சுவர்க்கத்தை பரிசாகபெற்றுத் தரும் நற்கிரியைகள் 1. அநாதையைப் பொறுப்பேற்றல்: "அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி). 2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்: "எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ). ஆயத்துல் குர்ஸி: "அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் " (பகரா 2:255). 3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை: 'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு: 'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்...
இடுகைகள்
தண்ணீர் ஒர் மாபெரும்அருட்கொடை!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது . உலகில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல்அவதிப்படுகிறார்கள் . பல கோடி மக்கள் நீர்பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கின்றார்கள்என்று ஐ . நா . சபை தெரிவிக்கின்றது . எதிர்கால தண்ணீர் தேவையைமனதிற்கொண்டு சந்திரன் , செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா ? அங்கு தண்ணீர்உள்ளதா ? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில்ஈடுபட்டு வருகின்றனர் . உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவைகொண்ட நீர் உள்ளது . மீதமுள்ள 2.5 சதவீதம் தான்சுத்தமான நீர் . அதிலும் 2.24 சதவீதம் துருவபகுதிகளில் பனிப்பாறைகளாகவும் , மக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும்உள்ளது . மீதமுள்ள 0.26 சதவீத தண்ணீரைத்தான்...