இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வட்டி ஓர் மா பாவம்!

 வட்டி ஓர் மா பாவம்!             -ஜலீல் மதனி. வட்டி மாபெரும் குற்றம். இது சைத்தான் தீட்டிய திட்டம். இதை வாங்கியவன் அடைவான் நட்டம். இது இறைவன் போட்ட சட்டம். வட்டி என்றால் என்ன? என்பதைப்பற்றி நம்மில் அறியாதவர் யாருமில்லை. ஆனால், வட்டியைப் பற்றியும் அதன் தாக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதைப்பற்றியும் நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோமா?, என்றால் “இல்லை” என்ற பதில் தான் பலமாக எதிரொலிக்கிறது.  வட்டிக்கு வாங்கி தொழில் செய்து குறுகிய காலத்தில் குபேரனாக மாற எண்ணி குழிக்குள் வீழ்ந்த யானையைப்போல், தங்களின் வாழ்வையே தொலைத்துவிட்டு திண்டாடுகின்ற எத்தனையோ மனிதர் களை நமது சமுதாயத்தில் தினம்தினம் காண முடிகிறது. நம்; ஒவ்வொருவருமே தனக்குத் தெரிந்த சம்பவம் பலதை உதாரணங்களாகக் கூறமுடியும் என்கின்ற அளவிற்கு சம்பவங்கள் மலிந்து கிட க்கின்றன. இருப்பினும் கூட நெருப்பின் பக்கம் செல்லாதே எனத் தடுத்தும் அதில் போய் வீழ்ந்து தன் உயிரையே மாய்;த்துக் கொள்ளும் புற்றீசல் போல் எத்தனையோ படிப்பினைகளையும் சம்பவங்களையும் கண்டும் கேட்டும் கூட சமுதாயத்தில்   வட்டித்தொழில் புரையோடிய புற்ற...

கடன் பற்றி அறிந்து கொள்ளுவோம்

• இஸ்லாத்தில் அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது! மேலும் தேவைப்படுபவருக்குக் கடன் கொடுத்து உதவுவது ஆர்வமூட்டப்பட்ட நற்செயல் ஆகும்! • அல் குர்ஆனிலே மிக பெரிய வசனம் கடனை பற்றி தான் அல்லாஹ் கூறி உள்ளான்! • கடன் என்ற மூன்று எழுத்து பலரின் வாழ்கைக்கே முற்று புள்ளியாக அமைந்து உள்ளது! அந்த அளவிற்கு கடன் தற்போது உள்ள காலத்தில் மிகவும் கொடுமையானதாக ஆகிவிட்டது! • முடிந்த அளவுக்கு கடனை வாங்கமல் இருப்பதே சிறந்தது! கடன் வாங்குவதால் நம்முடைய நிம்மதி போகும் - தூக்கம் போகும் - மன கவலை என்று நிறைய ஏற்படும்! • நிர்பந்த சூழ்நிலை அல்லது அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டும் கடனை பெறுங்கள்! • இஸ்லாத்தில் கடனை எவ்வாறு வாங்க வேண்டும் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக நமக்கு கூறி உள்ளது! கடன் பற்றி விரிவாக பார்ப்போம் : • கடன் நம்மிடம் கேட்டால் அதை பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் பின்பு கொடுக்க வேண்டும் கேட்ட உடனே கொடுக்க கூடாது அவர்கள் என்ன நோக்கத்திற்கு அதை வாங்குகிறார்கள் என்பது நமக்கு தெரியாது! • கடனை பெற கூடியவர்கள் மூன்று வகையினர்! 1) கல்வி - மருத்துவம் -...

அழைப்பாளர்களுக்கு…..

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) அழைப்பாளர்களுக்கு தஃவா பணியில் ஈடுபடுகின்றவர்கள் மீது மக்களுக்கு ஏற்படும் நல்லெண்ணம் என்பது தஃவாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்ற தாஈகளின் கருத்துக்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உங்களது தஃவா அதிகூடிய வெற்றியை வழங்குவதற்குப் பின்வரும் அடிப்படைகள் பெரிதும் உதவலாம். 1. இஹ்லாஸ்: நாம் யாரை சத்தியத்தின் பால் அழைக்கின்றோமோ அந்த மக்கள் இவர் அல்லாஹ்வுக்காகத்தான் தஃவத் செய்கின்றார் என்று உறுதியாக நம்ப வேண்டும். இவர் புகழுக்காக அல்லது உலக ஆதாயத்திற்காக தஃவா செய்கின்றார் என நினைத்தால் சொல்லும் கருத்து உண்மையாக இருந்தாலும் அதை ஏற்று செயற்படுத்த முன்வர மாட்டார்கள். சில போது கருத்தை ஏற்றவர்கள் கூட எதிர்க்கக் கூடிய நிலை ஏற்படலாம். நபிமார்கள் பலரும் மக்களுக்கு தஃவா செய்யும் போது உங்களிடத்தில் நான் கூலியை எதிர்பார்க்கவில்லை என்பதைத் திரும்பத் திரும்ப கூறியுள்ளதும் இதைத்தான் உணர்த்துகின்றது. 2. அழைக்கப்படுபவனின் நலனில் அக்கறை: நீங்கள் யாருக்கு தஃவா செய்கின்றீகளோ அவர் விடயத்தில் நீங்கள் அக்கறையுடன் இருப...