இடுகைகள்

இன்றைய அவசியத்தேவை-மார்க்க ஒற்றுமை

அல்லாஹ் உருவாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை பிளவுபடுத்த யாருக்கு அதிகாரமிருக்கிறது! அல்லாஹ் விதித்த ஒற்றுமை எனும் சட்டத்தை மீற யாருக்குக்கேனும் தனி சுநத்திரம் அளிக்கப்பட்டுள்ளதோ ? நன்மையை ஏவி , தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும அவர்களே வெற்றி பெற்றோர் , இது உலகப்பொதுமறை திருக்குர்-ஆன் 3:104- ன் வசனமாகும் இந்த வசனத்தின் முலம் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஒரு சமுதாயமாக இருந்து நன்மையை ஏவி , தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழையுங்கள் என்பதுதான். ஆனால் இன்றைக்கோ   தமிழகத்தில் மட்டும் நம் சமூகத்தினர் 72 சமுதாய பிரிவினர்களாக பிரிந்து நானா ? நீயா ? எனறு பலப் பரிட்சையில் இறங்கிவிட்டனரே இது நியாயமா ? மார்க்கத்தில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று கூக்குரலிடும் ஜமா-அத் தலைவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் மட்டும் கூட்டாக ஒன்று சேர்ந்து தாவாபு செய்யலாமா ?   தனியாக இவர்களுக்கென்று ஜமாஅத் தலைவர்களுக்கு என்று ஒரு ஹஜ் மற்றும் கிப்லா உள்ளதா ? மார்க்கத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிறார்களா ?   இந்த ஜமாஅத் தலைவர்கள்! உண்மையை உணர்ந்து எல்லா...

கண்டிப்பதும் ஒரு கலையே!

மாணவர்கள் அல்லது குழந்தைகள் தவறு செய்யும்போது கண்டித்துத் திருத்த வேண்டியது ஆசிரியர் மீதும் பெற்றோர் மீதும் கடமையாகும். அது போலவே தன் பொறுப்பில் அல்லது ஆதிக்கத்துக்கு உட்பட்ட சிப்பந்திகளிடமோ அல்லது தொண்டர்களிடமோ தவறு காணும்போது அவர்களைத் திருத்த வேண்டியது அந்த நிறுவனத்தின் அல்லது இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகும். அதை எவ்வாறு அழகிய முறையில் நிறைவேற்றுவது? அதுவும் ஒரு கலையே! இறைவன் நமக்களித்த முன்மாதிரியாம் அண்ணல் நபிகளாரிடமிருந்தே பாடம் பெறுவோமே! அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களைப் பாருங்கள்: நபித்தோழர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்  கூறுகிறார்கள்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, ''இறைவா! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!'' என்று சொன்னார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள். ''இறைவனின் விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!'' என்று கூறினார்கள்...

தடை செய்யப்பட்ட திருமணங்கள்!

 ‘ ஷிஃகார் ’ திருமணம் தடை செய்யப்பட்டதாகும்! மணக்கொடையின்றி பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் திருமணத்திற்கு “ ஷிஃகார் ” எனப்படும். இத்தைகைய திருமணம் செல்லாததாகும். காரணம் என்னவெனில் பெண் கொடுத்து பெண் எடுக்கும் போது மணப்பெண்களுக்கு முறைப்படி சேரவேண்டிய மஹ்ர் , இத்தகைய திருமணங்களின் மூலம் கிடைக்கப்பெறுவதில்லை! இது அந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இஸ்லாம் பார்க்கின்றது. போலியான பெண்ணுரிமைப் பேசுபவர்கள் இஸ்லாம் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமை வழங்கியிருக்கியிருக்கிறது என்பதை இந்த ஒரு விசயத்திலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ ஷிஃகார் ” முறைத்திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள் ”. ஒருவர் மற்றொருவரிடம் “ நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன் ; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும் ” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே “ ஷிஃகார் ” எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் “ மஹ்ர் ” ( மணக்கொடை) இராது. ஆதாரம்: முஸ்லிம் மணப்பெண்ணிடமிருந்து கைக்கூலி என்னும் வரதட்சனையைப் பெற்...