இடுகைகள்

நவீனபெண்களை வளைக்கும்சைபர்' வில்லன்கள்!

  ' [ முன்பெல்லாம் விவாகரத்துக்காக நீதிமன்றம் வரும் தம்பதிகள், போலீஸிடம் புகார் கொடுத்த நகல் அல்லது எஃப்.ஐ.ஆர் நகலைக் கொண்டு வருவார்கள். இன்றைக்கோ மனைவி/கணவர் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்த புகைப்படத்தையோ, அவர்களது பதிவையோ பிரின்ட் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். நம்மிடம் சுயகட்டுப்பாடு இல்லாததே. ''மார்டன் உலகத்தில் செல்போன் வைத்திருப்பதை ஒரு கௌரவமாகவே கருதுகிறார்கள். எதைப் பார்த்தாலும் அதில் படம் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.  எதிர்பாராதவிதமாக நம் செல்போனை தொலைத்துவிட்டால் போதும்...   குடும்ப விவரங்களிலிருந்து அந்தரங்கம் வரை அனைத்தும் அடுத்தவரால் திருடப்பட்டுவிடும். மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவும் பல குற்றங்கள் அரங்கேறிவிடுகின்றன. ''தான் குளிக்கும் வீடியோ, 'யூடியூப்’- பில் உலவிக் கொண்டிருப்பதாக ஒரு பெண் பதறிக் கொண்டு எங்களிடம் ஓடி வந்தார். அந்தப் பெண், தன் தோழி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே குளித்திருக்கிறார். அப்போது  'டூத் பிரஷ் மைக்ரோ கேமரா’  மூலம்,  தோழியின் கணவனே படம் பிடித்து, 'யூ டியூப்’-ல் உலவ விட்டிருக்கிறான்.  பாதிக்கப்பட்ட பெ...

திருமணம் பற்றி திருக்குர்ஆன்

மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாட்டு நடப்புக்கள் நம் கவணத்திற்கு தந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே  இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்கவைத்துள்ளமை ஒரு கொடையே!  பன்டுதொட்டு திருமண பந்த உறுவுமுறைகள் ஒவ்வொரு சமுதாயத்திலும் நடைமுறையில் இருந்து வருகின்றன. பன்பட்ட, பயிற்சிப் பட்டறைகள், சமூக அபிவிருத்தி முகாம்கள், மகளிர் மேம்பாட்டு வைபவங்கள், இளைஞர் நல முகாமைத்துவம் போன்ற பெயர்களில் நச்சக்கலாச்சாரங்களுக்கு வித்திட்டு வரும் செய்திகள் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களாகும்.   ''அவனே நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அவனுக்கு (பிறப்பினால் வந்த) இரத்த சம்பந்தமான உறவுகளையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவுகளையும் ஏற்படுத்தினான்''. (த...

இறைவன் படைப்பில் பெண்

   ரஹ்மத் ராஜகுமாரன்    உலக மக்கள் தொகை 700 கோடியை தாண்டிவிட்டது. இந்திய மக்கட் தொகை  1,02,70,15,247 இதில்  ஆண்கள்   53,12,77,078   பெண்கள்   49,57,38,169 தமிழ்நாட்டு மக்கள் தொகை  6,21,10,839 இதில் ஆண்கள்  3,12,68,654  பெண்கள்  3,08,42,185. ஆயிரம்  ஆண்களுக்கு  986  பெண்கள். இப்படி ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. பெண்களைப் பெருமைப்படுத்த வேண்டும் அதுவும் தாய்மையோடு கண்ணியப்படுத்த வேண்டும் என்று உலகம் நினைத்த போது, சொந்த நாட்டை 'தாய்நாடு' என்றும், தான் பேசும் மொழியை 'தாய்மொழி' என்றும், தான் பிறந்த மண்ணை தாய் மண் என்றும், நாகரிகம் படித்துத் தந்த ஆறுகளுக்கெல்லாம் கங்கை, காவிரி, கோதையாறு .. இப்படி எல்லா ஆறுகளுக்கும் பெண்களின் பெயர் சூட்டி... கூடுமான வரை பெண்களை முற்படுத்தி கொண்டாடியது மனித வர்க்கம். "மகளிராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்" என்று ஒளவை என்கிற மாதரசியும் பாடி வைத்தார். ஆனால் முதல் பெண்ணின் படைப்பு ஆணின் எலும்பிலிருந்து உருவானது என்பதாக குர்ஆனிலிருந்து காணக் கிடைக்கிற...

இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் இறுதிப் பேருரை!

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களு...

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள் தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.   (அல் குர்ஆன் 5:3) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி) நூல்: அஹ்மத் (16519) இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்துவிட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பித்அத் (நூதனமான அனுஷ்டானங்க)களை உருவாக்கி வைத்துள்ளனர். நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னரே ஈஸா(அலை) அவர்கள் போதித்த தூய இஸ்லாமிய மார்க்கத்தை முக்கடவுள் கொள்கையான திரித்துவமாக்கி கிறிஸ்...