மஸ்ஜிதில் பெண்கள்!



உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி (ஆதிகா ரளியல்லாஹு அன்ஹா) சுபுஹ் தொழுகைக்கும், இஷா தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்திலே கலந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (உங்கள் கணவர்) உமர் (ரளியல்லாஹுஅன்ஹுஅவர்கள் இதை விரும்பமாட்டார். இன்னும் ரோஷப்படுவார் என்று அறிந்திருந்தும் எதற்காக நீங்கள் வெளியேறி (மஸ்ஜிதுக்கு) வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அப்போது அவர்கள் (இதுவரை என்னை அவர் தடுக்கவில்லையே) என்னை மஸ்ஜிதுக்கு வராமல் தடுப்பதை விட்டும் அவரை எது தடுத்தது என்று வினவினார்கள்.
அதற்கு (அவர்களின் மகன் அப்துல்லாஹ்) இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வினுடைய பெண் அடிமைகளை அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுக்காதீர்கள் என்ற நபியின் சொல்தான் அவர்களை தடுத்துள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி
உமருடைய நாவிலிருந்து அல்லாஹ் பேசுகிறான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பாராட்டப்பட்ட இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா அவர்களுக்கே வராத துணிவு பிற்காலத்தைச் சார்ந்தவர்களுக்கு எப்படி வந்தது. 
பெண்கள் பள்ளிக்கு வருவது தடைசெய்யப்பட்டதால் இன்று அவர்களுக்கு ஆண்களைப்போல் மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள வாய்ப்பு அருகிப்போய்விட்டதை எதார்த்தமாக காண முடிகிறதே!


இன்று ஒவ்வொரு வீட்டிலும் டி.வி பெட்டியே கதி என்று கிடக்கும் பெரும்பாலான பெண்களுக்கு மார்க்க ஞானம் சுத்தமாக துடைத்தெரியப்பட்டுப் போனதற்கு இந்த 'தடை' சட்டமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியுமா?

உலகிலுள்ள அத்தனை மனிதர்களும் சேர்ந்து தங்கள் அறிவுக்கு எட்டியவாறு பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவதை தடை செய்தது சரிதான் என்று ஆயிரம் காரணங்கள் எடுத்து வைத்தாலும், அவர்கள் கல்வியில் பலகீனமானவர்களே! ஏன்?
(எப்போது பெருமானார் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் 'பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவதை தடை செய்ய வேண்டாம்' என்று மொழிந்தார்களோ அதுதான் கியாம நாள் வரைக்குமுள்ள சட்டம். ஏனெனில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாவிலிருந்து ஒரு சொல் வெளியானால் அது அல்லாஹ்வின் உத்தரவு கொண்டுதான் வெளிவருகிறது. இதற்கான அத்தாட்சியை திருக்குர்ஆனிலேயே காணலாம். அதனால்தான் உமர்கத்தாப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவது விருப்பமானதாக இல்லாதபோதும் அவர்கள் அதை தடை செய்யவில்லை. தடைசெய்ய அஞ்சினார்கள்.)
உம்மு சலமா ரளியல்லாஹு  அன்ஹா அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் எழுவதற்கு முன் சற்று அமர்ந்து இருப்பார்கள். பெண்கள் ஆண்களை சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகிறேன் என்று இப்னு ஹிஷாம் கூறுகிறார். (நூல்:புகாரி)
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (நூல்: புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹ¤ அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி')
உங்களில் ஒரு பெண் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா நூல்: முஸ்லிம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்:புகாரி
நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு நூல்:புகாரி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001