இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொழுகையில் .... தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

படம்
முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும். 1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல். 2) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது. 3) தொழுகையை விட்டு விடுவோம் என்ற பயத்தில் தொழுகைக்காக விரைந்தோடுவது. 4) ருகூவுக்கு செல்லும் போது தக்பீர் அல்-இஹ்ராம் சொல்வது. 5) தொழுகைக்கான நிய்யத்தை வாயால் சொல்வது. 7) சுத்ரா (தடுப்பு) நோக்கி தொழுவதை தவிர்த்தல். 8.) ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதை வெறுப்பது. 9) தொழுகையில் மேல் நோக்கியோ, இமாமையோ, வலது, இடது புறமோ பார்ப்பது. 10) கூட்டுத் தொழுகையில் வருசைகளில் இடைவெளி விடுவது. 11) சூரதுல் பாதிஹாவை இடைவெளி விடாமல் தொடர்ந்து ஓதுவது. 12) தொழுகையின் போது ஆடிக் கொண்டிருத்தல், கைக்கடிகாரம் பார்த்தல், விரல்களை முறித்தல், பாதத்தையோ மற்ற உறுப்புகளையோ தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல். 13) இமாமுக்கு பின்னால் நின்று குர்ஆனை பார்த்துக் கொண்டு இமாம் ஒத

நீங்க தவ்ஹீதா..? சுன்னத் ஜமாத்தா..?

படம்
தவ்ஹீது (ஏகத்துவம்) என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள். அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர். அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் : 'அஹ்லுஸ் ஸுன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் ஆவர் இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வ

எந்த ஆணுக்கும் 100 சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை, அமையப் போவதுமில்லை!

படம்
எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை. 'நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை. அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்' (அல்குர்ஆன் 4:19) இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான். இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்த

அல்லாஹ்வின் நண்பர்

அல்லாஹ்வுக்கு நண்பரா? ஆச்சர்யமாக இருக்கிறதா! அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை ஒன்றுமே இல்லை. அவனுக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, மனைவியும் இல்லை, மகனும் இல்லை, மகளும் இல்லை, எந்தவித சொந்தங்களும் இல்லை. ஆனாலும், ஆம்! இப்ராஹீம் நபியை தனது நண்பராக அல்லாஹ் எடுத்துக் கொண்டான். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் 4:125 ல் சொல்கிறான். وَاتَّخَذَ اللّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً   ‘இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்’. ஏனென்றால், சொந்தம் என்பது வேறு, நண்பர் என்பது வேறு, என்பதை சொல்லவும் வேண்டுமா? சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு ஈராக் நாட்டில் உள்ள உர் என்ற ஊரில் இப்ராஹீம் நபி பிறந்தார். அவர் அன்புள்ளம் கொண்டவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், கலப்பற்ற நம்பிக்கை கொண்டவராகவும் திகழ்ந்தார். அவர் சிறுவராக இருக்கும் பொழுதே அல்லாஹ் அவருக்கு அறிவு ஞானத்தை வழங்கி இருந்தான். இப்ராஹீமை அல்லாஹ் மிகவும் விரும்பினான், அதனால் அவரை தனது நண்பராக ஆக்கிக் கொண்டான். ஒருநாள் அவர் உண்மை இறைவனை தெரிந்து கொள்ள விரும்பினார். இரவில் மின்னும் ஒரு நட்சத்திரத்தை கண்ட போது,

பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்!

ஒரு பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்! கணவன் செய்யும் சிறு தவறுகளையும் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு தண்டோராப் போடுவதால் தனக்கும் கேவலம்; தன் குடும்பத்துக்கும் கேவலம் என்பதை சில பெண்கள் உணர்வதில்லை. உலகில் எல்லாக் கணவனும் உத்தமன் என்று இருக்க மாட்டான்! பித்தன் இருப்பான்! பித்தலாட்டக்காரன் இருப்பான்! குடிகாரன் இருப்பான் கூத்துக்காரன்கூட இருப்பான். அவனைக் குழந்தைப் போல் எண்ணிக்கொண்டு செய்யும் தவறுகளைப் பொறுத்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து - கடிக்க வேண்டிய நேரத்தில் கடித்து வைத்தால் ஒரு நாள் இல்லை... மறுநாள் அவன் நிச்சயம் திருந்துவான். "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?" என்பது போல அன்பையும், பண்பையும், பாசத்தையும் காட்டி கல்மனதுக் கணவனையும் கனிய வைக்கலாம்! இரும்பான இதயத்தையும் உருக வைக்கலாம். ஒரு குடும்பத்தில் வளர்ந்துவிட்ட வாலிபனுக்குப் பெண் பார்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு வந்துவிட்டது. ஆனால், "பையன் பெயர் சொல்லி" பெண் கேட்கும் அளவுக்கு மகனுக்கு நல்ல பெயர் இல்லை என்பதை உணர்ந்து இருந்தார்கள். சொல்லி வைத்த இடங்களில் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. தெரியாதவ

பெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ''ஜமீலா''க்கள்

மவ்லவி S.H.முஹம்மது இஸ்மாயீல் ஸலஃபி [ ஜமீலா எனும் பெயர் கொண்ட இந்த இரு பெண்களின் இயல்புகளும், குணங்களும்  உலக அழிவு வரை நிகழும் பெண்களுக்குத் தேவையான  ''இல்லற சட்டங்கள் இரண்டை''  வழங்கி விட்டன.  இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை ஊணப்படுத்தாது எவ்வளவு அழுத்தங்கொடுத்து அக்கரை செலுத்துகின்றது என்பதற்கு இவர்களின் தொடர்பாக இறங்கிய இறைவசனங்கள் சான்றாக அமைந்துவிட்டன. இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை என்று வாய்க்கிழிய கூக்குறலிடுபவர்கள் இந்த இரு பெண்களின் சம்பவங்களை அறிந்திருப்பார்களேயானால் ஊமையாகிப்போய் நிற்பார்கள்.  இதற்கு ஈடான  பெண் சுதந்திரத்தை  இன்றைக்கும் எந்த மேற்கத்திய நாடுகளில் கூட காணமுடியாது. அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குறியவன் வேறு எவருமில்லை அல்லாஹ்வைத் தவிர.]  பெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ''ஜமீலா''க்கள் "ஜமீலா" என்றால் அழகானவள் என்பது அர்த்தமாகும். இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு ஜமீலாக்களின் இல்லற வாழ்வு தொடர்பாக அருள்மறை வசனங்கள் இறக்கப்பட்டன. அவை இரண்டும் பெண்களின் உணர்வுகளுக்கு இஸ்