இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மக்கள் அதிகாரக் கழகம் தனது கண்டனத்தையும் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற அமைப்பின் துணை அமைப்பான “தி ரெசிஸ்டென்ஸ் ஃப்ரண்ட்” என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற உடனேயே, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கடும் வெறுப்புணர்வை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பாசிஸ்டுகள் தூண்டி விட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட 26 பேரில் காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரும் இருந்த போதிலும் கூட இஸ்லாமியரா, இந்துவா என்று கேட்டு பயங்கரவாதிகள் கொலை செய்ததாக திட்டமிட்டு தகவல்கள் பரப்பப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிவிட்டால், காஷ்மீரில் எவ்வித தீவிரவாதத் தாக்குதல்களும் நடைபெறாது என்று அமித்ஷா அறிவித்தார். அரசமைப்புச் சட்டம் 370-ஐ நீக்கிய பிற...