பேஷாவர் தாக்குதல் சொல்லி விட்டு செல்லும் அரசியல் -
திருமுருகன் காந்தியின் கட்டூரை !! தன் குழந்தையை இழக்கும் சோகம் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. தாலிபன்களின் இந்த காட்டுமிராண்டித்தனம். இந்த நிகழ்வு, ‘ஜார்ஜ் புஷ்’ போட்ட யூரேனிய குண்டுகளால் புற்றுநோயால் வாடும் ஈராக்கிய குழ்ந்தைகளுக்கு மருந்துகளை அனுப்பாமல் உலக அளவில் ஈராக்கிற்கு தடை கொண்டு வந்து பில்கிளிண்டன் பல்லாயிரம் குழந்தைகளை கொலை செய்ய வைத்ததையும் நினைவில் கொள்ளச் செய்கிறது. ஈழத்தில் இதே போன்று மருந்துகளை அனுப்பாமல் குழ்ந்தைகள் மீது கொலை செய்ய அனைத்து உதவிகளையும் நேரடியாக செய்த இந்திய அரசு மீதும், மறைமுக உதவி செய்த மேற்குலகம்-ஐ.நா- பாகிஸ்தான் - சீனா மீதும் நமக்கு வருகிறது. 30,000 தமிழ்க் குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர். பெஷாவர் நிகழ்வு சில முக்கிய செய்திகளை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. அதை விவாதிப்பது அவசியம். ஏனெனில் இது நாளை நமக்கும் நிகழலாம். விடுதலைப் போராட்டம் என்பது ஒடுக்கப்படுபவனுக்கும், சுரண்டப்படுபவனுக்கும், ஆக்கிரமிக்கப்படுபவனுக்குமான ஒன்று. அதை மதம் பெற்றுத் தராது. ஏனென்றால் மதத்தின் பெயரால்-இனத்தின் பெயரால் இவை அனைத்தும் நிகழ்கிறது. அடிப்படைவாதத்தினை வைத்து ...