேவைப்படுபவருக்குக் கடன் கொடுத்து உதவுவது ஆர்வமூட்டப்பட்ட நற்செயல் ஆகும்! • அல் குர்ஆனிலே மிக பெரிய வசனம் கடனை பற்றி தான் அல்லாஹ் கூறி உள்ளான்! • கடன் என்ற மூன்று எழுத்து பலரின் வாழ்கைக்கே முற்று புள்ளியாக அமைந்து உள்ளது! அந்த அளவிற்கு கடன் தற்போது உள்ள காலத்தில் மிகவும் கொடுமையானதாக ஆகிவிட்டது! • முடிந்த அளவுக்கு கடனை வாங்கமல் இருப்பதே சிறந்தது! கடன் வாங்குவதால் நம்முடைய நிம்மதி போகும் - தூக்கம் போகும் - மன கவலை என்று நிறைய ஏற்படும்! • நிர்பந்த சூழ்நிலை அல்லது அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டும் கடனை பெறுங்கள்! • இஸ்லாத்தில் கடனை எவ்வாறு வாங்க வேண்டும் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக நமக்கு கூறி உள்ளது! கடன் பற்றி விரிவாக பார்ப்போம் : • கடன் நம்மிடம் கேட்டால் அதை பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் பின்பு கொடுக்க வேண்டும் கேட்ட உடனே கொடுக்க கூடாது அவர்கள் என்ன நோக்கத்திற்கு அதை வாங்குகிறார்கள் என்பது நமக்கு தெரியாது! • கடனை பெற கூடியவர்கள் மூன்று வகையினர்! 1) கல்வி - மருத்துவம் -...

அழைப்பாளர்களுக்கு…..

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) அழைப்பாளர்களுக்கு தஃவா பணியில் ஈடுபடுகின்றவர்கள் மீது மக்களுக்கு ஏற்படும் நல்லெண்ணம் என்பது தஃவாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்ற தாஈகளின் கருத்துக்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உங்களது தஃவா அதிகூடிய வெற்றியை வழங்குவதற்குப் பின்வரும் அடிப்படைகள் பெரிதும் உதவலாம். 1. இஹ்லாஸ்: நாம் யாரை சத்தியத்தின் பால் அழைக்கின்றோமோ அந்த மக்கள் இவர் அல்லாஹ்வுக்காகத்தான் தஃவத் செய்கின்றார் என்று உறுதியாக நம்ப வேண்டும். இவர் புகழுக்காக அல்லது உலக ஆதாயத்திற்காக தஃவா செய்கின்றார் என நினைத்தால் சொல்லும் கருத்து உண்மையாக இருந்தாலும் அதை ஏற்று செயற்படுத்த முன்வர மாட்டார்கள். சில போது கருத்தை ஏற்றவர்கள் கூட எதிர்க்கக் கூடிய நிலை ஏற்படலாம். நபிமார்கள் பலரும் மக்களுக்கு தஃவா செய்யும் போது உங்களிடத்தில் நான் கூலியை எதிர்பார்க்கவில்லை என்பதைத் திரும்பத் திரும்ப கூறியுள்ளதும் இதைத்தான் உணர்த்துகின்றது. 2. அழைக்கப்படுபவனின் நலனில் அக்கறை: நீங்கள் யாருக்கு தஃவா செய்கின்றீகளோ அவர் விடயத்தில் நீங்கள் அக்கறையுடன் இருப...

இஸ்லாமிய நாகரிகத்தில் பச்சை நிறம்"

  பச்சை நிறத்திற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வு. இஸ்லாமிய நாகரிகத்தில் பச்சை நிறம் ஒரு சாதாரண நிறமாக மட்டும் இல்லாமல், ஆழமான ஆன்மீக மற்றும் கலாசார அடையாளமாக பரவலாக காணப்படுகிறது.  பள்ளிவாசல்கள், இஸ்லாமிய நாடுகளின் தேசியக் கொடிகள், மத நூல்கள், சூபி மரபுகள் மற்றும் தர்கா கலாசாரம் ஆகிய அனைத்திலும் பச்சை நிறத்தின் அதிகமான பயன்பாடு காணப்படுகிறது. உலகில் தற்போதுள்ள 90 சதவீதமான முஸ்லீம் நாடுகள் தமது தேசிய கொடிகளில் பச்சை நிறத்தையே காட்டி வருவதால் இஸ்லாத்திற்கும் பச்சைக்கும் உரிய நேரடி நெருங்கிய தொடர்பை நீங்கள் இப்போது அறிந்திருப்பீர்கள். இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த வெளிப்பாட்டினை நாட்டார் இயல் வழக்காறுகளின் ஊடாக பக்கீர் பைத் பாவா பரம்பரைகளையும் குறித்துக் காட்டுவதற்கு இஸ்லாமிய மரபில் இந்த பச்சை நிறமே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய வெளியீடுகள் மற்றும் மத நூல்கள் பல நாடுகளில்: குர்ஆன் அட்டைகள் துஆ புத்தகங்கள் மௌலித் நூல்கள் யாஸீன் புத்தகங்கள் பச்சை நிற அட்டைகளுடன் வெளியிடப்படுகின்றன. இது கட்டாயமல்ல; ஆனால் பரவலான மரபாக உள்ளது. .பள்ளிவாசல் அலங்காரங்களில் மிஹ்ரா...

இரண்டாவது ஜமாஅத் ஓர் ஆய்வு

நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் பள்ளிவாசலில் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு அனுமதியுள்ளது என்பது மட்டுமின்றி, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியும் உள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?” என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) நூல்: திர்மிதி (204), அபூதாவூத் 487 மேற்கண்ட ஹதீஸ், ஒரு பள்ளியில் முதலில் ஜமாஅத்தாகத் தொழுகை நடத்தி முடிந்த பிறகு மீண்டும் அதே பள்ளியில் ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு மிகத் தெளிவான ஆதராமாகும். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருநாள் நபியவர்கள் எங்களுக்கு சுபுஹை தொழவைத்தார்கள். “பிறகு இன்னார் வந்துள்ளாரா?” எனக் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். இன்னார் வந்துள்ளாரா? என்று வேறொருவரைக் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்கள், “(சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களு...

திருமணம் தாண்டிய உறவு“ இஸ்லாம் கூறும் தீர்வு

 🟥“திருமணம் தாண்டிய உறவு“🟥 துரோகத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு🔥 “வயதுக்கு வந்த இருவர் விரும்பி உடலுறவு கொண்டால் குற்றமில்லை”  என்ற நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி சமூகத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது.   அதன் ஈரம் காய்வதற்குள் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது.  ஒருவர் தன் மனைவியை அந்நிய ஆணுடன் பார்த்ததாக கூறி, அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார்.  அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் ஆத்திரம் கொண்டனர். சிலர் அவரை ஆதரித்தனர். சிலர் கடுமையாக விமர்சித்தனர்.  இன்று அந்த நிகழ்வு ஒரு “விவாதக் களமாக” மாறிவிட்டது. ஆனால் அந்த சகோதரனின் மனதில் நடந்தது வேறு.  அவமானம், சந்தேகம், கோபம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் புயலாக மாறியது. அந்த புயலில்  அவர் எடுத்த சில முடிவுகள், அவருடைய எதிர்கால வாழ்விற்குச் சிறந்ததாக இல்லை. அவர் தனது மனைவியை கத்தியால் கீறிக் கிழித்து, தானும், தனது மகனும் சாகப் போவதாக  ஆற்றாமையில் அழுது கண்ணீர் வடித்து அதையும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.  “அப்பா எனக்கு பயமா இருக்கு! அப்பா எ...

மஹ்ரம் அல்லாத ஜனாஸாவை (இறந்த உடலை) பார்வையிடலாமா? |

 🕌 மஹ்ரம் அல்லாத ஜனாஸாவை (இறந்த உடலை) பார்வையிடலாமா? | இஸ்லாமிய வழிகாட்டல் 📜 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ். 🌸 நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு முக்கியமான சந்தேகம்: "இறந்த ஒருவரின் முகம் பார்க்கச் செல்லும்போது, மஹ்ரம் அல்லாத (அந்நிய) ஆண்கள் அல்லது பெண்கள் ஜனாஸாவைப் பார்க்கலாமா? மார்க்கம் இதற்கு என்ன கூறுகிறது?"🤔 இஸ்லாமிய சட்டவியல் (Feqh) மற்றும் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் இதற்கான தெளிவான விளக்கம் இதோ: 👇 1️⃣ மஹ்ரம் அல்லாத பெண்ணின் ஜனாஸாவை ஆண்கள் பார்வையிடலாமா? ❌🧔🏻 ஒரு பெண் இறந்துவிட்டால் அவளது உடலைக் குளிப்பாட்டுவதும், கபனிடுவதும் பெண்களின் பொறுப்பாகும்.  சட்டம்: கபனிடப்பட்ட பெண்ணின் முகத்தை, மஹ்ரம் அல்லாத அந்நிய ஆண்கள் பார்ப்பதை மார்க்க அறிஞர்கள் பொதுவாக வழமையாகத் தடுத்துள்ளனர் (மக்ரூஹ் அல்லது ஹராம்)❌   காரணம்: ஒரு பெண் உயிருடன் இருக்கும்போது அவளை அந்நிய ஆண்கள் எப்படிப் பார்க்கக் கூடாதோ, அதே விதியே அவள் இறந்த பின்பும் பொருந்தும். மரணித்த பிறகும் அந்தப் பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். ✨ 📌 ஹதீஸ் ஆதாரம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் க...

பொறுப்பு (பதவி)ஓர் அமானிதம்

பெரும்பாலான மக்கள் பதவியை ஒரு அதிகாரமாக கருதிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பதவி என்பது அமானிதம். அமானிதத்தை உரிய முறையில் பேணி மக்களின் நன்னம்பிக்கையைப் பெற வேண்டும். இன்னும் சொல்வதாக இருந்தால், பொறுப்புகளைப் பெறுகின்றவர்கள் புகழ், அதிகாரம், செல்வம் ஆகிய காரணங்களுக்காகவே அதற்கு ஆசைப்படுகின்றனர். இந்த மூன்று அம்சங்களும் மிகச்சரியான முறையில் பயன் படுத்தப்படுமேயானால் பொறுப்பு வகிப்பவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் இறைவனைச் சந்திப்பார்கள் பொறுப்பு எனும் அமானிதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: _قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَلَا تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةُ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا_ _‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா’’ என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள்பட்டையில் அடித்த...

கடன் : #பேண #வேண்டிய #ஒழுக்கங்களும் ##தவிர்க்க #வேண்டிய #தவறுகளும்

  தொகுப்பு  : s. யாஸிர் ஃபிர்தௌஸி , ஜம்இய்யத்துத் தஃவா, சவூதி அரேபியா -------------------------------------------------------------------------- " நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும் கட்டளையிட்டு, அநீதியையும் வரம்பு மீறுதலையும் தடுத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாருமில்லை; அவன் தீர்ப்பு வழங்கும் அரசன் என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், இறைத்தூதர் முஹம்மது (ﷺ) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவார்கள்; அவர்கள்தான் அமானிதத்தை (பொறுப்பை) நிறைவேற்றியவர்களிலும், சமுதாயத்திற்கு நற்போதனை செய்தவர்களிலும் சிறந்தவராவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ் அவர் மீதும், அவரது குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் தீர்ப்பு நாள் வரை அவரது வழியைப் பின்பற்றி நடந்தவர்கள் அனைவர் மீதும் அருளும், சாந்தியும், அபிவிருத்தியும் பொழிவானாக."              அல்லாஹ்வின் அடியார்களே! "கடன் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ஆபத்தானது. தனி மனிதர்கள் முதல் வல்லரசு ...