பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!


எமது உடன்பிறப்புக்களான பர்மிய முஸ்லிம்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லொனாத் துயரத்துக்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அங்கு இடம்பெற்று வரும், உள்ளத்தைப் பிழியும் நிகழ்வுகளைக் காணும் போது, மனித நேயம் கொண்ட எந்த மனிதனுக்கும் கண்ணில் கண்ணீர் கசியாமல் இருக்காது.
எமக்கிருக்கும் இந்த சகோதரத்துவ உணர்வு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு ஏன் இருப்பதில்லை...? என்று வியப்பாக இருக்கிறது.
இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பது தான் என்பதில் வியப்பேதுமில்லை. அவர்களைக் கடிந்து கொள்வதால் பயனேதும் ஏற்படப் போவதுமில்லை.
எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது நல்லது தான். ஆயினும், இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், அரபு முஸ்லிம் நாட்டுத் தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில், அந்தந்த நாடுகளிலும் அந்நாடுகளின் தூதுவராலயங்களுக்கு முன்னாலும் இடம்பெற்றால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
செயலற்ற து'ஆக்களும், வெறும் ஒப்பாரிகளும் எதுவும் செய்துவிடப் போவதில்லை. இதனைத் தடுக்கக் கூடிய சக்தியை அல்லாஹ் எமக்கு அளித்துள்ளான். அதனைப் பயன்படுத்த வேண்டும்.
"பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது?" குர்'ஆன் 4/75.................... என்று அல்லாஹ் எம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறான் எம் சமுகத்தை கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் காவி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்போம். அன்று பலஸ்தீன் இன்று பர்மா நாளை நாமா ? இதற்கு என்ன முடிவு ? இனியும் நம் தன்மானத்தை விட்டுக்கொடுக்கலாமா? நாம் இந்த மண்ணில் வாழ வந்தவர்கள் அல்ல மரணிக்க வந்தவர்கள். மரணம் எப்போதும் நம்மை வந்து சேரும் அந்த மரணம் நம் சமுகத்துக்காக இருக்க வேண்டும் அப்போதுதான் ஜிஹாத் என்னும் புனிதமான மரணத்தை நாம் அடைய முடியும். தன் சமுகத்துக்காகவே வாழ்ந்து தன் சமுகத்துக்காகவே உயிர் நீத்த நம் பெரும் தலைவர்கள்          ..இன்று பர்மாவில் நம் இரத்தங்களை கொன்று குவிக்கும் போது நம் இரத்தம் கொதிக்கின்றது.ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனும்           மாற வேண்டிய தருணம் இது. உலக வல்லாரச நாடுகளின் கண்களுக்குள் தங்கள் விரல்களை விட்டு ஆட்டி படைத்த தலைவர்கள். ஏன் நம்மால் முடியாது???
" உன் மீது ஒருவர் அபாண்டமாக தாக்கினால் அதற்காக நீ அவன் மீது தாக்குதல் நடத்தி அதில் நீ மரணித்தால் நீ ஜிஹாத் என்ற அந்தஸ்த்தை பெறுகின்றாய் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
சில மாதங்களாகவே ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அந்நியச் சக்திகளும், உள்நாட்டு மதவெறியர்களும் முன்னெடுத்து வருகின்றனர். அதன் விளைவே இந்தத் தாக்குதல் என்றும் மேற்கண்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
பொதுவாகவே, ராக்கின் பிரதேசம் என்பது பர்மிய முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் பகுதி. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள ரொஹிங்கியா முஸ்லிம்களும் இங்கே கணிசமாகவே வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அண்டை நாடான பங்காளதேஷை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.இவர்களின் இருப்பு பெரும்பான்மை பௌத்த மக்களால் குரோதமாகவே பார்க்கப்படுகிறது.
ராக்கின் பிரதேசத்தில் தற்போது நடந்த வன்முறை கட்டுக் கடங்காமல் போகவே அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளது. வன்முறைத் தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மியான்மர் அரசை வாஷிங்டனுக்கான செய்தித் தொடர்பாளர் கேட்டுக் கொண்டிருப்பதோடு, சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மியான்மர் அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
கடந்த வாரம் பர்மிய பௌத்தர்களுக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு அவர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு, பௌத்த வன்முறையாளர்களால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பர்மிய முஸ்லிம்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.
கடந்த 8ம் தேதி ஏற்பட்ட இன மோதலுக்கு காரணம் கடந்த மாதம் பர்மாவின் மத்தியப் பகுதியிலுள்ள ராம்ரி என்ற ஊரில் பௌத்த பெண்ணொருத்தியை சமூக விரோதிகள் தூக்கிச் சென்று கற்பழித்திருக்கின்றனர். இதைச் செய்தது முஸ்லிம்கள் தான் என்கிற வதந்தி பரவியவுடன் பௌத்த இளைஞர்கள் கொந்தளித்தனர்.
ஏற்கெனவே முஸ்லிம்கள் மீது இனவெறியை உமிழ்ந்து கொண்டிருந்த அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைய... ராக்கின் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் ஏறிய பௌத்த இனவெறியர்கள் அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலில்10 பேர் உயிரிழந்தனர்.
முஸ்லிம்கள் தாக்கப்பட்ட செய்தி அறிந்த அராகன் பிரதேசமுஸ்லிம்கள், முஸ்லிம் இளைஞர்கள் மீதான தாக்குத லைக் கண்டித்து ராக்கின் மாநிலத் தலைநகரான சிட்வேயில் பேரணியாகச் சென்றனர் பேரணியைக் கலைக்க காவல்துறை முயற்சிக்க... முஸ்லிம்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே மோதல் உருவானது. இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் - 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காயமடைந்தனர்.
கடந்த சில மாதங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதல் இது என்கின்றனர் ராக்கின் பகுதி முஸ்லிம்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த இளைஞர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மற்றும் படுகொலைகளை அரங்கேற்றியிருக்கின்றனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது A.F.P செய்தி நிறுவனம்.
இந்த வன்முறைத் தாக்குதலுக்கு சரியான காரணம் தெரியவில்லை என்று A.F.P செய்தி நிறுவனம் கூறுகிறது. ஆயினும், கடந்த மாதம் நிகழ்ந்த பௌத்த பெண்ணின் கற்பழிப்பு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று ராக்கின் பிரதேச மக்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
இந்திய முஸ்லிம்கள் - பர்மிய இனக் கலாச்சார பாரம்பரியத்தோடு கலந்து போயிருப்பதால் சில பர்மியர்களும் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள்.
ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு நீண்ட கால வரலாறு உண்டு. 8 மற்றும் 9ம் நூற்றாண்டுகளில் அரேபிய கடல் பயணிகள் மற்றும் வணிகர்கள் ராக்கின் கடற்பகுதியில் குடியேறியிருக்கிறார்கள். பின்னர் பார்சிகள், முகலாயர்கள், துருக்கியர்கள், பட்டான்கள், வங்காளிகள் போன்றோர் தொடர்ந்து அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மியான்மரில் குடியேறிய சமூகமாக இருக்கிறார்கள்.
புத்த மதத்தை கேலி செய்தாலோ, புத்தப் பெண்களை அவர்களின் மதத்தின் பெயரில் கிண்டல் செய்தாலோ, மற்ற மதத்தவர் பெற்றோர் விருப்பமின்றி புத்தப் பெண்களைத் திருமணம் செய்தாலோ ... இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அமெரிக்க டாலர் 15௦௦ அபராதம்.
புத்த மதத்தைப் பின்பற்றாதவர் புத்தமதத்தைப் பின்பற்றக் கூடிய பெண்ணைத் திருமணம் புரிந்திருந்து, அவரை அவரது மதத்தை விட்டு வெளியேறுமாறு   சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.
பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.
(இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது? என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?)
1.கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட முடியாது. மதரஸா நடத்த முடியாது.
 
2.பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.
3.இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும்.
4.மியன்மாரின் இரசாயன கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.
5.கடல்களில் மீன் பிடிக்க முடியாது.
 
6. 1 ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது.
7.அவசர பந்தோபஸ்து சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் தடுத்து வைக்க முடியும்.
8.பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப கட்டுப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.
9.கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம்.
(இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)
10. இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார்.
 
பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள்.
 
(சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)
இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன.
இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள் மௌனிக்கின்றன.
மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர்.
100 பிக்குகள் கைது செய்யப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள்.
.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது. நகரம். கொலை. கொள்ளை. சித்திரவதை. கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர்.
(இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே)
(ரமலானில் நோன்பு வைத்த நிலையில் தாக்கப்பட்ட முஸ்லிம்கள்.) 
2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது. முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில் செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது” என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக பர்மாவில் உருப்பெருகிறது.
 
(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)
பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.
 
2012. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன.
 
கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?
மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.. இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை.
தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்
எனவே தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர்.
வரும் ரமலானில் இந்த மக்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். சவுதியில் ஜூம்ஆ பிரசங்கத்தில் சிரிய முஸ்லிம்களுக்காகவும் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்திக்கப்படுகிறது. உங்களின் பிரார்த்தனையில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளையும் செய்ய மறக்காதீர்கள்.
 
இன்னொருபுறம்,
 அகதிகளாக வரும் ராக்கின் பிரதேச முஸ்லிம்கள் உள்ளே நுழையாதவாறு எல்லைப் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது பங்களாதேஷ் அரசு. இதனைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் அலுவலகம் எல்லைப் பகுதியை திறக்குமாறு பங்களாதேஷ் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
மியான்மர் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த இனவெறித் தாக்குதல் குறித்த செய்திகளை பெரும்பாலான இந்திய - இலங்கை ஊட கங்கள் வெளியிடவில்லை.  இலங்கையில் நடப்பதைப் போலவே மியான்மர் பௌத்தர்களும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக கள மிறங்கியிருக்கின்றனர். ஆனால் வழக்கம்போலவே இந்த நாடுகளுடன் ராஜரீக உறவு வைத்திருக்கும் அரபு நாடுகள் தங்களின் இனம் பாதிக்கப்படுவதைப் பற்றிய அக்கறை இல்லா மல்- குறைந்தபட்சம் கலவரம் தொடர்பாக வருத்தத்தைக் கூட தெரிவிக்காமல் தங்களின் குபேர வாழ்க்கையில் லயித்திருக்கின்றன.
புறக்கணிக்கப்படும் பர்மா முஸ்லிம்கள்
47 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மியான் மரில் திபெத் மற்றும் சீனத்தை பூர்வீகமாகக் கொண்ட பௌத்த இனத்தவர்கள் மூன்றில் இரண்டு சதவிகிதம் இருக்கின்றனர். ராணுவத்திலும், அர சாங்கத்திலும் ஆதிக்கம் செலுத்தும் இனங்கள் இவைதான். .
இருப்பினும் நாட்டின் 47 மில்லியன் மக்கள் தொகையில் 3 சதவீதம் முஸ்லிம்கள் இருப்பதாகவும் வல்லுனர்கள் கருதுகின்றனர்
மியான்மர் முஸ்லிம்களில் இந்திய முஸ்லிம்கள்தான் பெரும்பான் மையாக இருக்கிறார்கள். மியான்மர் பிரிட்டீஷார் ஆதிக்கத்தில் இருந்தபோது இவர்கள் மியான்மரில் குடியேறியவர்கள்.
அராகன் மாநிலத்தில் பரவலாக இஸ்லாம் நடைமுறையிலுள்ளது.
1 மில்லியன் ரொஹிங்கியா சிறுபான்மையினர் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் மதமாக இஸ்லாம் இருக்கிறது.
.பிரிட்டீஷ் காலணி ஆதிக்கத்தின்போது 1824 முதல் 1948 காலகட்டம்வரை பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கிலிருந்து பெருமளவு மக்கள் ராக்கின் மாநிலத்தில் குடியேறியுள்ளனர்.
ராக்கின் மாநிலத்திற்கு வெளியேயும் கணிசமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
1991ல் அராகன் பிரதேச முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. அரசு துணையுடன் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் இந்த வன்முறையின்போது 2 லட்சத்து 50 ஆயிரம் முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு விரட்டப்பட்டனர்.
1994ல் மியான்மர் ராணுவத்தின் தீவிர தாக்குதலின் காரணமாக கிழக்கு மியான் மரின் சிறுபான்மை மக்களான கரென் மற்றும் மோன் இன மக்கள் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தாய்லாந்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இதே போன்று 1996ல் ஷான் மாநில மற்றும் யங்கூன் நகர முஸ்லிகள் மீது 1996ல் நடந்த தாக்குதலில் அரசின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது.
1997 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்க ளில் மாநில சட்டம் ஒழுங்கு மற்றும் மறு நிர்மாண குழுவினரால் (State Law and Order Restoration Council - SLORC) முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
அராகன் மாநில ரொஹிங்கியா முஸ்லிம்கள் கடுமையான சட்ட, பொருளாதார மற்றும் சமூக புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமையைக் கூட மறுத்திருக்கிறது அரசாங்கம்.
இதற்குக் காரணம், பிரிட்டீஷ் காலணி ஆதிக்கத்தின் துவக்கத்தில் இந்த ரொஹிங்கியா முஸ்லிம்களின் முன்னோர்கள் மியான்மரில் வசிக்கவில்லை என்றும், குடியுரிமை சட்டத்தில் இந்த அம்சம் கோரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதைக் காரணம் காட்டித்தான் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
ரொஹிங்கியா முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் மிகவும் மோசமாகவே உள்ளது மியான்மரில்.
பங்களாதேஷிலிருந்து குடி யேறிய ரொஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் மியான்மர் அரசால் கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் மேற்கொள்வதிலோ, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலோ பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மியான்மரில் வெளிநாட்டுக் காரர்கள் நடத்தப்படும் அளவிற்குக் கூட இவர்கள் நடத்தப்படுவதில்லை. இம் முஸ்லிம்களுக்கு அயல்நாட்டு பதிவு அட்டை கூட வழங்கப்படுவதில்லை.
இவர்கள் தங்களின் கிராமப் பகுதியிலி ருந்து வெளியே செல்ல வேண்டுமானால் நகராட்சி அதிகாரிகளிடத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும்.இப்படி அனுமதி கோரினாலும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு அதிகாரிகள் அனுமதி தருவதில்லை. சில நேரங்களில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி தருவது வேறு விஷயம்!
பௌத்த குடிமக்களுக்கு மட்டுமே மேல்நிலைக் கல்வியை அனுமதிக்கிறது அரசு. இதற்கு அர்த்தம் ரொஹிங்கிய முஸ்லிம்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆரம்ப கல்வியைத் தாண்டி படிக்க முடியாது என்பதே! ஏனெனில் இவர்கள் குடிமக்களாக அங்கீகரிக் கப்படவில்லை.
ரொஹிங்கியா மக்கள் சிவில் சர்வீஸ் பணியில் நியமிக்கப்படுவதில்லை. ஒரு முஸ்லிமுக்கு பயணம் செய்வதிலும் குறிப்பிட்ட வழிபாடு செய்வதிலும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன.
மியான்மரில் புதிய பள்ளிவாசல்கள் கட்டவும், ஏற்கெனவே இருக்கின்ற பள்ளிவாசல்களை விரிவுபடுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் ரொஹிங்கியா முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் மியான்மர் சட்டத்தின்படி குடிமக்களாக கருதப்படுவதில்லை. அதனால் இவர்கள் குடிமக்களாக நடத்தப்படுவதில்லை. இவர்கள் நகராட்சியின் அனுமதி பெறாமல் வெளியே செல்ல முடியாததால், மருத்துவம், வேலை வாய்ப்பு,உயர் கல்வி போன்றவற்றை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. அதிகாரப்பூர்வ அனுமதி வாங்க இவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்கிறது சர்வதேச பொதுமன்னிப்பு சபையான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்.
இதுபோன்ற தாக்குதல்கள் மியான்மர் முஸ்லிம்கள் மீது தொடரும் நிலையில், சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் மூக்கை நுழைக்கும் ஐ.நா. சபை மியான்மர் முஸ்லிம்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவதுதான் ஏன் என்று புரியவில்லை!
                     ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை
''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.'' (ஸுரா : அர்ரூம் :32)
''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.'' (அல் அன்ஆம் :159)
ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;(பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.' (புகாரி,முஸ்லிம்)
இன்றைய உலகம் பூகோள ரீதியில் இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எழுச்சியை, மறுமலர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறது. எவராலும் மறுக்கமுடியாத அளவுக்கு இவ்வெழுச்சி படியாத பாமரர், படித்த வாலிபர் உட்பட ஆண், பெண் எல்லோரையும் தழுவிய உலகின் சந்து பொந்துகளிலெல்லாம் வியாபித்து நிற்கும் ஒன்று என்ற வகையில் மிகவும் பலமிக்கதாக விளங்குகின்து.
இந்த உலகலாவிய இஸ்லாமிய எழுச்சியானது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக பல வாழும் நாடுகளிலும் கூட அதன் தாக்கத்தை ஏற்படுத்துத்தியுள்ளது. ஆயினும் இவ்வெழுச்சிக்கு பல தடைகள் உருவாகியுள்ளமை கவலைக்குறியதாகும். அவை இவ்வெழுச்சியின் விளைவுகளைத் தாமதப்படுத்தியும், இல்லாமல் செய்தும் வருகின்றன. அத்தiகைய தடைகளுள், குறிப்பிட்ட சிலரது அவசரப்போக்கு, நிதானமற்ற அணுகுமுறைகள், தீவிரப்போக்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை.
1. தீவிரமும் நிதானமின்மையும்
இங்கு நாம் 'தீவிரம்;' என்ற சொல்லை இஸ்லாத்தின் எதிரிகள் குறிக்கும் 'தீவிரவாதம்' என்ற கருத்தில் பயன்படுத்தவில்லை. அவர்களோ தூயமுஸ்லிம்கள் அனைவரையும் மதத்தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற பெயர்களில் சுட்டுகின்றனர். ஆயினும் இஸ்லாத்தின் பெயரால் சிலர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எதிரிகளின் இத்தகைய குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்துவது போல அமைவதுதான்; வேதனைக்குரியதாகும். இத்தகையவர்களின் நிதானமற்ற போக்கு இஸ்லாமிய எழுச்சியையும் அதனடியாக எழுந்துள்ள இஸ்லாமிய மறுமலர்ச்சியையும் பெரிதும் பாதித்து வருகின்றது. எனவே இத்தகையவர்கள் நிதானத்தைக் கைக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். 'அவசரப்படுதல் ஷைத்தானிலிருந்தும் உள்ளது. நிதானமும் அமைதியும் அல்லாஹ்விடமிருந்தும் உள்ளது.' என்ற நபிமொழி எமது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். (திர்மிதி)
'ஷிர்க்' போன்ற பெரும் பாவங்களை எதிர்ப்பதிலும், ஒழிக்க முற்படுவதிலும் கூட நிதானம் கடைபிடிக்கப்படல் வேண்டும்; நன்மையான விடயங்களை செய்வதில் கூட அளவு கடந்த அவசரமும், நிதானமிழந்த போக்கும் வரவேற்கத்தக்கதல்ல. இன்று உலக மட்டத்திலும் சரி எமது நாட்டு மட்டத்திலும் சரி எமது அவசரத்தின் காரணமாகவும், நிதானமிழந்த போக்குகளின் காரணமாகவும் நாம் பல கஷ்டங்களை அனுபவித்தும,; நஷ்டங்களை அடைந்தும் வருகின்றோம். சமூக மாற்றம் என்பது ஓரிரவில், ஒருபகலில் ஏற்படக்கூடியதல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது படிப்படியாக, கட்டம் கட்டமாக ஏற்படக் கூடியதாகும். அத்தகைய மாற்றம்தான் ஆரோக்கியமானதும் நிலைக்கக் கூடியதுமாகும். அவசரத்தில் தோன்றுகின்ற செயற்கையான மாற்றங்கள் போலியானவை. நிலைக்காதவை.
எமது முயற்சிகளுக்குரிய விளைவுகளை நாம் கண்டேயாக வேண்டும் என்று சிந்திப்பதும் அதற்காக எத்தகைய வழிமுறைகளையும் கையாள முயற்சிப்பதும் இஸ்லாமிய அணுகுமுறைகளல்ல. முயற்சிப்பதே எமது கடமை; விளைவுகள் அல்லாஹ்வின் கரங்களில். நாம் எமது முயற்சிகள் பற்றி விசாரிக்கப்படுவோமேயன்றி விளைவுகள் பற்றி கேட்கப்படமாட்டோம். மேலும் எமது இலக்குகள் புனிதமானவையாக இருப்பது போலவே அவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் புனிதமானவையாக அமைதல் வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டவிதியை நாம் மறந்துவிடக்கூடாது.
2. வேற்றுமைகளும் முரண்பாடுகளும்
இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு உருவாகியுள்ள மற்றுமொரு பெருந்தடை எம்மத்தியில் தோன்றியுள்ள வேற்றுமைகளும் முரண்பாடுகளுமாகும். அசத்தியக் கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட தம்மத்தியிலுள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை காண முயற்சிக்கின்ற காலமிது. தம்மத்தியில் பயங்கர முரண்பாடுகளைக் கொண்ட பல சக்திகளும் இன்று இஸ்லாம் என்ற பொது எதிரியைச் சந்திப்பதற்காக உடன்பட்டுச் செயற்படுவதைக் காண முடிகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடுபவர்களாக இருக்கின்றமை எவ்வளவு துரதிஷ்டமானது.!
இன்று நாம் எல்லா வளங்களையும், பலங்களையும் நிறைவாகப் பெற்றிருந்தும் எமது விவகாரங்களில் அடுத்தவர் தலையிடும் அளவுக்கும் தீர்மானங்கள் எடுக்கும் அளவுக்கும் உலக அரங்கில் பலயீனர்களாக மாறியுள்ளமைக்கு பிரதானமான காரணம் எமது ஐக்கியமின்மையாகும். அல்-குர்ஆன் இந்நிலைமையைப் பின்வருமாறு விளக்குகின்றுது:
''நீங்கள் உங்களுக்குள் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் வலிமை குன்றிவிடும்'' (அன்பால்: 46)
நாம் எமது முரண்பாடுகளைக் கண்டு கொள்வது போல எம் மத்தியிலுள்ள உடன்பாடுகளைக் கண்டுகொள்வததில்லை. அவற்றை நாம் காண்பதை ஷைத்தான் விரும்புகின்றானில்லை. எம் மத்தியில் பகைமையும், குரோதமும் நிலைக்க வேண்டுமென்பதுதானே அவனது விருப்பம்.
நாம் முரண்படுகின்ற விடயங்கள் ஐந்து என்றால் உடன்படுகின்ற அம்சங்கள் ஐம்பது இருக்கின்றன. இவ்வுண்மையை எம்மால் புரிந்து கொள்ள முடியுமென்றிருந்தால் எமது சமூக, சன்மார்க்க நிலைகள் எவ்வளவு ஆரோக்கியமடையும்.! 'அர்க்கானுல் ஈமான்' எனும் ஈமானின் அடிப்படைகளிலும், 'அர்க்கானுல் இஸ்லாம்' எனும் இஸ்லாமியக் கடமைகளிலும் எம்மத்தியில் பலத்த கருத்து வேறுபாடுகள் இல்லை என்றே கூற வேண்டும். அணுகுமுறைகளிலும்தான் சில உடன்பாடற்ற நிலைகள் காணப்படுகின்றன. இத்தகைய விடயங்களில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதில் தவறில்லை. ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாடுகளுக்கு உரிய சன்மார்க்க ஆதாரங்களை கொண்டிருக்கும் வரை எத்தகைய ஆட்சேபனையும் தெரிவிப்பதற்கில்லை.
ஒரு விடயத்தில் நான் ஒரு கருத்தை கொண்டிருக்கலாம், மற்றொருவர் அதில் என்னோடு முரண்படுகின்ற போது அவர் முஃமினாக இருக்கும் வரை அவருடன் மிகவும் பண்பாடாக நடந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்கக்கடமையாகும்.
'இது விடயத்தில் எனது கருத்து சரியானது. அது பிழையாக இருக்கவும் இடமுண்டு. இது விடயத்தில் அடுத்தவரின் கருத்து பிழையானது. அது சரியாக இருக்கவும் இடமுண்டு.' இக் கூற்று எமது முன்னோர்கள் கருத்து வேறுபாடுகளின் போது கைக்கொண்ட ஒரு சிறந்த உதாரணமாகும்.
காபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்குர்ஆன் பணிக்கின்றது.''மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.'' (16:125) ஆனால், நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீது பழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு. மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.
3. குறைந்த சன்மார்க்க அறிவு
உண்மையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் எம்மத்தியில்லுள்ள பிரிவுகளும் பிரிவினைகளும் பெரும்பாலும் எமது சன்மார்க்க அறிவிலுள்ள குறைபாட்டினால் உருவானவையாகும். இவ்வாறு சன்மார்க்க அறிவிலுள்ள கோளாரின் காரணமாகவே ஒவ்வொரு குழுவினரும் தாம் மாத்திரமே சரி என்றும் தம்மை மாத்திரம் நல்லஅமைப்பாக இனம் காட்டி தம்முடன் சிற்சில விடயங்களில் முரண்படுகின்ற பிற இஸ்லாமியச் சகோதரர்களை அதற்கு அப்பால் இருப்பவர்களாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். மேலும் முஸ்லிம் சமூகத்தில் தஃவாக்களத்தில் - அறிவும் அறிவும் மோதுவதாக தெரியவில்லை. அறிவும் அறியாமையும் முட்டிக்கொள்வதையும் காண்பது அரிது. அறியாமையும் அறியாமையுமே முட்டி மோதி, சமூகத்தில் புரளிகளைக் கிளப்புவதைப் பார்க்க முடிகின்றது. மேலும் குறுகிய இயக்க வாதங்கள், தனிமனித பலவீனங்கள், தப்பபிப்பிராயங்கள் முதலானவையும் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வருகின்றன.
4. உலமாக்களின் கடமை
இவ்வாரோக்கியமற்ற நிலை மிக அவசரமாக மாற்றப்படல் வேண்டும.; இல்லாத போது இன்று நாம் காணும் இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகள் பூச்சியமாகி விடும் பேராபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும். இங்கு உலமாக்களின் பணி அவசியமாக வேண்டப்படுகின்றது. குறுகிய இயக்க வாதங்களை மறந்து அவர்கள் சமூகத்தின் ஒற்றுமைக்காக உழகைகும் மகத்தான பொறுப்பை சுமந்தாக வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் உம்மத் பலயீனமுற்ற சந்தர்பங்களிலெல்லாம் அதனை பலப்படுத்தி கட்டிக்காத்த பெருமை அவ்வக்கால உலமாக்களையே சாரும். இறையச்சமும், நிறைந்த அறிவும், துணிச்சலுமிக்க ஒரு தலைமைத்துவம் எம் சமூகத்திற்கு இன்று தேவைப்படுகின்றது. இது ஒரு தனிமனித தலைமைத்துவமாகவன்றி ஒரு கூட்டு தலைமைத்துவமாக அமைவதே தற்போதைக்கு சாத்தியமானதாகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001