இடுகைகள்

கடன் சிக்கல்... அவிழ்க்க 5 வழிகள்!

கடன்... எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை மட்டும் வாங்கவே கூடாது என்றுதான் நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால், கடனே இல்லாதவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாகவே இருக்கிறது இந்த காலத்தில். ஆபீஸில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கைமாத்தாக வாங்கும் கடனில் தொடங்கி, அடிப்படைத் தேவைகளான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கக் கடன், மனை மற்றும் சொந்த வீடு வாங்கக் கடன், வாகனக் கடன் என இன்றைக்கு கடன் வலையில் சிக்கியவர்கள் பலர். கடனை வாங்கும்போது அடுத்த சில மாதங்களில் எப்படியாவது கட்டிவிடலாம் என்று நினைத்துத்தான் வாங்குகிறோம். பிற்பாடு அதிலிருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு சிக்கலில் சிக்கித் திண்டாடிப் போகிறோம். மோகன், சென்னையில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைக் கணக்காளர். கைநிறைய சம்பாதிக்கிறார். ஆனால், மாதக் கடைசியில் அவரிடம் பைசா மிஞ்சியதில்லை. அவரிடம் இருக்கும் கிரெடிட் கார்டுதான் மாசக் கடைசியில் அவருக்குத் தேவையான பணத்தைத் தந்துவருகிறது.  எதிர்காலத்தில் நல்ல லாபத்தை சம்பாதித்துத் தரும் என்று ஆசை ஆசையாய் வாங்கிய வீடுதான் அவரைக் கடன் பிடிய...

ஹஜ் செய்வோருக்காக

ஹஜ் செய்வோருக்காக! மக்களுக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்காக) உருவாக்கப்பட்ட இறை இல்லங்களில் முதன்மையானது நிச்சயமாக “பக்காவில்” (மக்காவில்) உள்ளது தான். அது மகத்துவமிக்கதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழி காட்டியாகவும் உள்ளது. அதில் தெளிவான அத்தாட்சிகளும் உள்ளன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற (மகாமே இப்றாஹீம் என்ற) இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அல்லாஹ்வின் அபயம் பெற்று) அச்சமற்றவராகிறார், (எனவெ) எவர்கள் அங்கு பயணம் செய்ய வசதியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது , அல்லாஹுவுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். யாரேனும் (இதனை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹுக்கு ஒன்றும் குறையில்லை ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் படைப்பினங்களின் தேவையற்றவன். (அல்குர்ஆன் 3 : 96,97) நபி(ஸல்) அவர்கள் : “ஓ மக்களே! உங்கள் மீது ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது” என்றார்கள். உடனே நபித்தோழர் அக்ராபின் ஹாபிஸ்(ரழி) எழுந்து : யா ரசூலுல்லாஹ்! ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? என வினவினார்கள். அதற்கு அருமை நாயகம்(ஸல்) கூறினார்கள்: “ஆமாம்” என நான் கூறி விட்டால் அது உங்கள் மீது (வாஜிப்) கடமையாகிவிடும். அது(வாஜிப...

இஸ்லாமிய பார்வையில்வர்தா புயல்...

16.12.2016   மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராக வேண்டும். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதல்ல. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. வரம்புகளுக்குட்பட்டது. எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர். வரம்பு மீறாதீர் என அல்லாஹ். எச்சரித்துள்ளான்.அவற்றை உணர்ந்துக் கொண்டே மனிதன் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான். சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள், பூகம்பங்கள்,சுனாமி பேரலைகள், புயல் சீற்றங்கள், கடல் கொந்தளிப்புகள் என இயற்கை பேரழிவுகள் குறித்த செய்திகளை கண்டும், கேட்டும் மனிதஇனம் கலங்கிப்போயிருப்பதை காண்கின்றோம். மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆற்றல் என்னமுடியாது. ஆனால் மனிதனோ தன்னை படைத்த அல்லாஹ்வையே மறந்து அவன் விதித்த விதிமுறைகளை மீறி நடக்கும் போது தன்னையும், தன் ஆற்றலையும், தன் சிந்தனையையும் மனிதனுக்கு உணர்த்திட பேரழிவுகளை எச்சரிக்கையாகவும் படிப்பினைப் பெற்று பக்குவம் பெறுவதற்காகவும் ஏற்படுத்துகிறான் . ஆயினும் மனித சமுதாயம் படிப்பின...