கடன் : #பேண #வேண்டிய #ஒழுக்கங்களும் ##தவிர்க்க #வேண்டிய #தவறுகளும்
தொகுப்பு : s. யாஸிர் ஃபிர்தௌஸி , ஜம்இய்யத்துத் தஃவா, சவூதி அரேபியா -------------------------------------------------------------------------- " நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும் கட்டளையிட்டு, அநீதியையும் வரம்பு மீறுதலையும் தடுத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாருமில்லை; அவன் தீர்ப்பு வழங்கும் அரசன் என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், இறைத்தூதர் முஹம்மது (ﷺ) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவார்கள்; அவர்கள்தான் அமானிதத்தை (பொறுப்பை) நிறைவேற்றியவர்களிலும், சமுதாயத்திற்கு நற்போதனை செய்தவர்களிலும் சிறந்தவராவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ் அவர் மீதும், அவரது குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் தீர்ப்பு நாள் வரை அவரது வழியைப் பின்பற்றி நடந்தவர்கள் அனைவர் மீதும் அருளும், சாந்தியும், அபிவிருத்தியும் பொழிவானாக." அல்லாஹ்வின் அடியார்களே! "கடன் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ஆபத்தானது. தனி மனிதர்கள் முதல் வல்லரசு ...