இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

                    
இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)
இந்திய விடுதலைக்காக வித்திட்ட முதல் போர் சிப்பாய் கழகம், இதில் 90%பங்கேற்றவர்கள் முஸ்லிம்கள் ,80 % கொல்லபட்டவர்கள் முஸ்லிம்கள்,
யாருக்காவது இது தெரியுமா? இந்த சிப்பாய் கழகத்தின் படை தளபதி அஹமதுல்லாஹ் ஷாஹ், ஆனால் மங்கள் பாண்டெய் வை பற்றி பேசுபவர்கள் உண்டு,
இது பச்சை துரோகம் இல்லையா?
ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கியவர். இன்றைய ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந்தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகள் ……
1.குஞ்சாலி மரைக்காயர்கள்
போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறையாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர்களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டிலேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே. 

2.சிராஜுத் தௌலா
17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.
3.மருதநாயகம்
பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத்தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத்துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கியதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
4.ஹைதர் அலி
17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.
5.திப்பு சுல்தான்   'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தியாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.
ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர்களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.
திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806-ஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார்கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.
6.இரண்டாம் பகதூர்ஷா      1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர். இறுதியில் புரட்சி ஒடுக்கப்பட்டு மன்னர் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். பர்மாவின் ரங்கூன் சிறையில் மனைவி ஜீனத் மஹலுடன் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார். நேதாஜி அவர்கள் பர்மா வந்ததும், பேரரசர் பகதூர்ஷாவின் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் பர்மா சென்றபோது இவரது கல்லறைக்கு சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.

7.பக்ஷீஸ் அலி, குலாம் கவுஸ்கான்
ஜான்சி ராணி லெட்சுமிபாய் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். இன்றைய உ.பி. மற்றும் ம.பி. மாநிலங்களின் சில பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது. இவரது படைத் தளபதி காஸாகான் என்பவர்தான் ஆங்கிலேயர்களை வீழ்த்தி கோட்டையைக் கைப்பற்றினார். ஜான்சி ராணியை ஆங்கிலேய தளபதி கேப்டன் கென் என்பவன் கொல்ல முயன்றபோது, அவனை வீழ்த்தி ஜான்சி ராணியைக் காப்பாற்றியவர் பக்ஷீஸ் அலி என்பவராவார். ஜான்சி ராணியை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, அவர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து தன்னுயிரை ஈத்தவர் குலாம் கவுஸ்கான் என்பவராவார்.
8.முதல் இந்திய இடைக்கால அரசு முதல் பிரதமராக பரக்கத்துல்லாஹ் உள்துறை அமைச்சர் உபைதுல்லாஹ்
1915ல் ஆப்கானிஸ்தானில் ஆங்கிலேயப் படையை முஸ்லிம்கள் தோற்கடித்தனர். ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு வெளியே இந்தியாவுக்கான முதல் இந்திய சுதந்திர அரசை தற்காலிகமாக அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான். முதல் பிரதமராக இருந்தவர் பரக்கத்துல்லாஹ், உள்துறை அமைச்சராக இருந்தவர் உபைதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9.இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் பத்ருதீன் தையாப்ஜி
இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் பத்ருதீன் தையாப்ஜி. இவர் 1902ல் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் மதிக்கும் பால கங்காதர திலகரை விடுதலை செய்தவர். இவரது மனைவி பீபி ரஹ்மத்-உன்-நபா என்பவர் இந்திய தேசிய மகளிர் சங்கத்தை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் உருவான முதல் மகளிர் மேம்பாட்டுக்கான அமைப்பாகும். பத்ருதீன் தயாப்ஜியை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒரு தெருக் கோடிக்கு கூட அவர் பெயர் சூட்டப்பட வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
10.காங்கிரஸில் முஸ்லிம்கள் அபுல்கலாம் ஆசாத். முஹம்மது அலி ஜின்னா
காங்கிரஸின் முதல் தலைவராக சைமன் என்ற ஆங்கிலேயர் இருந்தார். ஆங்கிலேயர்களில் சில நல்லவர்கள் தான் காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். இரண்டாவது தலைவராக ரஹ்மத்துல்லாஹ் சயானி என்பவரும், மூன்றாவது தலைவராக பத்ருதீன் தையாப்ஜியும் பணியாற்றினார்கள். அப்போது காந்தி இந்தியாவுக்கே வரவில்லை, அவர் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி 1915-ல்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார். 1915ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மௌலானா முகம்மது அலி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அவர்தான் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.      1935ல் காங்கிரஸின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 'அல்லிஹிலால்' என்ற இதழ் மூலம் முஸ்லிம்களிடம் விடுதலைத் தீயை மூட்டினார். முஹம்மது அலி ஜின்னாவும் ஒருமுறை காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
11.முஸ்லிம் பெண்கள்    இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்பு வின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
12.அலி சகோதரர்கள்     கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப்படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.
13.ஆசிப் அலி   மாவீரன் பகத்சிங்கிற்கு, காந்தி போன்றோர் 'தண்டனை தரவேண்டும்' என போலிக் கொள்கை பேசியபோது, பகத்சிங்கின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர்கள் வாதாடினர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் ஆசிப் அலி என்பவராவார். இவரை ஆங்கில அரசு பல்வேறு காலக்கட்டங்களில் 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.


14.முஸ்லிம் வள்ளல்கள்   இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.2 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார். கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்த வர் அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்
15.மதரஸாக்களின் சுதந்திர வேட்கை   சுதேசி இயக்கம் நடந்தபோது அந்நியப் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். கதர் ஆடைகளையே அணிந்தனர். கதர் ஆடை உடுத்திய மணமக்களின் திருமணங்களுக்கு மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் வருகை தந்தனர். முஸ்லிம்கள் ஆங்கிலேய தயாரிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தினர். வேலூரில் மவ்லவி கலீலுர் ரஹ்மான் தலைமையில் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வளாகத்தில் அந்நிய துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மதரஸாக்களிலும் சுதந்திர வேட்கை வீறிட்டு பரவியது.
.ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லிம்கள்   காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது நாடெங்கும் முஸ்லிம்கள் களத்தில் குதித்தனர். 1920ல் காயிதே மில்லத் போன்றோர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலக் கல்விக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளை களை அனுப்பாமல் ''ஆங்கிலம் படிப்பது ஹராம்'' என அறிஞர்கள் ஃபத்வா வழங்கினர்.
ஜாலியன் வாலாபாக்   இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக்களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.

16.வள்ளல் ஜமால் முஹம்மது  
காந்தி அவர்கள் தமிழகம் வருகை தந்து விடுதலைப் போராட்டத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் நிதி சேர்க்க முயன்றார். அப்போது வெற்றுக் காசோலையை காந்தியிடம் கொடுத்து நீங்கள் விரும்பும் தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என காந்திக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவர் ஜமால் முஹம்மது. அவரது பெயரால் தான் இன்று திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி விளங்குகிறது.  காந்தியின் கதர் துணி பிரச்சாரத்திற்கு வலுவூட்ட காஜா மியான் ராவுத்தர் 50 ஆயிரம் ரூபாயில் கதர் நெசவு ஆலையை நிறுவினார். அவரது பெயர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது
17. கேரள மாப்பிள்ளைமார்கள்  …1921ல் கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல். அந்தப் புரட்சியால் ஆங்கிலேயப் படைகள் சிதறி தெறித்து புறமுதுகிட்டனர். அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டு மாப்பிள்ளைமார்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் சன்னல்கள் இல்லாத கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப் பட்டனர். கோவை ரயில் நிலையம் வந்ததும், கூட்ஸ் வண்டி திறக்கப்பட்டது. அதில் மூச்சுத் திணறி 65 முஸ்லிம் வீரர்கள் தம் இன்னுயிர் நீத்தனர். அவர்களது ஜனாஸாக்கள் கோவை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டன. இப்போதும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தால் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கும். அங்கிருக்கும் அம்மண்ணறைகள் ஒன்றும் அவர்களின் தியாகத்தை சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.
தொகுப்பு: எம். தமிமுன் அன்சாரி, ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ்  நன்றி: தமுமுகவின் அதிகாரபூர்வ இணையதளம்
………………………………………………………………………………………………………
இந்திய விடுதலைக்காக போராடியவர்கள்...  மறைக்கபட்ட.. மறுக்கபட்ட... உன்மை....
                                    தெரிந்தவை சில தெரியாதவை பல...
தொகுப்பு:p.j face book..
முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டோம், நாமே இந்த நாட்டை நிர்வாகம் செய்தோம் நாமே இழந்தோம் அதர்க்காக நாமே போரடினோம் ,வென்றோம்
ஆனால் போரடிய பெயர் வேரொருவனுக்கா?
1. வரலாற்று நாயகன் திப்பு சுல்த்தான்,போர்கள் மற்றும் நவீன ஆயுதங்களால் வெள்ளையர்களை நிலைகுழைத்து வெருண்டோட வைத்தவர் ஆனால் இன்று அவரை பற்றி யாராவது பேசினோமா இவர் தான் பாடு பட்டார் என்று..?
2. இந்திய விடுதலைக்காக வித்திட்ட முதல் போர் சிப்பாய் கழகம், இதில் 90% பங்கேற்றவர்கள் முஸ்லிம்கள் ,80 % கொல்லபட்டவர்கள் முஸ்லிம்கள்,யாருக்காவது இது தெரியுமா? இந்த சிப்பாய் கழகத்தின் படை தளபதி அஹமதுல்லாஹ் ஷாஹ், ஆனால் மங்கள் பாண்டெய் வை பற்றி பேசுபவர்கள் உண்டு, இது பச்சை துரோகம் இல்லையா?
3.முஸ்லிம் ஆட்சியாளர்கள் மார்க்க கடமை என்று ஃபத்வா கொடுத்தார்கள் ஆங்கிலேய படிப்பை துரக்க வேண்டும், அவர்களின் ஆடையை அனிய கூடாது என்று ! இது போன்று வேரு மதத்தவர்களில் எவேரேனும் உண்டா? இதனால் தான் இன்று கல்வியில் பின் தங்கியிருக்கிறது முஸ்லிம் சமுதாயம்!
4.முஸ்லிம் மன்னர்கள் பல நாடுகலாக பிரிந்து கிடந்த மாநிலங்கள், சிற்றூர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே மாநிலமாக தமிழகம் போன்றவற்றை மாற்றினார்களே இது பங்களிப்பு இல்லையா? 800 வருடமாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தார்களே இவற்றை மாற்றி காட்டினார்களே இது பங்களிப்பு இல்லையா?
5.முஸ்லிம் மன்னர்கள் பல வழக்குகளை தீர்ப்பதர்க்காக தனித்தனியே பன்சாயாத்து,மாவட்ட ஆட்சியகம், உயர் நீதி மன்றங்கள்,மாஜிஸ்தரேட் நீதி மன்றங்கள், போன்ற அமைப்பை உருவாக்கி இன்றும் வெற்றி கானுகின்றோமே இது பங்களிப்பு இல்லையா? இன்றும் புழக்கத்தில் உள்ள வக்கீல்,மாஜிஸ்தரேட்,வாயிதா , வசூல், கஜானா ,ஆஜர், போன்ற அரபி வார்தைகளை தந்து உதவியாக இருக்கிறதே இதை மாற்ற முடிந்ததா?
6.தங்கம் ,வெள்ளி நானயங்கள் புழகத்தில் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கும் என்று ருபாய் நோட்டுகளை உபயொக படுத்த அறிமுகபடுத்தியவர் மன்னர் முஹம்மது பின் துக்லக், மேலும் இவர் தான் நிலம் சம்பந்தமான வழக்குகளை தீர்க்க முதன் முதலில் சட்டம் இயற்றியவர், இவர் தான் தொல்லியல் துரையையும் நிருவி நாட்டுக்கு பெரிதும் இதை அர்ப்பனித்து உதவியவர்,,
7.முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்க்கு பல காரணங்கள் அமைந்தாலும் மத ரீதியாக அமைந்த காரணம் ,உதுமானிய பேரரசால்(otoman empire) மத தலமையகமாக இயங்கிகொண்டிருந்த துருக்கியை ப்ரிடிஷ் அரசு கைபற்றியது,இதன் காரணமாக முஸ்லிம்கள் பொங்கி எழுந்து மேலும் இந்தியாவில் போராட்ட பங்களிப்பை வீரியப்படுத்தினர்.
8.நாட்டில் பிரச்சாரம் செய்தால் சிறை தண்டனை அமலில் இருந்த காலத்தில் யாருமே பிரச்சாரம் செய்ய முன் வராத நேரத்தில் ஜுமுஅ சொற்பொழிவை பிரச்சார களமாக மாற்றி ஆங்கிலேயர்களால் சுட்டு தள்ளப்பட்டு தமது பங்களிப்பை காற்றி தமது இன்னுயிரையும் தியாகம் செய்து ரத்த கறை இன்னும் காட்ச்சியளிக்கும் கூனி மஸ்ஜித், தேவ் பந்த், உத்திர பிரதேசம், இந்தியா... இதை போன்று இந்துக்கள் கோயில்களில் செய்தார்களா? கிருஸ்த்துவர்கள் தேவாலயங்களில் செய்தார்களா? சீக்கியர்கள் குருதுவாரங்களில் செய்தார்களா? அல்லது இந்த படுகொலை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா? ஆனால் ஜாலியன் வல்ல பாக் படுகொலை மட்டும் நியாபகம் இருக்கும் .. இது முஸ்லிம்கலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
9.இந்திய தேசிய படையை(சுதேசி இயக்கம்) நாட்டிற்க்காக போராட உருவாக்கியவர் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் வாங்க நிதி வசூல் செய்யும் பொழுது இந்தியாவில் போதிய நிதி வசூல் செய்ய முடியாததால் பர்மா சென்று உதவி நாடிய பொழுது வள்ளல் ஹபீப் அன்றய காலத்திலயே 1.5 கோடி நிதி கொடுத்து பெரிதும் உதவினார்,இவரை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா அல்லது சுதந்திர ஏட்டிலாவது குறிக்க பட்டு இருக்கிறதா? இது முஸ்லிம்களுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா?.. (குறிப்பு:- அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை 24 பைசா)...
10.அன்று நேதாஜிக்கு தெரியும் முஸ்லிம்கள் தான் நாட்டிற்க்காக தியாக செய்ய முன் வந்து தம் உயிரையும் துச்சமாக மதித்து போராடுவார்கள் என்று அதனால் தான் நேத்தாஜியின் படையில் படை அனைத்திற்க்கும் தளபதியாக இருந்தவர் ஷா நவாஸ் கான், இவரது படையில் 90% முஸ்லிம்கள் , ரத்தம் சிந்தியது முஸ்லிம்! ரத்தம் சிந்தப்படுவதற்க்கு முஸ்லிம் ! பெயர் மட்டும் முஸ்லிம்களுக்கு இல்லை! இது தான் இந்த நாட்டின் சுதந்திரமான துரோகம்!
11.சுதந்திர இந்தியாவில் சுதந்திரதுக்கு முன் பாராளமன்றத்தில் இருபது மந்த்ரிகளில் ஐந்து முஸ்லிம்கள் கரீம் கனி உட்பட ஆனால் இன்று? ஏன் இந்த துரோகம்?
12.நாட்டின் பல போராடங்களில் ஜனநாயக போராட்டம் மிகமுக்கியமானது ரயில் எரிப்பு கள்ளுக்கடை மறியல் உப்பு சத்தியாகரகம் போன்றவை, இதர்க்கு காங்கிரஸ் மேலிடம் தான் தலைமையகம் இதன் பொருப்பு அன்றய காலத்தில் சாதரணமானது அல்ல, சுதந்திரம் வாங்கும் வரை இதன் பொருப்பு வகித்து தலைமைக்கு தலைவராக இருந்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்..ஆனால் சுதந்திரம் வாங்கியதிலிருந்து இன்று வரை யாரவது தலைமை பொருப்பில் உண்டா?
13.அன்று சுதேசி கம்பெனிக்கு 19 நபர் கொண்ட கமிட்டீக்கு பொது செயளாலராய் இருந்தவர் பக்கிர் முஹம்மது ராஊத்தர், துனை செயளாலராய் இருந்தவர் நம் அணைவருக்கும் தெரிந்த கப்பலோட்டிய தமிழன் வா.ஊ..சிதம்பரம், மேலும் கப்பல் வாங்குவதர்க்காக நிதி திரட்ட பட்டது அப்பொழுது இந்தியா முழுவதும் திரட்டிய நிதி 215.13/- அனா மட்டுமே இந்த நிதி போதாது என்று இதர்க்காக பக்கிர் முஹம்மது ராஊத்தர் மட்டும் கொடுத்த பணம் அன்றே ஒரு லட்சம் ரூபாய், கப்பலின் முதலாளி பணம் தரவேண்டும் டிரைவர்(கப்பலோட்டிய தமிழன் வா.ஊ..சிதம்பரம்) பெயர் எடுக்க வேண்டும், இது தான் சுதந்திர இந்தியாவின் லட்ச்சணம்! இது மெகா துரோகம்!
14.கப்பல் ஓட்டியதர்காக கைது செய்யபட்டு விட்டார் சிதம்பரம் ,சிறை சென்றார் இவரை விடுவிப்பதர்க்காக வாய் மூச்சு கூட விட முடியாத காலத்தில் சிறைக்கு வெளியே போரட்டம் நடத்தபட்டது இதில் பங்கேற்றவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் போரட்ட களத்தில் முஹம்மது யாசீன் என்பவர் ஒருவர் மட்டுமே கொல்லபட்டார் இவரை பற்றி இந்தியாவில் யாருக்காவது இன்று தெரியுமா?
15.ஆங்கிலேயர்களுக்கு தொல்லை கொடுத்ததில் முக்க்ய பங்கு வகித்ததில் வேலு நாச்சியாரும், மருது பாண்டியரும் ஒருவர் இவர்களுக்கு பாதிக்க பட்ட காலத்தில் தங்க அடைக்களம் கொடுத்து உயிரை காத்தவர் மா மன்னர் திப்பு சுல்த்தான்,
16.காந்தியின் கள்ளுக்கடை மறியல் முக்கியமானவை, இதில் பங்கேற்றால் மூன்று வருடம் சிறை தண்டனை மட்டும் அல்ல கடுங்காவல் சிறை தண்டனை இதை தெரிந்தும் மதுரை கோரிப்பாளயத்தில் 19 பேர் முன்வந்து போராட்டம் நடத்தினர் இதில் 10 பேர் முஸ்லிம்கள் இன்றும் கோரிப்பாளயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய பட்ட ரிக்கார்ட் உல்லது..இதை கூட மறைத்து ஏன் இந்த துரொகம் முஸ்லிம் சமுதாயத்திற்க்கு?
17.அன்று நாட்டின் தேசிய கொடியை ஏந்தி சென்றால் சுடப்படுவார்கள் மேலும் 7 வருடம் சிறை தண்டனை அவ்வாரு கொடி ஏந்தி செல்வதும் சாதரண விஷயமும் அல்ல அவ்வாரு தைரியமுடன் செய்தவர் பட்டியலில் கொடி காத்த திருப்பூர் குமரன் மட்டுமே உள்ளார் , ஆனால் முஹைதீன் கான்,அப்துல் லத்தீப்,அப்துல் ரஹீம், மதுரை பாவா சாஹிபு, மதராசபட்டினம் ஷேக் சாஹிபு போன்ற பெயர்கள் மறைக்க பட்டு விட்டது ஏன் இந்த பச்சை துரோகம்?
18.போரட்ட சூட்டை தனிக்க ஆங்கிலேய அரசு புது யுக்தியை கையாண்டது அதில் ஒன்று பட்டம் அளிப்பது.. முஸ்லிம்களுக்கு சம்சுல் உலமா( உலமாக்களின் சூரியன்), கான் சாஹிப் பட்டம் மேலும் மற்ற மதத்தவர்களுக்கு ராவ் பஹதுர் ,சர் பட்டம்.. ஆணால் இந்த பட்டங்களை எல்லாம் துறந்து முழு எதிர்ப்பை காட்டியவர்கள் முஸ்லீம்கள் மட்டுமே மற்றவர்கள் இதை பயன் படுத்தி நாட்டிர்க்கு துரோகம் இழைத்து மேல் சென்று விட்டனர் இதனால் தான் இன்று படிப்பில் பின் தங்கிய நிலை நம் சமுதாயத்திற்க்கு.. (குறிப்பு: கான் சாஹிப் பட்டம் இருந்தால் இன்றய கவர்னராக இருந்தால் என்ன மதிப்பும் மரியாதையும் கிடைக்குமோ அதே மதிப்பு அந்த பட்டத்திர்க்கு உண்டு என்பதை என்னி பாருங்கள் ,இதை வைத்து இருப்பவர் அன்று எந்த காவல் நில்யதிலும் சென்று யாரை வெண்டுமானாலும் விடுவிக்கலாம், ஆங்கிலயே அரசு ஆளுனரிடம் நேரடியாக சந்தித்து பேசி தேவையானதை நிறைவேற்றலாம்)

19. பல முஸ்லிம்கள் சிறை வாசம் செண்று செத்து மடிந்தனர், ஆனால் நம் முன்னால் பிரதமர் வாஜ்பாய் போராட்ட்த்தை பார்க்க சென்ற பொழுது கைதாகி சிறைக்குள்ளே எழுதிய கடிதம் இன்றும் உள்ளது அதில் அவர் எழுதியது என்னவென்றால் " நான் ஒரு ஓரமாக என்ன நடக்கிறது என்று பார்க்க தான் சென்றிருந்தேன் இதற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"... இவ்வாரு எழுதிய இவரை நம் நாட்டின் பிரதமர் ஆக்கிவைத்தோம் , ஆனால் சிறை சென்று செத்து மடிந்த முஸ்லிம்களின் பெயரை கூட நாட்டின் ஏட்டில் எழுத மணம் வரவில்லை!
20.இன்று இருப்பது போல் அன்று இடஒதுக்கீடு என்னிக்கையை வைத்து தரவில்லை மதத்தை வைத்து தான் முஸ்லிம்களுக்கு 55% இட ஒதுக்கீடு ஆங்கிலேய அரசு கொடுத்தது இதையும் துச்சமாக மதித்து முஸ்லிம் உலமாக்களும், அரசியல் தலைவர்களும் இட ஒதுக்கீடு ஹராம் என்று ஃபத்வா கொடுத்து எதிர்ப்பை வீரியமாக்கினர் அதனால் தான் இன்றும் இட ஒதுகீட்டிற்க்கு கெஞ்சும் சமுதாயமாக நம் முஸ்லிம் சமுதாயமாக இருக்கின்றோம்! 

இந்த நிலையை உருவாக்கியவர்கள் என்ன இன்பம் கண்டுள்ளீர்கள்? இந்த பச்சை துரோகத்திர்க்கு பதில் இம்மையிலும் மருமையிலும் சொல்லியே ஆக வேண்டும் கயவர்களே! முஸ்லிம் சமுதாயமே இழந்த உரிமையை கல்வியின் மூலம் மீட்டு எடு அல்லாஹ்வின் உதவியொடு, அவன் என்றும் அநீதிக்கு எதிராய் துனை நிற்க்க மாட்டான்! அவனுக்கே அஞ்சுங்கள் அவனுக்கே சிரம் பனிய்யுங்கள்!..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001