இடுகைகள்

வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவைகள்

  அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர் என ஹதீஸ்கள் எச்சரிக்ன்றன.  ஒருமுறை நபியவர்கள் தொழுகைக்காகச் செல்லும்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, "வியாபாரிகளே" என அழைத்தார்கள்.அங்கிருந்த வியாபாரிகள் நபியவர்களின் அழைப்பை ஏற்று தமது தலைகளை உயர்த்திபார்வைகளை அன்னார்பக்கம் செலுத்தினர். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து  "வியாபாரிகளில் அல்லாஹ்வைப் பயந்து உண்மை பேசி நன்மை செய்தவரைத் தவிர ஏனையோர் பாவிகளாகவே மறுமையில் எழுப்பப்படுவர்" என்றார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்) நபியவர்கள் வியாபாரிகளாக இருந்த எம்மிடம் வந்து "வியாபாரிகளே! பொய்யையிட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என "தபரானி"யில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. வியாபாரத்தின்போது தவிர்க்கவேண்டிய முக்கிய அம்சங்கள் 1. அளவை நிறு...

இஸ்லாம் கூறும் ஆடை ஒழுங்கு

ஆடையில்லா மனிதனை அரை மனிதன் என்பார்கள் . ஆடையைக்கொண்டே மனிதன் மதிக்கப்படுகிறான் . அதனால் மனிதனுக்கு ஆடை ஒழுங்கு அவசியம் . அதை இஸ்லாம் அற்புதமாகக் கூறுகிறது . அதைப் பேணுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும் . ஆடை , மனிதனின் அந்தரங்க பகுதிகளை மறைக்கக்கூடியதாகவும் , எளிமையானதாகவும் , மார்க்கம் அனுமதித்த துணிவகையிலிருந்தும் , மார்க்கம் அனுமதித்த அளவிலும் , ஆண்கள் , பெண்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலும் , இறையச்சத்தை தரும் அமைப்பிலும் அமைதல் வேண்டும் .       ஆனால் நாகரீகம் என்ற அமைப்பில் தற்காலத்தில் உடுத்தப்படுகின்ற ஆடை வகைகளில் பெரும்பாலும் உடலின் அந்தரங்க பகுதிகளை மறைப்பதில்லை . ஆண்கள் அணியக்கூடிய ஆடைகளில் நாகரீகம் என்ற பெயரில் பல இடங்களில் கிழிசல்கள் இருப்பதாலும் , ஆடையை கீழிறக்கி உடுத்துவதாலும் , பெண்களால் அணியப்படுகின்ற சல்வார் கமீஸ் , மிடி , சேலை போன்ற ஆடைகள் மிகவும் இளகலாக அமைந்திருப்பதாலும் , இறக்கம் குறைந்த ஆடைகளை பெண்கள் அணிந்து வருவதாலும் அவர்களின் மறைக்கப்பட வேண்டிய பகு...