இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான தொழுகைகளை தொழக்கூடாது

இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி ( ஸல் ) அவர்கள் கண்டார்கள் . நபி ( ஸல் ) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிதரைச் சூழ்ந்து கொண்டனர் . ஸுப்ஹு நான்கு ரக்அத்களா ? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா ? என்று அம்மனிதரைப் பார்த்து நபி ( ஸல் ) அவர்கள் ( கோபமாகக் ) கேட்டார்கள் .                                                                                  புஹாரி -663:      அப்துல்லாஹ் பின் மாலிக் ( ரலி ) ( கடமையான ) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை ' என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .                                                                  அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரலி ) நூல் : முஸ்லிம் 1281   கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகை தொழக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது .     அபூஹுரைரா   ரழியல்லாஹு   அன்ஹு   நபி[ஸல்]கூறியதாக   பின்வருமாறு   பகர்