இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்ன செய்யப்போகிறோம்...?

படம்
பையன் பல்லாவரம். பெண் பெசண்ட் நகர். வசதியான குடும்பத்துப் பெண். இருவரும் முஸ்லிம்கள். படிக்கும்போது முகிழ்த்த நட்பு காதலாகத் துளிர்த்தது. பெண் வீட்டாரிடம் இருவரும் தம் காதல் குறித்துத் தெரிவித்துத் திருமணத்திற்காக ஏங்கியுள்ளனர். ஏற்கெனவே மாப்பிள்ளை பேசி முடிவாகிவிட்டது; இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை என்று பெண் வீட்டார் கதவை அழுத்தமாகச் சாத்திவிட்டனர். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் பெரிய இடத்துப் பெண்ணின் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. இப்போது அவள் ஐந்து மாத கர்ப்பிணி. இந்நிலையில், அப்பெண் தன் பழைய காதலனுடன் பெங்களூர் ஓடிவிட்டாள். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, "நாங்கள் சேர்ந்துவாழ விரும்புகிறோம். பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம்'' என்று பையனும் பெண்ணும் மிரட்டல் விடுக்கிறார்கள். என்ன செய்யப்போகிறோம்...? பெண் படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டர் போவது வழக்கம் -இதுவும் சென்னையில்தான்- அங்கு டியூஷன் எடுத்த ஆசிரியர் இந்து. மாணவி முஸ்லிம். இருவருக்கும் இடையே ஆசிரியர் - மாணவி என்ற உறவுக்கு மேலே காதல் தலைதூக்கியது. பெண்ணின் வீட்டாருக்கு விவர

சமூக மாற்றத்தில் பள்ளிவாசலின் பங்கு

பள்ளிவாசல் என்பது ஓரிறைவனான அல்லாஹ்வைத் தொழுது வழிபடுவதற்கான இறையில்லம் ஆகும். அரபியில்  ‘ மஸ்ஜித் ’  என்பர். இதற்கு  ‘ சிரவணக்கம் ’ ( சஜ்தா) செய்யும் இடம் என்று பொருள். தமிழில்  ‘ பள்ளி ’  எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் அகராதியில் காணப்படுகின்றன. கடவுள் , வழிபாட்டுத்தலம் ,  அறச்சாலை ,  ஆசிரமம் ,  பள்ளிக்கூடம் ஆகிய பொருள்கள் அவற்றில் அடங்கும். ‘ பள்ளி ’  என்பதுடன்  ‘ வாசல் ’  என்பதையும் சேர்த்து ,  இறைவனை அடைவதற்கான நுழைவாயில் என்ற கருத்தில்  ‘ மஸ்ஜித் ’  என்பதற்கு  ‘ பள்ளிவாசல் ’  என்கிறோம். தொழுகை ,  குர்ஆன் ஓதுதல் ,  திக்ர் செய்தல் , வேண்டுதல் ,  நீதிபோதனை ஆகிய நல்லறங்கள் நடைபெறும் அறச்சாலையாகவும் பள்ளிவாசல் திகழ்கிறது. சிறுவர்கள் திருமறை ஓதவும் வழிபாடுகள் செய்யவும் கற்பிக்கின்ற சமய வகுப்பு நடப்பதால் பள்ளிவாசல் ஒரு பள்ளிக்கூடமாகவும் விளங்குகிறது. ஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் அதிகமாகத் தங்கும் இடமாக இருப்பதால்  ‘ ஆசிரமம் ’  என்ற பொருள்கூடப் பொருந்தும் என்பர் சிலர். ஆனால் ,  நம்மில் பலர் எண்ணியிருப்பதைப் போன்று ,  பள்ளிவாசல் என்பது ஐவேளைத் தொழுகைகள் நடக்கும் இடமாக மட்டும் முற்காலத

இதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும்

படம்
காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து... இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்... சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா? அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா? அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவன

நட்புடன் வாழ முத்தான மூன்று குணங்கள்

o நட்பு என்பது விட்டுக் கொடுப்பது . o நட்பு என்பது தியாகம் செய்வது . o நட்பு என்பது இனம் புரியாத அன்பு . மனிதர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் கையில் உள்ளது . அவற்றை அவன் நாடியவாறு புரட்டிப் போடுகிறான் . அவன் உள்ளங்களை ஆளும் அரசனாக இருக்கிறான் . பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய இறைவனை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை .] " மேலும் , ( முஃமின்களாகிய ) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் ( அன்பின் ) பிணைப்பை உண்டாக்கினான் ; பூமியிலுள்ள ( செல்வங்கள் ) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும் , அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய ( அன்பின் ) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான் ; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும் , ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான் ." ( அல்குர்ஆன் : 8 : 63) அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : " உறவு ( ரஹீம் ) என்பதற்கு அளவிலா அருளாலன் ( ரஹ்மான் ) இடமிருந்து வந்த ( அருட்கொடை ) கிளையாகும் . ஆகவே , இறைவன் ( உறவை நோக்கி ) " உ