ரமளான் ஓய்வு மாதமா?


அசத்தியத்தைத் தூக்கிப் பிடிப்பவன் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் அணியணியாய் அதை ஊரெல்லாம் பரப்பித் திரிகிறான்.
.
அந்த அசத்தியத்தை அடிக்கடி பார்த்துப் பார்த்தே பழகிப் போகும் பொதுசனமும் நாளடைவில் அதையே “சத்தியமாக இருக்குமோ” என்றும் நம்ப ஆரம்பித்தும் விடுகிறது.
.
அசத்தியத்தை உலகில் வாழ வைத்துக் கொண்டிருப்பதே அதன் பிரச்சார வேகம் தான்.
.
அசத்தியத்தின் வேகத்தையும் மிஞ்சும் வேகத்தில் சொல்லப்பட வேண்டிய சத்தியமோ பாவம் இன்று ஒரு மூலையில் சுருண்டு போய் உறங்குகிறது.
.
“புனித மாதத்தில் ஷைத்தான்களோடெல்லாம் சச்சரவு எதற்கு? அமல் செய்வதற்குத் தான் ரமழான்” என்று பரவலான பிரச்சாரத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.
.
ஷைத்தானோடு களமிறங்கிப் போராடுவதே ஒரு மாபெரும் அமல் என்பதை நம்மில் அனேகர் இன்று மறந்து போனது ஏனோ?
.
ரமளான் மாதம் என்பது, ஏதோ கொஞ்சம் தொழுது விட்டுத் தேவாங்கு மாதிரி சுருண்டு படுக்கும் மாதம் அல்ல.
.
இஸ்லாத்தின் முதல் யுத்தமே ரமளான் மாதத்தில் தான் தொடுக்கப் பட்டது. “புனித மாதத்தில் இந்த சச்சரவெல்லாம் தேவையா?” என்று நபியவர்கள் அன்று நினைக்கவில்லை.
.
இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த அனேக யுத்தங்கள் ரமழான் மாதங்களிலேயே அதிகம் சூடு பிடித்தன. “புனித மாதத்தில் இந்த சச்சரவெல்லாம் எதற்கு?” என்று ஸஹாபாக்களும் பள்ளியே கதியென்று சுருண்டு படுக்கவில்லை.
.
அசத்தியவாதியே இன்று தன் அசத்தியத்தைப் பச்சையாக சத்தியம் என்று வீரியத்தோடு பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறான். சத்தியத்தைச் சுமந்த கற்றறிந்த மக்களில் பலருக்கு அதை எதிர்த்து ஒரு குரல் கொடுக்கக் கூடவா இன்று தெம்பில்லை?
.
“ஷைத்தானின் பிரச்சாரம் சூடுபிடித்தால் நமக்கென்ன? நேரத்துக்கு ஸஹர் செய்து, நேரத்துக்கு நோன்பு துறந்து, இடையில் கொஞ்சம் தொழுது விட்டு, நேரம் கிடைத்தால் அப்படியே ஒரு பயான் முடிச்சிட்டு நம்ம வேலைய நாம பார்ப்போம்” என்பது தான் நம்மில் அனேகர் எண்ணம் போல் தெரிகிறது.
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001