இடுகைகள்

மக்தப் மதரஸாவின் வளர்ச்சி மார்க்கத்தின் எழுச்சி...!

மௌலவி ஹஸீப் பாகவி ஃபாஜில் தேவ்பந்த். நமது இந்தியத் திருநாட்டில் கடந்த நூற்றி ஐம்பது வருடங்களாக மஸ்ஜித்கள் தோறும் காலை மாலை குர்ஆன் மதராஸாக்கள் நடைபெற்று வருகின்றன. அவை மக்தப் மதரஸா என்று அழைக்கப்படுகின்றன. மக்தப் மதரஸா என்றால் ஆரம்ப பாடசாலை என்று பொருள். நமது இளவல்களுக்கு மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகள்- கட்டாய கடமைகள் -பெரும் பாவங்கள் -உபரியாக நற்செயல்கள் ஆகியவற்றை குறித்த முதன்மை அறிமுகத்தை வழங்குவது தான் மக்தப் மதரஸாவின் பிரதான நோக்கமாகும். *பொதுக் கல்வியும் சமயக் கல்வியும்*... ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் குருகுலக்கல்வி மற்றும் ஓராசிரியர் முறை நடைமுறையில் இருந்தது. பொருளாதாரத் தேவைகளுக்கு ஏதேனும் தொழில் ஒன்றை தெரிந்து கொள்வதும் குடும்ப வணிகத்தை தொடர்வதும் அப்போதைய வழமையாக இருந்தது. இன்றும் தொடரும் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய கல்விமுறை அப்போது மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கல்வி நிறுவனமயமாக்கப்பட்டது. ஒரு ஆசிரியர் முறை அகற்றப்பட்டு பல ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. ஒரு ஆசிரியர் பல மாணவர்களை உருவாக்கிய நடைமுறை மாறி பல ஆசிரியர்...

குழந்தைகள் மீது அன்பு செலுத்துதல்/செல்லம் தருவது வேறுபாடுகள்

 🔴அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.*    *அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை*.  *அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல், உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம். இவை கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும்.*   *செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது,*  சதா புகழ்வது, கைகாட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருவது, அடம்பிடித்தலை ஏற்பது, ஒழுக்கமீறலை ரசிப்பது. பெரும்பாலான பெற்றோர் முன்னதையும் பின்னதையும் குழப்பிக்கொள்கின்றனர். குழந்தைக்கு உட்காரத் தெரிந்ததும் உணவை ஊட்டிவிடுவதைப் பெற்றோர் நிறுத்திவிட வேண்டும்.  தட்டில் இருக்கும் சோற்றைச் சிந்திச் சிதறித் தனக்குத் தேவையானதைக் குழந்தையே அள்ளி உண்ணும்.  ஆனால், பாசக்காரப் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்...

ரமளானுக்குப் பின்…..

      وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌  وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ  اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌  قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا மேலும் , அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான் . யார் அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் . திண்ணமாக , அல்லாஹ் தன் பணியை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றான் . அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விதியை நிர்ணயித்து வைத்திருக்கிறான் . ( அல்குர்ஆன் : 65:3) இப்னு ரஜப் அறிவிக்கிறார்கள் : கஅப் இப்னு மாலிக் ( ரலி ) அவர்கள் கூறினார்கள் , “ ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று , ரமலான் முடிந்ததும் பாவமான கீழ்ப்படியாமைக்குத் திரும்புவேன் என்று தனக்குள் சொல்லிக் கொள்பவரின் நோன்பு நிராகரிக்கப்படுகிறது . ” * வயிறு காலியாக இருந்தபோது * * பள்ளிவாசல் நிறைந்திருந்தது * * இப்போது வயிறு நிறைந்துவிட்டது * * பள்ளிவாசல் காலியாகிவிட்டது ...* * ரமலான் மட்டும் தான் முடிந்துள்ளத...