இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2019 முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

 تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ وَتُعِزُّ مَنْ تَشَآء وَتُذِلُّ مَنْ تَشَآءُ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ‏ُ  ( நபியே!) நீர் கூறுவீராக: “ அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய் ; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய் ; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய் ; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய் ; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய். ” 3:26 காலங்காலமாக முஸ்லிம் சமுதயாய மக்கள் வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு , கல்வி , அரசியல் போன்ற அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றார்கள். நமது முஸ்லிம் சமுதயாயமும் இந்த அரசியல்வாதிகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த சமுதாயத்திற்கு கிடைத்ததென்னவோ நளினமான வார்த்தைகளும் ஏமாற்றமும் தான். நம்மிடையே காணப்படு

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள்

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌   وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا   وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ   ۙ‏ " வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான் ; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான் ; ஆனால் அல்லாஹ்வோ , தன்னிடமிருந்து மன்னிப்பும் , ( அருளும் , பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான் ; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் ; யாவற்றையும் நன்கறிபவன்."     ( அல்குர்ஆன் : 2:268) ஒரு இளம்பெண் , தனக்குத் திருமணம் நடக்காது என்று எண்ணுகிறாள் . ஒரு மனைவி , தனக்கு குழந்தை பிறக்காது என்று எண்ணுகிறாள் . ஒரு இளைஞன் , தனக்கு ஏழ்மை ஏற்பட்டு விடும் ; தன் வேலை பறிபோகும் என்று எண்ணுகிறான் . ஒரு மாணவன் , பரீட்சையில் தான் தோல்வியடைந்து விடுவேன் என்று எண்ணுகிறான் . இந்த எண்ணங்கள் அனைத்தும் ஷைத்தானிடமிருந்து தூண்டப்படுபவை . நாம் அல்லாஹ்வின் மீது பற்றுதலும் , அவன் மீது நல்லெண்ணமும