இடுகைகள்

லைலத்துல் கத்ரின் &இஃதிகாஃப் சிறப்புகள்

லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப் பத்து நாட்களில்  இஃதிகாஃப் இருப்பார்கள்.   லைலத்துல் கத்ர்   தொடர்புடைய குர்ஆன் மற்றும் ஹதீஸ் தொகுப்பு பின்வருமாறு: நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5...

மூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா?

படம்
ரமளான் மாதத்தின் ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் தனித்தனி துஆக்கள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் ஸஹீஹான ஹதீஸ் இருப்பதாக காணமுடியவில்லை. ஆனால், முதல்பத்து நடுப்பத்து, கடைசிப்பத்து எனக் குறிப்பிடும் ஸஹீஹான அறிவிப்புகள் உள்ளன. அவற்றைச் சார்ந்து இப்னு குஸைமா எனும் நூலில் பலவீனமான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் பார்ப்பதற்குமுன், ரமளான் மாதத்தின் முதல்பத்து, நடுப்பத்து, இறுதிப்பத்து என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளை அறிந்துகொள்வோம்! நான் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களிடம் சென்றேன். எங்களுடன் தாங்கள் பேரீச்ச மரத்தோட்டத்திற்கு வந்தால் நாம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று கேட்டேன். அவர்களும் புறப்பட்டனர். "லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்!" என்று கேட்டேன். அப்போது அபூ ஸயீத்(ரலி), "நபி(ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து 'நீங்கள் தேடக் கூடியது  (லைலத்துல் கத்ரு)  உங்களுக்கு இனி வரும்  ...

ரமலானும் அந்த நாட்களும்

படம்
  இஸ்லாமிய  சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை   அஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே….. வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன்…. ஏதோ இருக்கேண்டீ…. நீ சொல்லு…. என்ன நஸீம்… ரமலான் மாசம்… கையில் பிடிக்க முடியாத குறையா பிஸியா இருப்பே… இப்ப என்ன சுரத்தே இல்லாம பேசறே?? இல்லடீ…. ரெண்டு நாளா நோன்பில்லை… அதான் டல்லா இருக்கேன்…. நோன்பில்லைன்னா என்னதான் செய்யறதுன்னு தெரியலை…. போரடிக்குது…. நஸீமாவின் இடத்தை நம்மில் பலரும் கடக்க வேண்டி இருக்கிறது. மாதம்தோறும் வரும் உதிரப்போக்கினாலோ அல்லது பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கினாலோ ரமலானை, அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் கடக்க இயலாமல் போகிறது. ஆனால் வருத்தப்பட்டு இந்த மாதத்தை நாம் விட்டு விடலாமா? அதன் ரஹ்மத்தை1, பரக்கத்தை2, அதில் கிடைக்கும் அளவிலா நன்மைகளை?????????????? தொழுக முடியாத நிலையில் என்ன இபாதத்3 செய்து விட முடியும் என்று நினைக்கும் சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் பல சகோதரிகள் பயன் பெறக்கூடும் என்னும் நிய்யத்துடன், பிஸ்மில்லாஹ்….  முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் ச...

தர்மத்தின் சிறப்புகள்.

o குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே! o அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்.. o இறந்தவருக்காக தர்மம் o நரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம் o மனைவியின் தர்மத்தில் கணவனுக்குப் பங்கு o சிறந்த தர்மம் எது? o இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள் o சுவனத்தின் ''ஸதகா வாசல்'' o உறவினருக்கு உதவுவதில் உயர்ந்த கூலி o தர்மமே நமது சொத்து o அல்லாஹ்வின் மன்னிப்பு ''ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5352) ''தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1426) தர்மத்தின் சிறப்புகளை உணர்த்தும் பொன்மொழிகள் குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே! ...

ஸகாத்தின் விதிகள் என்னென்ன?

படம்
  ஸகாத்தின் பொருள்  இதன் பொருள் தூய்மையுறச்செய்தல் என்பதாகும். ஒருவன் தன் உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழைகளுக்கு அறம் செய்வதன் மூலம் அவனிடம் எஞ்சியுள்ளவை தூய்மை பெறுவதாலும், அவனுடைய உள்ளமும் உலோபித்தனத்திலிருந்து தூய்மை பெறுவதாலும் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.   ஸகாத்தின் நோக்கம் என்ன ?  செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது. ''உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது.'' (அல்குர்ஆன் 59:7)   ஸகாத்தின் விதிகள் என்னென்ன?  1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும். 2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும். 3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும். 4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும். 5) சொந்த தேவைகள் போக மீத...