தவ்பா (பாவமன்னிப்பு) ஏன் ? எப்படி?
தவ்பா என்றால் இறைவன் பக்கம் மீள்வது என்பது பொருள் ஆகும்! மனிதன் பலகீனமானவனாக படைக்கப்பட்டு உள்ளான் அதனால் சில நேரங்களில் அவன் தெரிந்து அல்லது தெரியாமல் பாவம் செய்து விடுவான்! அதனால் தான் அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்! இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான்! சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (கியாமத் நாள்) வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான்!(நூல் : முஸ்லிம் : 5324) கியாமத் நாள் வரை அல்லாஹ் நம்முடைய சிறிய பெரிய பாவங்களை மன்னிக்க தயராக உள்ளான் நம்மில் எத்தனை பேர் தவ்பா செய்ய தயாராக உள்ளோம்? ஏதேனும் ஒரு பாவம் செய்து விட்டால் உள்ளத்தில் அல்லாஹ்வை பற்றி பயம் ஏற்படுவது பாவம் செய்து விட்டோம் அதற்கு தவ்பா செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஏற்படுவது அல்லாஹ் நம்மை மன்னிக்க தயாராக உள்ளான...