இஸ்லாமிய பார்வையில்வர்தா புயல்...

16.12.2016
 மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராக வேண்டும். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதல்ல. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. வரம்புகளுக்குட்பட்டது. எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர். வரம்பு மீறாதீர் என அல்லாஹ்.
எச்சரித்துள்ளான்.அவற்றை உணர்ந்துக் கொண்டே மனிதன் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான்.
சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள், பூகம்பங்கள்,சுனாமி பேரலைகள், புயல் சீற்றங்கள், கடல் கொந்தளிப்புகள் என இயற்கை பேரழிவுகள் குறித்த செய்திகளை கண்டும், கேட்டும் மனிதஇனம் கலங்கிப்போயிருப்பதை காண்கின்றோம்.
மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆற்றல் என்னமுடியாது. ஆனால் மனிதனோ தன்னை படைத்த அல்லாஹ்வையே மறந்து அவன் விதித்த விதிமுறைகளை மீறி நடக்கும் போது தன்னையும், தன் ஆற்றலையும், தன் சிந்தனையையும் மனிதனுக்கு உணர்த்திட பேரழிவுகளை எச்சரிக்கையாகவும் படிப்பினைப் பெற்று பக்குவம் பெறுவதற்காகவும் ஏற்படுத்துகிறான். ஆயினும் மனித சமுதாயம் படிப்பினை பெறமறுக்கிறது. 
 அல்லாஹ் கூறுகிறான்.
   وَاتَّبِعُوْۤا اَحْسَنَ مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَۙ‏
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம்வேதனைவரும்முன்னரே, உங்கள்இறைவனால்உங்களுக்கருளப்பட்டஅழகானவற்றைப்பின்பற்றுங்கள்.                                                   (அல்குர்ஆன்:- 39:55)
மனிதன் எதை பற்றியும் சிந்திக்காமல் பிறர் நலன் மீறி, சுய நலமொன்றே குறிக்கோளாகவும், அல்லாஹ்வையும், மறுமையையும் மறந்து இன்பம் ஒன்றே தன் வாழ்வின் இலட்சியமாகவும் கருதி வாழ முற்பட்டதின் விளைவு தான்  “ஓசோன் படலத்தில் ஓட்டை”எனும் விஞ்ஞானிகளின் அறிவிப்பு.
இந்த உலகில்எத்தனையோசமுதாயத்தவர்கள்வாழ்ந்துமறைந்திருக்கிறார்கள். அந்தந்த சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வை மறுத்து அவன் விதித்த வரம்புகளை மீறி நடந்த போது அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள் எச்சரிக்கையேன்றே உணர்த்துகிறது அல்குர்ஆன்.



ü  நூஹ்(அலை)அவர்களுடையசமுதாயம்,இறைவனின்,கட்டளைகளை ஏற்கமறுத்துவாழ்வில்அநியாயம்அக்கிரமங்கள்செய்தபோதுதன் நபியையும்வழிபட்டவர்களையும்பாதுகாத்துவரம்புமீறியோரை வெள்ளத்தால்அழித்தொழித்ததைசொல்லிநம்மைஎச்சரிக்கிறான்.

ü  ஆதுசமுதாயத்தவருக்குஹூது(அலை)அவர்கள்நபியாக
அனுப்பப்பட்டார்கள்.எமனில்ஹழரமௌத்பிரதேசத்தில்முஹ்றாஎனும் கிராமத்தில்அஹ்காஃப்என்னும்ஓடைப்பகுதி.அதில்பெரும்பாலும் மணல்மேடு.அந்தபகுதியில்தான்ஆதுக்கூட்டத்தார்கள்வசித்தார்கள். அவர்கள்பலசாலிகளாகவும்இருந்தார்கள். சுய பலத்தில் மதிமயங்கி அநியாய அக்கிரம்களும் அனாச்சாரங்களும் செய்து வந்தார்கள் இன்னும் அவர்கள் பெரும் செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். எனவே ஷிர்க் அதிகமாகி அல்லாஹ்வை நிராகரித்து வரம்பு மீறி அக்கிரமங்களில் ஈடுபட்டார்கள். ஹூது (அலை) அவர்களை ஏளனப்படுத்தி எப்போது நீர் கூறும் வேதனை வரும் என வினவினார்கள்.வேதனையும் வந்தது என்ன நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பாருங்கள்

. فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا‌ ؕ
بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ‌ۚ رِيْحٌ فِيْهَا عَذَابٌ اَلِيْمۙ ٌ
تُدَمِّرُ كُلَّ شَىْءٍ ۭ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰٓى اِلَّا مَسٰكِنُهُمْ‌ؕ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ             அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது
"அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
(அல்குர்ஆன் :- 46:24,25.)
காற்று மனிதன் உயிர் வாழ முக்கியமான ஒன்ராகவும்,அருட்கொடையாகும் இருக்கிறது. என்றாலும் மனிதன் வரம்பு மீறும் போது அதனைத் சோதனையாக மாற்றி சீற்றமாகவும்,புயல் காற்றாகவும்  உருவெடுக்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகளும், பேரிழப்புகளும் கொடூரமான  வேதனையாக மாறிவிடுகிறது.


அபூஹுறைரா (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபியவர்கள் சொல்ல நான் செவிமடுத்தேன். காற்று அல்லாஹ்வின் கிருபையாகும்.
அது அல்லாஹ்வின் அருட்கொடையை கொண்டு வருகிறது. சிலவேளை அது அவனின் வேதனையையும் கொண்டு வருகிறது. ஆகவே நீங்கள் அதனைக் கண்டால் அதனை திட்ட வேண்டாம். அதில் நலவை  அல்லாஹ்விடம் கேளுங்கள். அதில் தீங்கை  விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். (அபூ தாவூது)
மேலும் பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை நாம் புரிந்து செயல் பட வேண்டும்.
ü  சமூது கூட்டத்தாரை ஓர் படிப்பினையாக சுட்டிக்காட்டுகிறான். சமூது கூட்டத்தினருக்கு நபி சாலிஹ் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். அக்கூட்டத்தினர் பாறைகளை குடைந்து வாழும் பலசாலிகளாக இருந்தனர். அல்லாஹ்வை ஏற்க மறுத்து நபியின் அறிவுறுத்தலை மீறி வரம்பு மீறி செயல்பட்டு அநியாய அக்கிரமங்களில் ஈடுபட்ட போது  அம்மக்களுக்கு பேரழிவாக இடிமுழக்கம் அவர்களை இல்லாமல் ஆக்கியது.
فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا صٰلِحًـا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْىِيَوْمِٮِٕذٍ ؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏
 وَاَخَذَ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ‏
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர். (அல்குர்ஆன்:-11:66,67)
ü  நபி லூத் (அலை) அவர்களது சமுதாயம் இறைவன் விதித்த வரம்புகளை மீறி தகாத வாழ்வு வாழ்ந்த போது நபியையும் அவர்களுக்கு வழிபட்டவர்களையும் பாதுகாத்து மாறு செய்தவர்களை பேரழிவு மூலம் அழித்தொழித்ததை ஏனையோருக்கு படிப்பினையாக அல்லாஹ் சொல்கிறான்.
فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّنْ سِجِّيْلٍ مَّنْضُوْدٍۙ‏ 
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ‌ؕ وَ مَا هِىَ مِنَ الظّٰلِمِيْنَ بِبَعِيْد               




எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.
அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன் (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.
(அல்குர்ஆன் :-11:82,83.)
ü  மத்யன் வாசிகளுக்கு சுஐபு (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு அச்சமுதாயத்தவர்கல் வரம்பு மீறி நடந்த போது அநியாயம் அக்கிரமங்கள் செய்துக் கொண்டிருந்தவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது என்பதையும் அல்லாஹ்  விவரிக்கிரான்.
ü  ஃபிர்அவ்னும் அவன் கூட்டத்தாரும் பனீ இஸ்ரவேலர்களில் சனிக் கிழமைகளில் வரம்பு மீறியோருக்கும் வேதனை இறக்கப்பட்டதையும் திருமறை படம்பிடித்துக் காட்டி பேரழிவுகள் அல்லாஹ்வின்  எச்சரிக்கை என்பதை இச்சமுதாய மக்களுக்கு உணர்த்துகிறான்.
இவற்றையெல்லாம் அறிந்துக் கொண்டே இறைவனின் வல்லமையை புரிந்துக் கொண்டே மனித இனம் மாறுபட்டு நடக்கும் போது பேரழிவுகளின் மூலம் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறான்.
وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَاۤ اَخَذَ الْقُرٰى وَهِىَ ظَالِمَةٌ‌ ؕ اِنَّ اَخْذَهٗۤ اَلِيْمٌ شَدِيْدٌ
அநியாயம் செய்யும் (ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.
(அல்குர்ஆன் :- 11:102.)
திருக்குர்ஆன் விவரிக்கின்ற இது போன்ற செய்திகள் வாழும் மனித இனத்துக்கு படிப்பினையாகவும், எச்சரிக்கையாகவும் அமைகிறது. எனினும் மனித இனம் படிப்பினை பெறாது முழுக்க முழுக்க மாறு செய்யும் போது பேரழிவுகள் மூலம் இறைவன் பாடம் புகட்டுகிறான்.
அதன் விளைவாக தற்காலத்தில் சென்னையை சின்னாபின்னமாக்கிய வர்தா புயல் வர்தா புயல் 12.12.2017 திங்கட்கிழமை பிற்பகல் சென்னையில் கரையை கடந்தது.
சென்னையை வர்தா புயல் 3 கட்டங்களாக தாக்கியது. பகல் முழுவதும் தாக்கிய வர்தா புயலால் ரூ1,000 கோடிக்கு சேதம்
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல், மேற்குப் பகுதி- மையப் பகுதி- கிழக்குப் பகுதி என 3 கட்டங்களாக சென்னையை இன்று பிற்பகல் முதல் தாக்கியது.

இப்புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சென்னையை பகல் முழுவதும் தாக்கிய அதிதீவிர வர்தா புயலால் எங்கெங்கும் சேதம்தான்..
வீடுகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள், மரங்கள் என சரிந்து விழுந்தன. சென்னை விமானம் நிலையம் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுவிட்டது. சென்னையில் அனைத்து புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
சென்னைக்கு வரும் வெளியூர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புயல் அடித்த வேகத்தில் கார்கள் பறந்த காட்சிகளையும் சென்னைவாசிகள் அனுபவிக்க நேரிட்டது.
சென்னை நகரில் மட்டும் 3,000 மின் கம்பங்கள் விழுந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக வர்தா புயலால் சென்னையில் ரூ1,000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வர்தா புயலின் பாதிப்பால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 பேர் பலி.

v இதற்கெல்லாம் என்ன காரணம் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ‌ وَمَا اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ‌ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا‌ ؕ                  
 وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا                                                      
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
( அல்குர்ஆன் :-. 4:79.)
மனிதன் அவன் வாழ்வில் இறை விசுவாசியாகி இறை நெருக்கத்தை பெற வேண்டுமானால் இரு விஷயங்களில் அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டும்.
1.      அல்லாஹ்வைஎப்போதும் நினைத்து வணங்கி அவன் விதித்த வரம்புகளை மீறாது நடக்க வேண்டும்.
2.      அல்லாஹ்வை வணங்குவதுடன் படைப்பினங்களுக்கும் நன்மை செய்து வாழ வேண்டும்.
தற்காலத்தில் முந்திய சமுதாயத்தவர்களில் பேரழிவுகளுக்கு ஆளான சமுதாயத்தினரை போன்று பிறர் நலம் கருதாது சுய நலம் கருதி பூமியில் குழப்பம் விளைவித்து இறைவரம்பு மீறி வாழ்வதில் மனித சமுதாயம் சந்தோஷம் அடைகிறது. இதுவே பூமியின் பேரழிவுகளுக்கு காரணமாக ஆகிவிடுகிறது.
இது போன்ற  பேரழிவுகள் மூலம் பாதிக்கப்படும் அனைவரும் வரம்பு மீறியவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்தவர்கள் எனும் முடிவிற்கும் நாம் வந்து  விடக் கூடாது. காரணம் நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் என்பதை போன்று தீயோருக்கான வேதனைகள் நல்லோர்களையும் வந்தடையும் என்பதனையும் புரிய வேண்டும்
.அல்லாஹ் சொல்கிறான்:நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள் அல்குர்ஆன் :-8-25)
பேரழிவுகள், சீற்றங்கள், பேரிழப்புகள், நிலநடுக்கங்கள், பூகம்பங்கள், சுனாமி பேரலைகள் குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் பலவிதமாக கருத்தைக்கூறினாலும்இஸ்லாமிய பார்வையில் மனிதர்கள் இறைவனை மறந்து பல்வேறு கேட்ட செயல்கள் தோன்றி விட்டால் பூமி தாங்காது. பேரழிவை ஏற்படுத்தும், சோதனைகள் தொடரும்.பொதுவாக
1.      பொது சேவையில் ஈடுபடுவோர் பொதுச் சொத்தை தங்களின் சொந்த சொத்தாக கருதி மனம் போன  போக்கில் செயல்படுவது.
2.      பிறர் கொடுத்து வைத்த அமானிதத்தை தான் பெற்ற இலாபமாக கருதி அதை பயன்படுத்துவது.
3.      ஜகாத் கொடுக்காமல் இருப்பது.
4.  அறிவும், நன்னடத்தை பெறுவதையும் நோக்கமாக கொள்ளாமல் (பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு) கல்வி பயிற்றுவிப்பது.
5.      தாயை துன்புறுத்துவது.
6.      ஒருவன் தன் மனைவிக்கு முழுமையாக கட்டுப்படுவது.
7.      தந்தையை வெறுப்பது.
8.      பள்ளிவாசல்களில் கூச்சல்,  புதுமைகள், குழப்பங்கள் அதிகரிப்பது.
9.      குற்றவாளிகளே நாட்டின் தலைவர்களாக உயர்வது.
10.    தரம் கெட்டவர்களே சமூகத்தை வழி நடத்திச்செல்வது.
11.    சமுதாயத்தின் மூத்த குடிமக்களை குறை பேசித்திரிவது.
12.    மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படுவது.
இது போன்ற சமுதாய சீர் கேடான செயல்கள் நிரம்பி விட்டால் நெருப்புக் காற்றையும், நிலச் சரிவுகளையும், பூகம்பங்களையும், ஆழி பேரலைகளையும் உருமாற்றம் செய்யப்படுவதையும்,கல் மழை பொழிவதையும் எதிர் பார்க்க வேண்டும் .எனவே பேரழிவுகள் அல்லாஹ்வின்  எச்சரிக்கை என்பதை உணர்ந்து நல்லபண்புகளையும், மனித நேயத்தையும், பிறர் நலனையும் பாதுகாத்து  அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறாமல் நேர்மையுடன் வாழ வழிவகை காண வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் இம்மையிலும், மறுமையிலும் வழங்கி அருள் புரிவானாக! ஆமீன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001