'ஸஹர்&இப்தார் உணவு விழா' (Sahar&iftaar Food Festivals)
وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ " உண்ணுங்கள் , பருகுங்கள் ; வீண் விரயம் செய்யாதீர்கள் " என்ற குர்ஆனின் (7:31) ரமலான் என்பது வணக்க வழிபாட்டிற்கும் , மறுமைச் சிந்தனைக்கும் உரிய மாதம் ரமலானின் நோக்கம் என்ன ? தக்வா ( இறையச்சம் ): நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் நாம் பசியோடு இருக்க வேண்டும் என்பதல்ல , மாறாக நம்மிடம் " தக்வா " எனும் இறையச்சம் மேலோங்க வேண்டும் என்பதே . குர்ஆனின் மாதம் : இது உணவுகளுக்காகக் கொண்டாடப்படும் மாதம் அல்ல ; குர்ஆன் அருளப்பட்ட மாதம் . மறுமைச் சிந்தனை : பகலில் பசியோடு இருப்பது , நரக நெருப்பிலிருந்து தப்பிக்கவும் வழிவகுக்க வேண்டும் . முதலில் நாம் நோன்பு காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மனச் சாட்சியோடு ஒரு முறை யோசித்துப் பாருங்கள். இன்று சஹர் &இப்தார் என்பது ஒரு போட்டியாய் மாறி விட்டதாக தோன்றுகின்றது 29 நோன்புகள் - 29 இப்தார் அழைப்புகள்.. "அவர்களில் இப்தார்ல நைட் சாப்பாடு பிரியாணியாம்", "அங்க இறைச்சி கறி...