அங்கிகாரம் பெற்று விட்ட சமூக குற்றங்கள்

                                அங்கிகாரம் பெற்று விட்ட சமூக குற்றங்கள
(அப்போது அவன்) “என் இறைவனே! நான் (உலக வாழ்வில்) பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
(அதற்கு இறைவன்) “இவ்விதம் தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உம்மிடம் வந்தன; அவற்றை நீ மறந்து விட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்என்று (அல்லாஹ்) கூறுவான்.
ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கிறானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் (தீர்ப்பு நாளின்) வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு (ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.                         அல் குர்ஆன்: 20: 125,126,127,128
 [ இளைமைஎன்பது நன்மையின் மொத்த உருவத்திற்கோ, தீமைகயின் மொத்த உருவத்திற்கோ பெயரல்ல! மாறாக சூடேற்றப்பட்ட இரத்தத்தின் பெயராகும். புத்தம் புதியவற்றைக் கவர்ந்து கொள்ளும் ஆற்றலுக்குப் பெயராகும்.
ஒரு பொருள் அது முயற்சி செய்து அடைய வேண்டிய ஒன்று என மனதில் தோன்றி விட்டால், அது நல்லதோ கெட்டதோ உயிரைக் கொடுத்தேனும் அதனை அடைந்து விட நினைக்கும் ஒரு சக்திக்குப் பெயராகும்.
உதாரணத்திற்கு வாள் ஒன்றை எடுத்துக் கொள்வோம். இது போர் வீரனுக்கும் பயன்படுகிறது. கொள்ளைக் காரனுக்கும் பயன்படுகிறது, எனவே இளைமை என்பது ஒரு வலிமையின் பொருளாகும்.
திருக்குர்ஆனும், பெருமானார் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த ஒழுக்கத்தை நீங்கள் பின்பற்றுங்கள். உங்களது அறிவாற்றறை உலகின் சிந்தனையைக் கவர்கின்ற அளவிற்க எடுத்தியம்புங்கள். உங்கள் நாவுகள் வசை மாறி பொழிவதிலிருந்து தூய்மை பெற உதவுங்கள்.
பெருமானார்(ஸல்)  அவர்கள் எந்த நற்பணியை மேற்கொண்டு தமது அருமைத் தோழர்களையும் மேற்கொள்ளச் செய்தார்களோ அந்த நல்ல பணியை நீங்களும் மேற் கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் வரும். உலகம் உங்கள் வசப்படும். ]
 நவயுகம் என்றால் என்ன? இதைப்பற்றி முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்து வந்த மனிதன் தனது காலத்தை நவயுகம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறான். சென்று போக யுகம் பூர்வீகம். அதில் மனித சமுதாயத்திற்கு எத்தகைய நன்மையும் விளையவிலலை என்றே கருதி வந்தான்.
அக்கால மக்கள் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிப் போயிருந்தனர். தெளிவான சிந்தனையுள்ளவர்கள், கல்வி கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், விஞ்ஞான விற்பன்னர்கள் என்றும், சென்ற கால் மக்களுக்கு கிடைக்கப் பெறாத அனைத்து வசதிகளையும் நாம் பெற்றிருக்கின்றோம் என்றெல்லாம் எண்ணி வந்தான். இப்படியே அந்தந்த காலத்தில் வாழ்ந்த மனிதன் தவறான எண்ணத்திற்கு பலியாகி விட்டிருந்தான்.
மனிதனுக்கு இறைவன் சிறுகச் சிறுக அருளியிருந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களை ஒதுக்கி விட்டு பொதுவாக நாம் பார்க்குமிடத்து, ஆதிமனிதர் ஆதம்  (அலை), நபி (ஸல்)அவர்களின் காலந்தொட்டு இன்று வரை ஆரம்பத்தில் எப்படி இருந்தானோ அப்படியே தான் இருக்கின்றான்.
அவனுடைய அறிவுக்கூறு, பகுத்தறிவுத் திறன், மனவிருப்பங்கள், உடலின் தேட்டங்கள், சிந்தனைப் போக்கு ஆகியவை அப்படியே உள்ளன. இவற்றில் ஒருபோதும் மாறுதலோ, அடிப்படையில் வித்தியாசமோ தோன்றவில்லை.
ஏனெனில் மனிதனின் தோற்றம்  நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றிய போது எந்த வடிவில் இருந்ததோ அதே போல் இன்றும் உள்ளது. மேலும் ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்து மக்கள் கூட்டத்தினர், எந்தத் தீமைக்கு பலியாகி இருந்தனரோஅதே தீமையினை நான்காயிரம் ஆண்டுகளுக்குப் பின் - உலகில் தன்னை விட பல துறைகளில் வளர்ச்சி பெற்ற நாடு எதுவுமில்லை என்று பெருமையோடு கூறிக் கொள்ளும் அமெரிக்கா செய்து வருகிறது.
இன்று அங்கு நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமூகத்தாரின் பழக்கத்தைக கொண்டோரின் (தன்னினச் சேர்க்கை புரிவோரின்) எண்ணிக்கை இரண்டு கோடிக்கு மேல் உள்ளது என்று புள்ளி விபரம் காட்டப்படுகிறது.
இந்த இரு சாராருக்குமிடையில் இப்பொழுது என்ன வித்தியாசம் ஏற்பட்டு விட்டது.
கடந்த 3500 கால இடைவெளியில் மனிதனின் மனப்பான்மையிலும், சிந்தனைப் போக்கிலும் எத்தகைய மாறுதலும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.
. நாத்திகர்கள் முற்காலத்தில் எந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் தான் இப்போது உள்ளனர்.
மாபெரும் குற்றமிழைத்தோரும், இழிவான, மானக்கேடான செயல்கள் புரிந்தோறும் பூர்வ காலத்தில் எப்படி இருந்தார்களோ அப்படியே இன்றும் உள்ளனர்.
இது போன்று சத்தியத்தை நேசித்தவர்களும், அதற்காகப் பாடுபட்டவர்களும் நபி நூஹ் அலை அவர்கள் காலத்தில் எப்படியிருந்தனரோ அதே போல் தான் இன்றும் உள்ளனர்.
இதன ல் புலப்படுவது யாதெனில், நன்மையும் அதே போன்று தான் இருக்கிறது. இதில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை என்பது தான்.
மனிதனின் போக்குவரத்து சாதனங்களின் வளச்சியும், அறிவியல் கண்டுபிடிப்புக்கள், அவற்றைப் பயன்படுத்தல் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கின்ற மகத்தான மாற்றங்கள் என்று சொல்ல முடியாது.
இது மட்டுமா? ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த மக்கள், தாம் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மனித முன்னேற்றத்தின் இறுதி எல்லை எனக் கருதினர்.
ஆனால் சிறிது காலம் சென்றதுமே ஒவ்வொரு யுகமும் பழமையான யுகமாகவே போய் விட்டது. இவ்வாறே பிற்காலத்தில் தோன்றிய மக்களும் முற்கால மக்களைப் போல் தவறான எண்ணத்திற்கு; பலியாகி விட்டனர். ஏன், சென்ற நூற்றாண்டின் இறுதிவரை, உருக்கினால் செய்யப்படும் வண்டியோ, காற்றைவிட அதிகம் பறுவாயுள்ள் ஒரு பொருளையோ வானவெளியில் காற்றில் பறப்பது சாத்தியமில்லை எனக் கூறிய விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், தத்துவஞானிகளம் இருக்கத்தான் செய்தனர்.
 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இவர்கள் சாத்தியமில்லை என்பதை வாதித்தனர்.
ஆனால் சிறிது காலத்திற்குள்ளாகவே 1911-1912 ஆம் ஆண்டுகளில் உருக்கினால் தயாரிக்கப்பட்ட வண்டி காற்றில் மிதந்தது. அப்போது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இது சாத்தியமில்லை என்று கருதி வந்தவர்கள், பழமைவாதிகள் என்பது தெரிய வந்தது.
அப்படியென்றால், இது நவயுகம் என்று கூறி வந்தவர்களின் வாதமும், இது முன்னேற்றத்தின் இறுதி எல்லை என்று கூறியவர்களின் கருத்தும் முற்றிலும் தவறானவையாகும்.
ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்து வந்த மனிதன், தான் முன்னேற்றத்தின் இறுதி எல்லையை அடைந்து விட்டதாகவே கருதினான். ஆனால் பிற்காலத்தில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படவே மேலும் பல வழிகள் திறக்கலாயின. அதிக முன்னேற்றங்களும் ஏற்பட்டன.
தத்துவத்தின் நிலையும் இப்படித்தான். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அது அடைந்திருந்த சீரழிவை விட இப்போது மிக பயங்கரமான அளவிற்கு சீரழிந்து விட்டிருக்கிறது.
நவயுகத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்னர் இளைஞர் என்ற சொல்லின் கருத்து என்ன என்பதைக் கவனியுங்கள்.
இளைஞர் என்பது நன்மையின் மொத்த உருவத்திற்கோ, தீமைகயின் மொத்த உருவத்திற்கோ பெயரல்ல! மாறாக சூடேற்றப்பட்ட இரத்தத்தின் பெயராகும். புத்தம் புதியவற்றைக் கவர்ந்து கொள்ளும் ஆற்றலுக்குப் பெயராகும். ஒரு பொருள் அது முயற்சி செய்து அடைய வேண்டிய ஒன்று என மனதில் தோன்றி விட்டால், அது நல்லதோ கெட்டதோ உயிரைக் கொடுத்தேனும் அதனை அடைந்து விட நினைக்கும் ஒரு சக்திக்குப் பெயராகும்.
உதாரணத்திற்கு வாள் ஒன்றை எடுத்துக் கொள்வோம். இது போர் வீரனுக்கும் பயன்படுகிறது. கொள்ளைக் காரனுக்கும் பயன்படுகிறது, எனவே இளைஞர் என்பது ஒரு வலிமையின் பொருளாகும்.
முற்காலத்தில் கூட தீமைகளுக்குத் துணை போவோர் இதே இளைஞர்களாகத்தானிருந்தனர். தீமைகளைப் பெருக்கும் ஓர் இராணுவமாகவும் இவர்கள் செயல்பட்டனர். இவர்கள் மூலமே தீமைகள் உலகெங்கும் பரவலாயின. மேலும் தீமைகளைக் கவர்ந்து கொள்வதில் பெரியவர்களை விட இவர்களே அதிகமான ஆர்வத்தைக் காட்டினர். இதே நிலை தான் இன்றும் உள்ளது.
இக்காலத்தில் பரவிவரும் ஒழுக்கக் கேடுகளை மற்றவர்களை விட சீக்கிரம் இளைஞர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இவர்களே அவற்றைப் பரப்புவதிலும் மற்ற எவரையும் விட முதன்மை வகிக்கின்றனர்.
தீமைகள் புரிவோருக்கு மிகுந்த அதிகபட்ச ஊக்கத்தை இவர்களே தோற்றுவிக்கின்றனர் என்றால், இளைஞர்களுக்கு நன்மை உருக் கொண்டவர்கள் என்று எவ்வாறு பெயர் சூட்ட முடியும்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகில் தொழிநுட்பம் வளர வளர நாகரிகம் என்று சொல்லி கொண்டு இளம் தலமுறையினர் பாதை மாறி வாழ்க்கையை தொலைக்கும் சம்பவங்கள் உலகளவில் நிமிடத்திற்கு நிமிடம் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது
ஒரு செய்திதான் அத்தனை களேபரங்களுக்கும் காரணம்
இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர்.

அந்த ஓட்டலில் இளம்வயது ஆண்களும், பெண்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், நாங்கள் தலையிட நேர்ந்தது என தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

இந்த காட்சிகளை அந்த அரசியல் கட்சிக்கு எதிராக செயல்பட்டுவரும் ஒரு கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல் கடந்த 23-ம் தேதி ஒளிபரப்பியதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

கலாச்சார பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சட்டம்-ஒழுங்கை சிலர் தங்களது கையில் எடுத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதை ஆதரித்தும், கண்டித்தும் கேரள மக்களிடையே பரபரப்பான பட்டிமன்றங்கள் நடைபெற்று வந்தன.

2-ம் தேதி மாலை 5 மணியளவில் கொச்சி நகரில் உள்ள கடற்கரையோர உணவகம் ஒன்றின் பொதுவெளியில் ஆணோடு பெண்கள் கட்டியணைத்து, முத்தமிடும் திருவிழாவுக்குஃபேஸ்புக்மூலம் ஒரு அமைப்பு அழைப்பு விடுத்தது.

கிஸ் ஆஃப் லவ்என பெயரிடப்பட்டுள்ள இந்தஃபேஸ்புக்பக்கத்தில் இதுவரையில் 2,722 பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர். 8,510 பேர்லைக்தெரிவித்துள்ளனர். இதே நாளில் கோழிக்கோடு, திரிச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் இந்தமுத்தத் திருவிழாநடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான செய்தி பரவத் தொடங்கியதும் இந்த கலாச்சார சீர்கேட்டுக்கு போலீஸ் சட்டங்களின் மூலம் தடை விதிக்க வேண்டும் என இரு மாணவர்கள் கேரள ஐகோர்ட் அமர்வின் முன்னர் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவினை விசாரித்த நீதிபதிகளிடம் கருத்து தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். 

முன்புள்ள காலங்களில் ஒருவன் ஒரு பெண்ணின் கைகளை பிடித்து இழுத்தாலே அவளது கற்ப்பு பறிப்போனதாக நினைக்கும் இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலை வேதனையை ஏற்படுத்தி உள்ளது.கலாசாரம் என்று சொல்லிக்கொண்டு காம வெறியர்களுக்கு இந்த முத்த போராட்டத்தால் எத்தனை பெண்கள் இரையாக போகிறார்கள் என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும்.மேலும் தற்போது தமிழகத்திலும் முத்த போராட்டம் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் உள்ள ..டி.யில் மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டனர்.
‘‘மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்தக் கலாச்சாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல’’
- கல்லூரி மாணவிகள்
நன்மை எது? தீமை எது? என்று தெரியாமல் இன்றைக்கு சமூகம் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது.
ஒரு நேரத்தில் ஆபாசமாகவும் தீமையாகவும் தென்பட்டவையெல்லாம் இன்று நன்மையாகவே மாறிவிட்டன.
ஆபாசத்திற்க்கு வரைவிலக்கணம் அறியாமல் வழிதவறி சென்றுக் கொண்டிருக்கிறது சமூகம்.
கண்டிக்க கடமைப் பட்ட நமது இஸ்லாமிய இயக்கங்களும் வெறும் அறிக்கைகளோடு நின்றுக் கொள்கின்றன.
இஸ்லாத்தை எதிர்த்தாலும் இந்து மத வெறி இயக்கங்கள் இந்த கலாச்சாரத்தை எதிர்த்து சத்தியத்தை நிலைநாட்டுகின்றனர்.அவர்களின் எதிர்ப்பு வழிமுறைகளில் வேண்டுமானால் நாம் மாற்று கருத்துக் கொள்ளலாமே ஒழிய அவர்களின் எதிர்ப்பில் நாம் குறை காணமுடியாது.
நன்மைகள் எங்கிருந்தாலும் வரவேற்க்கத் தக்கவையே! இந்திய கலாச்சாரங்களை கூறுபோட்டு விற்கும்படி மேற்கத்திய கலாச்சாரத்தை நுழைய விட்டு இளம் தலமுறையினர் சீர் கெட்டு போகும் அவலம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
பத்து விநாடி முத்தத்தில் எட்டு மில்லியன் பாக்டீரியாக்கள் பரிமாறப்படுகிறதாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதே போன்று இளைஞர்கள் தீமையே உருக்கொண்டவர்களுமல்லர். இது நன்மையானது தான் என்று ஒன்றைத் தெரிந்து கொண்டதும் அதில் மனநிறைவு அடைந்து விட்டால் அதற்காக வேண்டி உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்காத மாபெரும் ஆற்றலும் அவர்களுள் அமைந்துள்ளது.
எகிப்திய நாகரீகத்த உற்று நோக்குங்கள். நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் எகிப்திய நாகரீகம் எப்படி இருந்தது? அது இன்றைய அமெரிக்கா, ஐரோப்பிய நாகரீகத்துக்கு வேறுபட்ட ஒன்றாகயிருக்கவில்லை.
ஆனால் நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓர் இளைஞராகவே இருந்தார்கள். அவர்கள் தமது ஒழுக்க வலிமையால், தமது விவேகத்தின் வீரியத்தால் அரசு முழுவதும் தமது கைக்கு வந்து விடும் அளவுக்கு அந்த நாகரீகத்தின் மீது பலத்த அடி கொடுத்தார்.


நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் செல்வக் களஞ்சியங்களை என் முன் கொண்டு வந்து குவியுங்கள் என்று கூறினார்கள். செல்வச் சீமான்களாயிருந்த அனைவரும் அக்கணமே இதே எம்மிடம் இருக்கும் செல்வங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.
இதே போன்று பெருமானார் ஸல் அவர்களின் காலத்தை உற்று நோக்குங்கள். பெரியவர்களெனப்படுவோர் பெருமானார் (ஸல்)அவர்ககு;கு பற்பல இடையூறுகளை விளைவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தம்மோடு இளைஞர்களின் அணியொன்றைத் திரட்டி வைத்துக் கொண்டு பெருமானார் ஸல் அவர்களுக்கும், அவர்கள் தம் அருமைத் தோழர்களுக்கும் சொல்லொண்ணாத் துன்பங்களையும் தொல்லைகளையும் கொடுத்து வந்தார்கள்.
பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கொதிக்கும் பாலைவன வெயிலில் கிடத்திமணிலிலே இழுத்துச் சென்றவர்கள் மக்காவின் இளைஞர்கள் தாம். இவர்கள் பெரியவர்களின் தூண்டுதலுக்கு இலக்காகி தவறாக வழியை மேற்கொண்டனர். மற்றொரு கோணத்திலிருந்து கவனியுங்கள்.
பெருமானார் ஸல் அவர்களின் அன்புத் தோழர்கள் சத்தியத்திற்காக உயிர்த்தியாகம் புரிவதில் ஈடு இணையற்று விளங்கினார்கள். பெருமானார் ஸல் அவர்களின் ஆரம்ப கால நண்பர்களின் பட்டியலைப் புரட்டுங்கள்.
பெருமானார் ஸல் அவர்களை விட வயதில் இரண்டு ஆண்டு மூத்தவர் ஒருவர் மட்டுமே அதில் இடம் பெற்றிருந்தார். அதில் பெற்றிருந்த மற்ற அனைவரும் அவர்களை விட வயதில் குறைந்தவர்களாகவே இருந்தனர்.
பத்துவயது நிரம்பப் பெற்ற வரும், பதினைந்து நிரம்பப் பெற்றவரும், இருபத்தைந்து வயதைத் தாண்டியவரும் அதிகபட்சம் முப்பது, முப்பத்தைந்து வயதினை ஒத்தவர்களும் தாம் அதில் இருந்தனர். இவர்கள் தம் கண்ணெதிரே தோற்றமளித்த நெருப்புக் குண்டத்தை கண்ணால் கண்டும் இஸ்லாத்தைத் தழுவினார்களென்றால், வனவிலங்குகளை நொக்கி, உங்களது பசியினைப் போக்க இதோ நாங்கள் இருக்கிறோம் எங்களைக் கீறிக்கிழித்து உண்டு மகிழுங்கள் என்றும், அக்கிரமக்காரர்களை நோக்கி, வாருங்கள்! இதோ தெரிகின்ற நெருப்புக் குண்டத்தில் எங்களைப் போட்டு பொசுக்குங்கள் என்று வருந்து அழைத்துக் கொண்டது போலல்லவா இருக்கிறது!
இவ்வித பயங்கரச் சூழ்நிலையிலும் அவர்கள் தைரியமாக எழுந்து நின்றி,        
லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் திருக்கலிமாவை ஓங்கி முழங்கினார்கள். பேராபத்துக்களை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. எண்ணற்ற இன்னல்களைச் சகித்தார்கள். விதவிதமாக அக்கிரமங்களுக்கு ஆட்பட்டார்கள்.
இனி மக்காவில் மார்க்கப்பணி புரிவது சிரமமானது எனக் கண்ட அவர்கள் நாடு, வீடு, உற்றார், உறவினர் ஆகிய அனைவரையும் அப்படியே விட்டு விட்டு பிற நாட்டில் புகலிடம் தேடினார்கள். சொந்த நாட்டை விட்டுப் பிறநாடு சென்றால் என்ன நேரிடும்? நமது நிலை என்னவாகும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை. இவர்களும் இளைஞர்கள் தாம்! இவர்களில் பருவம் அடைந்த பாவையரும், இளங்காளையரும் இருந்தனர்.
இறுதியில் இவர்கள் அனைவரும் தமது தீரமிக்க செயல்களால் இஸ்லாத்தின் கொடியினைத் தாங்கிப் பிடித்தார்கள். பெருமானார் ஸல் அவர்களுக்குப் பெருந்துணையாய் நின்று இவர்கள் தோற்றுவித்த மாபெரும் புரட்சி பல நூற்றாண்டு காலம் வரை உலகில் நிலைத்து நின்று, உலகிற்கு வழி காட்டிற்று. ஏன், இன்றும் கூட வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. இனி இன்ஷா அல்லாஹ் மறுமை நாள் வரை அதன் பிரதிபலிப்பு உலகில் இருந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தும் அப்புண்ணிய சீலர்களின் அரிய தியாகங்களாலும் வீர மிக்க செயல்களாலும் நிகழ்ந்தவையன்றோ!
திருக்குர்ஆனும், பெருமானார் ஸல் அவர்களும் கற்றுத் தந்த ஒழுக்கத்தை நீங்கள் பின்பற்றுங்கள். உங்களது அறிவாற்றறை உலகின் சிந்தனையைக் கவர்கின்ற அளவிற்க எடுத்தியம்புங்கள். உங்கள் நாவுகள் வசை மாறி பொழிவதிலிருந்து தூய்மை பெற உதவுங்கள்.
பெருமானார் ஸல் அவர்கள் எந்த நற்பணியை மேற்கொண்டு தமது அருமைத் தோழர்களையும் மேற்கொள்ளச் செய்தார்களோ அந்த நல்ல பணியை நீங்களும் மேற் கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் வரும். உலகம் உங்கள் வசப்படும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001