இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹஜ் செய்வோருக்காக

ஹஜ் செய்வோருக்காக! மக்களுக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்காக) உருவாக்கப்பட்ட இறை இல்லங்களில் முதன்மையானது நிச்சயமாக “பக்காவில்” (மக்காவில்) உள்ளது தான். அது மகத்துவமிக்கதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழி காட்டியாகவும் உள்ளது. அதில் தெளிவான அத்தாட்சிகளும் உள்ளன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற (மகாமே இப்றாஹீம் என்ற) இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அல்லாஹ்வின் அபயம் பெற்று) அச்சமற்றவராகிறார், (எனவெ) எவர்கள் அங்கு பயணம் செய்ய வசதியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது , அல்லாஹுவுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். யாரேனும் (இதனை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹுக்கு ஒன்றும் குறையில்லை ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் படைப்பினங்களின் தேவையற்றவன். (அல்குர்ஆன் 3 : 96,97) நபி(ஸல்) அவர்கள் : “ஓ மக்களே! உங்கள் மீது ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது” என்றார்கள். உடனே நபித்தோழர் அக்ராபின் ஹாபிஸ்(ரழி) எழுந்து : யா ரசூலுல்லாஹ்! ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? என வினவினார்கள். அதற்கு அருமை நாயகம்(ஸல்) கூறினார்கள்: “ஆமாம்” என நான் கூறி விட்டால் அது உங்கள் மீது (வாஜிப்) கடமையாகிவிடும். அது(வாஜிப