இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரலாறு படைத்த மிஃராஜ்

அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை கொண்டுவருகிறான். உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான். அந்த வரிசையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஹிஜ்ரத்திற்குப் பின் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தை ஏற்ப்படுத்தினான். இந்த பயணம் நபியவர்களுக்கு பாரிய திருப்பு முனையாக அமைந்தது. மக்களுக்கு மத்தியில் வரலாறு படைத்தது. மிஃரஜூம் அதன் நோக்கமும் மிஃராஜின் நோக்கத்தை அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான். ‘தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, மஸ்ஜிதுல் அக்ஸா வரை பயணம் செய்வித்த அல்லாஹ் தூய்மையானவன். அது எத்தகைய இடம் என்றால், அதனை சூழாக பரகத்தை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் நமது அத்தாட்சிகளை காட்டுவதற்காக (அவரை அழைத்துச் சென்றோம்) அல்லாஹ் செவியேற்கக் கூடியவனாகவும், பார்க்க கூடியவனாகவும் இருக்கிறான். (17- 01) இந்த வசனத்தின் மூலம் தனது அத்தாட்சிகளை நபியவர்களுக்கு காட்டுவதற்காக அழைத்து செல்லப் ப

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

எமது உடன்பிறப்புக்களான பர்மிய முஸ்லிம்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லொனாத் துயரத்துக்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அங்கு இடம்பெற்று வரும், உள்ளத்தைப் பிழியும் நிகழ்வுகளைக் காணும் போது, மனித நேயம் கொண்ட எந்த மனிதனுக்கும் கண்ணில் கண்ணீர் கசியாமல் இருக்காது. எமக்கிருக்கும் இந்த சகோதரத்துவ உணர்வு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு ஏன் இருப்பதில்லை...? என்று வியப்பாக இருக்கிறது. இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பது தான் என்பதில் வியப்பேதுமில்லை. அவர்களைக் கடிந்து கொள்வதால் பயனேதும் ஏற்படப் போவதுமில்லை. எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது நல்லது தான். ஆயினும், இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், அரபு முஸ்லிம் நாட்டுத் தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில், அந்தந்த நாடுகளிலும் அந்நாடுகளின் தூதுவராலயங்களுக்கு முன்னாலும் இடம்பெற்றால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். செயலற்ற து'ஆக்களும், வெறும் ஒப்பாரிகளும் எதுவும் செய்துவிடப் போவதில்லை. இதனைத் தடுக்கக் கூடிய சக்தியை அல்லாஹ் எமக்கு அளித்துள்ளான். அதனைப் பயன்ப

வியக்க வைக்கும் தகவல்கள்

ஜம் ஜம் –   அதிசயம் மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன   என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது . தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும் . மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம் . மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும் . இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜரா ( அலை )   அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார் . குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார் , அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும் . இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது . கிணற்றின் அளவு இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும் . இ