வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
மௌலவி , அ . முஹம்மத கான் பாகவி செ ன்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படுகின்றன . இவற்றில் 2013 ஆகஸ்டுவரை 15,324 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன . விவாகரத்து , ஜீவனாம்சம் , குழந்தைகள்மீதான உரிமை , மீண்டும் சேர்ந்துவாழ விருப்பம் ஆகிய வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன . இதில் நம்மை வதைக்கின்ற வேதனை என்னவென்றால் , 2003 ஆம் ஆண்டு விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 2,570 ஆக இருந்தது . இது 2012 ஆம் ஆண்டு 4,770 ஆக உயர்ந்தது . 2013 செப்டம்பர்வரை மட்டுமே 3,500 ஆக இவ்வழக்குகள் உள்ளன . இவ்வாறு இரு மடங்காக , மும்மடங்காக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது . இந்த எண்ணிக்கை நீதிமன்றத்திற்கு வந்த வழக்குகள் மட்டுமே ! நீதிமன்றம்வரை வராமல் சுமுகமாக முடிக்கப்படும் விவாகரத்துகள் , பஞ்சாயத்துகளில் , அல்லது ஜமாஅத்துகளில் நடக்கும் விவாகரத்துகள் முதலானவற்றைக் கணக்கிட்டால் , பல்லாயிரக்கணக்கில் இருக்