திருமணம் தாண்டிய உறவு“ இஸ்லாம் கூறும் தீர்வு
🟥“திருமணம் தாண்டிய உறவு“🟥 துரோகத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு🔥 “வயதுக்கு வந்த இருவர் விரும்பி உடலுறவு கொண்டால் குற்றமில்லை” என்ற நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி சமூகத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது. அதன் ஈரம் காய்வதற்குள் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது. ஒருவர் தன் மனைவியை அந்நிய ஆணுடன் பார்த்ததாக கூறி, அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் ஆத்திரம் கொண்டனர். சிலர் அவரை ஆதரித்தனர். சிலர் கடுமையாக விமர்சித்தனர். இன்று அந்த நிகழ்வு ஒரு “விவாதக் களமாக” மாறிவிட்டது. ஆனால் அந்த சகோதரனின் மனதில் நடந்தது வேறு. அவமானம், சந்தேகம், கோபம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் புயலாக மாறியது. அந்த புயலில் அவர் எடுத்த சில முடிவுகள், அவருடைய எதிர்கால வாழ்விற்குச் சிறந்ததாக இல்லை. அவர் தனது மனைவியை கத்தியால் கீறிக் கிழித்து, தானும், தனது மகனும் சாகப் போவதாக ஆற்றாமையில் அழுது கண்ணீர் வடித்து அதையும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். “அப்பா எனக்கு பயமா இருக்கு! அப்பா எ...