தண்ணீர் ஒர் மாபெரும்அருட்கொடை!





உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.உலகில் 
40சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல்அவதிப்படுகிறார்கள்.பல கோடி மக்கள் 
நீர்பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கின்றார்கள்என்று .நா.சபை தெரிவிக்கின்றது.
எதிர்கால தண்ணீர் தேவையைமனதிற்கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில்
மனிதன் உயிர் வாழ முடியுமா?அங்கு தண்ணீர்உள்ளதா?என விஞ்ஞானிகள் தீவிர
 ஆராய்ச்சியில்ஈடுபட்டு வருகின்றனர்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவைகொண்ட நீர் உள்ளது.மீதமுள்ள 2.5 சதவீதம் தான்சுத்தமான நீர்.அதிலும் 2.24 சதவீதம் துருவபகுதிகளில் பனிப்பாறைகளாகவும், மக்கள்
பயன்படுத்த முடியாத நிலையிலும்உள்ளது.மீதமுள்ள 0.26 சதவீத தண்ணீரைத்தான்
உலகமனைத்திலுமுள்ள மனிதர்கள் அனைவரும்குடிநீராகவும், விவசாயத்துக்கும் 
பயன்படுத்தும்நிலை உள்ளதாக ஒரு புள்ளி விவரம்கூறுகின்றது.
தண்ணீருக்கான சண்டைகள் நாள் தோறும்நடந்து கொண்டிருக்கின்றன.வீதிகளில்
மட்டுமில்லாமல் மாநிலங்களுக்கு இடையிலும்அது தொடருகின்றன.
ஓர் எழுத்தாளன் இப்படி சொன்னான்:
மூன்றாம் உலகப்போர் அது தண்ணீருக்காகவேண்டி நடந்தாலும் 
ஆச்சர்யப்படுவதற்கில்லை”.
எனவே தான் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு,தேவை, அவசியம், குறித்து மக்கள்
 அறிந்துகொள்ள வேண்டுமென .நா.சபை மார்ச் 22ம்தேதியை தண்ணீர் தினமாக
 அறிவித்து ஒரு வாரகாலம் உலகெங்கும் கொண்டாடப்பட வேண்டும்என 
கேட்டுக் கொண்டுள்ளது.
ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரைமாசுப்டுத்துகின்றன. இப்படி மாசுபட்ட 
தண்ணீரைஅருந்துவதால் உலகம் முழுக்க தினமும் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட 
குழந்தைகள் இறந்துபோவதாகவும், டைபாய்டு, அமீபியாசிஸ்,ஜியார்டியாசிஸ்,
 அஸ்காரியாசிஸ், கொக்கி புழு,தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்றுபோக்கு உள்ளிட்ட நோய்தாக்குதல்ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
மறுபுறம், வறட்சியாலும், நிலத்தடி நீர்உறிஞ்சப்பட்டும், நீர்வள ஆதாரங்கள்
பாதிக்கப்பட்டும் வருவதால் எதிர்காலத்தில்உலகம் பாலைவனமாக மாறும் அபாயம்உள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம்தெரிவித்துள்ளனர்.
ஆக நீரின்றி அமையாது உலகு என்றுவள்ளுவன் சொன்னது போல மனிதசமுதாயத்தின் அரணாக, இயக்கமாக விளங்கும்தண்ணீர் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது?என்பது பற்றி உலகிற்கு உணர்த்த வேண்டியஅவசியம் முழு முஸ்லிம் உம்மாவிற்கும் உண்டு.
தண்ணீர் பற்றி இஸ்லாம்,

اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏ 
அல்லாஹ் கூறுகின்றான்:“தண்ணீரிலிருந்தே நாம் தான்உயிரினங்களை 
(படைத்தோம்)வெளிப்படுத்தினோம்அல்குர் ஆன்: 21:30
அல்லாஹ் கூறுகிறான்!
َهُوَ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ‌ۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا

மேலும், அவனே தன்னுடைய கருணைக்குமுன்னால் காற்றை நற்செய்தியாகஅனுப்புகின்றான்.பின்னர், வானிலிருந்துசுத்தமான நீரை வெளியாக்குகின்றான். 
பூமியின்உயிரற்ற பகுதிகளுக்கு இதன் மூலம் நாம்உயிரூட்டுவதற்காகவும், மேலும் 
நம்முடையபடப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும்,மனிதர்களுக்கும் தண்ணீர்
 புகட்டுவதற்காகவும்தான்! இந்த நிகழ்வுகளை அவர்களிடையேஅடிக்கடி நாம் உண்டு பண்ணுகின்றோம். அவர்கள்படிப்பினை பெற வேண்டுல் என்பதற்காக!அல்குர் ஆன்: 25:48
அல்லாஹ் கூறுகின்றான்:
என்ன?இவர்கள் பார்க்கவில்லையா?வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாக நாம்
தண்ணீரை ஒலித்தோடசெய்கின்றோம்.அதிலிருந்து பயிகளைமுளைக்கச்
 செய்கின்றோம். அதிலிருந்துஇவர்களும் உண்ணுகின்றனர், இவர்களுடைய
கால்நடைகளும் உண்ணுகின்றதுஅல் குர் ஆன்: 32:27
அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும் வானத்திலிருந்து அருள் மிக்கநீரினை இறக்கினோம்.பின்னர் அதன் மூலம்தோட்டங்களையும், தானியங்களையும்,குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற 
பேரீச்சமரங்களையும் முளைக்கச் செய்தோம். இதுமக்களுக்கு வாழ்வாதாரம் 
வழங்குவதற்கானஏற்பாடாகும்அல்குர் ஆன்: 50: 9-11
அல்லாஹ் கூறுகிறான்:

اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَؕ-ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ ‏                                                                                          நீங்கள் குடிக்கும் தண்ணீரைகவனித்தீர்களா?மேகத்திலிருந்து இதனை நீங்கள்
பொழியச் செய்தீர்காளா?அல்லது நாம் பொழியச்செய்கின்றோமா?நாம் விருப்பினால் நீங்கள்குடிக்க முடியாதபடி உவர்ப்பு நீராகஆக்கியிருப்போம்.நீங்கள் நன்றி
 செலுத்தவேண்டாமா?அல்குர் ஆன்: 56: 68-70
அல்லாஹ் கூறுகின்றான்:
பின்னர், மனிதன் தனது உணவின் பக்கம்சற்று நோட்டமிடட்டும்.நிச்சயமாக, நாம்
 நீரைதாராளமாக பொழிந்தோம்.பின்னர்வியக்கத்தகுந்த முறையில் 
பூமியைப்பிளந்தோம். பிறகு, அதில் தானியங்களையும்,திராட்சைகளையும், 
காய்கறிகளையும், ஆலிவ்மற்றும் பேரீச்சை மரங்களையும்,
 அடர்ந்ததோட்டங்களையும், விதவிதமான கனிகளையும்,புற்பூண்டுகளையும்
 முளைக்கச் செய்தோம்.உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும்
வாழ்வாதாரப் பொருட்களாகும்
 பொருட்டுஅல்குர் ஆன்: 80: 24-32
மேற்கூறிய இறைவசனங்கள் அனைத்தும்தண்ணீரின் மூலம் மனித சமுதாயம் 
அடைந்துகொண்டிருக்கின்ற பயன்பாடுகள் குறித்தும்,மனிதனின் மூலமே தண்ணீர் 
தான் என்பதுபற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.
இன்றைய விஞ்ஞானம் மனித உடற்கூறுகள்71 சதவீதம் தண்ணீரால் ஆனது 
என்கிறது.
ஆக, தண்ணீர் ஒன்று இல்லையென்றால்இவ்வுலகம் உயிர்கோளம் என்ற
 நிலையையும்,மனித சமுதாயம் வாழும் நிலையையும்எய்திருக்காது.
அருட்கொடையும் விசாரணை மன்றமும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தனதுபடைப்பினங்கள் அனைத்திற்கு
மேகணக்கிலடங்காத அருட்கொடைகளைவழங்கியுள்ளான். அதிலும் 
மனிதன்னுக்கு தான்வழங்கியுள்ள அருட்கொடைகள் பற்றி குறிப்பிடும்போது,
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள்எண்ணிட முயன்றால் அவற்றை
 உங்களால்எண்ணவே முடியாது”.அல்குர் ஆன்: 16:18
மேலும், உங்களுக்குக் கிடைத்துள்ளஅருட்கொடைகள் அனைத்தும்     
அல்லாஹ்விடமிருந்தே வந்தவை தாம்அல்குர் ஆன்: 16:53
அந்த வகையில் தண்ணீர் என்பது ஓர்அருட்கொடையாகும்
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
உனக்கு உடல் ஆரோக்கியத்தை நான்தரவில்லையா?குளிர்ந்த நீரைக்கொண்டு நான்தாகம் தீர்க்கவில்லையா?என்று தான்மனிதர்களிடம் அல்லாஹ் முதன்முதலில்
விசாரிப்பான் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.நூல்: திர்மிதி, இப்னுஹிப்பான்
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள்தமது தந்தை ஜுபைர் (ரலி) 
அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தகாஸூர் 102 வது அத்தியாயம் இறங்கிய போதுநபித்தோழர்களிடையேஓதிக்காண்பித்தார்கள்.அதில் 8ம் வசனத்தை ஓதி
காண்பித்த போதுசுற்றியிருந்தநபித்தோழர்கள் எந்தெந்தஅருட்கொடைகள் 
குறித்தெல்லாம் நாங்கள்மறுமை நாளில் கேள்வி கேட்கப்படுவோம் என்றுகேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள்,தண்ணீர் பேரித்தம் பழம் ஆகியவை குறித்தும்கேள்வி கேட்கப்படுவீர்கள் என்றுபதிலளித்தார்கள்நுல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம்:708
அபிவிருத்தி - பரக்கத்
அல்லாஹ் ஐந்து விஷயங்களை பரக்கத் -அபிவிருத்தி- வளமிக்கது என குர் ஆனில்குறிப்பிட்டுக் கூறுகிறான்.அதில் தண்ணீரும்ஒன்று.
1.   அல்லாஹ் எனும் திருப்பெயர்
பெரும் அருள் வளங்கள் நிறைந்ததாகஇருக்கின்றது, கீர்த்தியும் கண்ணியமும் மிக்க உம்இறைவனின் திருப்பெயர்!”அல் குர் ஆன்:55:78
2.   ஸலாம் சொல்லுவது:
எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள்நுழையும் போது நீங்கள் 
உங்களைச்சார்ந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள்.இதுநல்லாசி எனும் முறையில்
நிர்ணயிக்கப்பட்டதும்அருள் வளங்கள்கொண்டதும்.தூய்மையானதுமாகும்.
 இவ்வாறுஅல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்குவிவரிக்கின்றான்; இதனால்
 நீங்கள்சிந்திதுணர்ந்து செயல்படக் கூடும்!அல் குர் ஆன்:24:61
3.   ஜைத்தூன் மரம்
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின்ஒளியாக இருக்கின்றான். அவனது ஒளிக்கு
உவமை இவ்வாறாகும் ஒரு மாடத்தில் விளக்குவைக்கப்பட்டிருக்கின்றது, 
அவ்விளக்கு கண்ணாடிகூண்டினுள் இருக்கிறது, அக்கண்ணாடிக் கூண்டுமுத்தாய் 
ஒளிரும் தாரகை போன்றுள்ளது.அவ்விளக்கு, கிழக்கைச் சேர்ந்ததாயும்,
மேற்கைச்சேர்ந்ததாயும் இல்லாத அருல்வளமிக்க ஒலிவ ஜைத்தூன் மரத்தின் எண்ணெய்கொண்டு எரிக்கப்படுகின்றது.அல் குர் ஆன்:24:25
4.   தண்ணீர்
மேலும் நாம் வானத்திலிருந்து அருள்வளமிக்க தண்ணீரினை இறக்கினோம்.
அல் குர் ஆன்:50:9
5.   ஹரம் ஷரீஃப்
நிச்சயமாக, மனிதருக்காக எழுப்பப்பட்டமுதல் வணக்கத்தலம் 
மக்காவிலுள்ளதேயாகும்.அருள்வளம் வழங்கப்பட்ட இடமாகவும்,அகிலத்தார் 
அனைவருக்கும் வழிகாட்டும்மையமாகவும் அது உள்ளது
அல் குர் ஆன்:3:96
தண்ணீரை அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும், இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாகவும்ஆக்கியுள்ளான் என குர் ஆன் சான்றுவழங்குகின்றது.
அல்லாஹ் பத்ரின் வெற்றிக்குபிண்ணனியில் இருக்கின்ற அல்லாஹ்வின்பேருதவியை எண்ணிப்பார்க்குமாறும்,வெற்றியின் மூலம் கிடைத்த கனீமப்பொருட்களும் 
அல்லாஹ்வின் பேருபகாரம் தான்என்று கூறி நினைத்துப்பார்க்குமாறும் 8:7-10வரையிலுள்ள வசனத்தில் கூறிவிட்டு பத்ர்வெற்றியின் சூட்சமத்தை அல்லாஹ்
 பிவரும்வசனத்தில் நினைவுபடுத்துகிறான்.

اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَؕ‏
இதையும் நினைத்துப்பாருங்கள், அல்லாஹ்உங்களை சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன்சார்பிலிருந்து உங்களுக்கு மனநிம்மதியையும்,அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும்,உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்,ஷைத்தான் ஏற்படுத்திய 
அசுத்தங்களை உங்களைவிட்டு அகற்றுவதற்காகவும், உங்கள்இதயங்களை 
வலுப்படுத்துவதற்காகவும் அதன்மூலம் உங்கள் பாதங்களைநிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்துஉங்கள் மீது தண்ணீரை பொழியச் செய்தான்”.
அல் குர் ஆன்:8:11
என் இறைவனே! என் சமூகத்தார் என்னைபொய்யென்று தூற்றிவிட்டனர். இனி எனக்கும்அவர்களுக்கு இடையில் திட்டவட்டமான ஒருதீர்ப்பை வழங்குவாயாக! மேலும், 
என்னையும்என்னுடன் இருக்கும்இறைநம்பிக்கையாளர்களையும் 
நீகாப்பாற்றுவாயாக! இறுதியில் நிரம்பிய ஒருகப்பலில் அவரையும்,
அவருடனிருந்தவர்களையும் நாம்காப்பாற்றினோம்.பின்னர், 
எஞ்சியிருந்தமனிதர்களை நீரில் மூழ்கடித்து விட்டோம்.
அல் குர் ஆன்:26: 117-120
மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம்கட்டளையிட்டோம். உமது கைத்தடியினால்
கடல் நீரின் மீது அடியும்! உடனே கடல் பிளந்துஅதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும்
 மலைபோன்றாகி விட்டது.அதே இடத்திற்கு நாம் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும் 
நாம் நெருங்கி வரச்செய்தோம்.மூஸாவையும், அவருடன் இருந்தஅனைவரையும் 
நாம் காப்பாற்றினோம்.பிறகு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் கடல் நீரில்மூழ்கடித்து விட்டோம்.அல் குர் ஆன்:26: 62-66
மேற்கூறிய சான்றுகளில்இறைநம்பிக்கையாளர்களுக்கு தண்ணீரைஅல்லாஹ்
 அருளாகவும், இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாகவும்ஆக்கியிருப்பதை 
குர் ஆனில் மூலம் சுட்டிக்காட்டுகிறான்.
நிம்மதியான வாழ்க்கை
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுசிரியாவிலிருந்து தம் துணைவியார் மற்றும்
பச்சிளம் குழந்தையை அழைத்துக் கொண்டு நபிஇப்ராஹீம் (அலை) அவர்கள் 
மக்காவின் அரேபியபாலைவன மண்ணில் அன்புத்துணைவியாரையும், குழந்தையையும் விட்டுவிட்டுஇருகரமேந்தி துஆ செய்து விட்டுவந்தார்கள். கடும் வெயில், சுடும் பாலைவனமணல், நாவறண்டு தாகத்தால் தண்ணீருக்குஸஃபவிற்கும் மர்வாவிற்கும் இடையேஓடினார்கள், தேடினார்கள்.ஏமாற்றமேமிஞ்சியது.எங்கும் கானல் நீர்தான்.
பச்சிளங்குழந்தையும் நாவறட்சியால்வீறிட்டு அழுகிறது. பரிதவிக்கிறார்கள்,குழந்தையின் பாதத்திலிருந்து உலகின் கோடானகோடி மக்களின் தாகத்தை தீர்க்கின்ற மறுமைநாள் வரை வற்றாத ஜம் ஜம் எனும் நீரூற்றைபேரற்புதத்தை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.உலகிலேயே புனிதம் நிறைந்த ஒரு தண்ணீர்உண்டென்றால் அது ஜம் ஜம்
 தண்ணீர் மட்டும்தான்.அதை பருகுபவர்களுக்கு மன் நிம்மதியும்,உடல் 
ஆரோக்கியமும், வலிமையும் தருவதாகநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நிம்மதியானவாழ்க்கைக்கு தண்ணீர் அவசியம் என்பதைஇவ்வரலாறு உணர்த்துகிறது.
ஸபஃ சமுதயத்தினருக்கு அவர்கள் வசித்தஇடத்திலேயே ஒரு சான்றுஇருந்தது.
வலப்பறமும், இடப்புறமும் (நீரோடைவழிந்தோடும்) இரு தோட்டங்கள் இருந்தன
.உண்ணுங்கள் உங்கள் இறைவன் வழங்கியஆகாரத்தை! மேலும் நன்றி செலுத்துங்கள்.நாடோநன்கு செழிப்பாக இருக்கிறது.படைத்த இறைவன்மன்னிப்பாளனாக 
இருக்கிறான்.இரவு, பகல்முழுவதும் அச்சமற்றவர்களாய் வாழுங்கள்.
மேற்கூறப்பட்ட இந்த இரு நிகழ்வுகளும்அச்சமற்ற நிம்மதியான வாழ்க்கைக்கு 
தண்ணீர்மிக அத்தியாவசியம் என்பதை உணர்த்துகிறது.
எனவே, தண்ணீர் என்பது மனிதசமுதாயத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட
 ஒர்அருட்கொடையாகும்.ஆனால் ஒரு இறைநம்பிக்கையாளனுக்கோ தண்ணீர் 
என்பதுமாபெரும் அருட்கொடையாகும்.ஏனெனில்தண்ணீர் பந்தம் மறுமையிலும்
இறைநம்பிக்கையாளனோடுதொடர்கிறது.பல்வேறு சிறப்புகளையும்,மாண்புகளையும் கொண்ட ஓர் அற்புதமானமாபெரும் அருட்கொடைதான் தண்ணீர்.
மறுமையும், தண்ணீரும்,
அல்லாஹ் குர் ஆனில் எங்கெல்லாம்சுவனத்தைப் பற்றி பேசிகிறானோ அங்கெல்லாம்தண்ணீர் ஒலித்தொடும் நீரோடையையோசுவனத்தின் முதற்பாக்கியமாக 
கூறுகின்றான்.
அவ்வளவு ஏன்?அல்லாஹ்வின்அரியாசணம்  அர்ஷ் கூட தண்ணீரின் மீது தான்
அமைந்துள்ளதாக குர் ஆன் கூறுகின்றது.
இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம்வாக்களிக்கப்பட்டுள்ளது.அதன் மகத்துவம்
இதுதான். அதில் தூய்மையான நீராறுகளும்,சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும்,
குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும்,மதுரமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்குஅனைத்து கனி வகைகளும்இருக்கும்.அவர்களின் மேலானஇறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களோடு பள்ளியில் அமர்ந்திருந்தோம்
நபி(ஸல்) அவர்கள் தலையை மிகவும்தாழ்த்தியவர்களாக அமர்ந்திருந்தார்கள்.சிறிதுநேரத்தில் எங்களை நோக்கி புன்முறுவல்பூத்தவர்களாக தலையைஉயர்த்தினார்கள்.
அப்போது நபித் தோழர்கள்உங்களை சிரிப்பில் ஆழ்த்திய விஷயம் எது?என்று கேட்டனர்.அதற்கு நபி (ஸல்) அவர்கள்சற்று முன்னர் என்னிடம் ஜிப்ரயீல் (அலை) வந்து109 
வது அத்தியாயமான கவ்ஸரை அல்லாஹ்இறக்கியருளியதாக கூறி 
முழுஅத்தியாயத்தையும் ஓதிக்காண்பித்தார்கள்.பின்னர், கவ்ஸர் என்றால் என்ன
என்று அறிவீர்களா?என்று கேட்டார்கள்.அதற்குநபித்தோழர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமேநன்கு அறிந்தவர்கள் என்றனர்.அதற்கு நபி (ஸல்)அவர்கள் அது ஒரு
 நீரோடை, அது சுவனத்தில்அமைந்துள்ளது.அதை எனக்கு தருவதாக என்இறைவன் வாக்களித்துள்ளான்”.இதில்ஏராளமான நன்மைகள் உள்ளன.அது ஓர் நீர்தடாகம் அதை நோக்கி எனது உம்மத்தினர்வானில் தென்படும் வின்மீன்கள் அளவுக்கு
அனுப்பப்ப்டுவார்கள் என்று கூறினார்கள்.நூல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம். 723
அபு ஹூரைரா அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான்உங்களுக்கு முன்பே சென்று கவ்ஸரின் 
அருகேஉங்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அதில்ஒருமுறை குடித்தால் 
தாகமென்பதே ஏற்படாது”(நூல்: திர்மிதி)
எச்சரிக்கையும், சோபனமும்:
இன்றைய விஞ்ஞானிகள் தண்ணீரை ஆய்வுசெய்து பூமி படைக்கப்பட்ட நாள் முதல்இன்றுவரை பூமியிலுள்ள மொத்த தண்ணீரின் கன அளவு மாறவே இல்லை 
என்றுகூறுகிறார்கள் ஆனாலும், தண்ணீர் உலகத்தில்மிகப்பெரும் பிரச்சனையாக 
உருவெடுத்துள்ளதைபார்க்க முடிகிறது.
வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகியதண்ணீரின் பயன்பாட்டை தொடர்ந்து 
அனுபவிக்கவேண்டுமென்றால் இஸ்லாம் கூறுகிறஆலோசனைகளையும்,
 எச்சரிக்கைகளையும்ஒட்டு மொத்த மனித சமூகமும் பின்பற்றி நடக்கவேண்டும்.
வீண் விரயம் கூடாது.
உண்ணுங்கள், பருகுங்கள்; பருகுங்கள்,ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்!
திண்ணமாகஅல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.அல் குர் ஆன் : 7:32
ஒரு சமயம் ஸஅத் (ரலி) எனும்நபித்தோழரிடம் ஓடும் நதியில் நீர் உளூச்செய்தாலும் விரயம் செய்யாதீர் என நபி (ஸல்)அவர்கள் எச்சரித்தார்கள்.மாசுபடுத்துதல் கூடாது:
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்,குளம், ஏரி, குட்டை போன்ற் நீர் நிலைகளில்
சிறுநீர் கழிப்பதையும், அசுத்தம் செய்வதையும்நபி (ஸல்) அவர்கள் தடை 
செய்துள்ளார்கள். அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொருஅறிவிப்பில், மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர்நிலைகளில் (ஆறு, குளம்) போன்றவற்றில் 
சிறுநீர்கழிக்கவும், மாசுபடுத்தவும் வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் 
எச்சரித்தார்கள்நூல்: ரியானாஸ்  ஸாலிஹீன்; பக்கம் 667
இறுதியாக..
அல்லாஹ் வழங்கியிருக்கின்ற எந்தவொருஅருட்கொடையும் நம்மிடம்
 இருந்துபிடுங்கப்படாமல் இருக்க வேண்டுமானால்படைத்த இறைவனுக்கு நாம் 
நன்றியாளர்களாகஇருக்க வேண்டும்.
நீங்கள் நன்றியுணர்வோடு நடந்துகொள்வீர்களானால் நாம் (நமதுஅருட்கொடைகளை) இன்னும் அதிகப்படுத்திதருவோம்அல்குர் ஆன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தண்ணீர் அருந்திய பின் பின்வரும் துஆவை
ஓதுவார்கள் என இமாம் நவபீ (ரஹ்) அவர்கள்கூறுகின்றார்கள்,
இறைவா! நீயே புகழுகுறியவன்,உன்னுடைய தனிபெரும் கருணையால் தான்
 நீஎங்களுக்கு சுவையான தண்ணீரைவழங்குகின்றாய்! எங்கள் பாவங்களை நீ மனதில்கொண்டிருப்பாயேயானால் நீ உப்பு கரிக்கும்நீராகவும், கசப்பான நீராகவும் 
ஆக்கியிருப்பாய்
எனவே,மாபெரும் அருட்கொடையான தண்ணீரைநாம் ஒவ்வொரு முறை பருகும் போதும், பயன்படுத்தும் போதும் அது நம்மை விட்டும்நீங்காமலிருக்க வல்ல ரஹ்மானுக்குநன்றிணர்வை வெளிப்படுத்துகிற நன் மக்களாகஅல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!ஆமின்


கருத்துகள்

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....

    கண்ணியம் நிறைந்த தோழரே! நீங்கள் பதிவு செய்திருக்கும் இந்த பதிவு vellimedaiplus.blogspot.com எனும் தளத்தில் இருந்து காப்பி செய்யப்பட்டது. உங்களின் சொந்த பதிவு போல போட்டிருக்கின்றீர்கள். தயவு செய்து இது போன்ற செயலை தவிர்ப்பது நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001