வாருங்கள் கொண்டாடுவோம் ஈதுல் அல்ஹா எனும் #தியாகப் #பெருநாளை

 🌸அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..🌼


👍 ❕


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


🔻இஸ்லாமிய மார்க்கத்தில் இரு ✌முக்கிய பண்டிகைகளில் 👉"ஈதுல் அள்ஹா"👈 (தியாகப் பெருநாள்) , இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த 👉"ஆப்ரஹாம்"👈என்று அழைக்கப்படும் இப்ராஹிம் (அலை) எனும் இறைத்தூதரின் தியாக வாழ்க்கை வரலாற்றை முன் மாதிரியாக கொண்டு கொண்டாடப்படுகிறது..


🔻எண்ணற்ற படைப்புகளை🐄🔥🌊🌔 #கடவுள்களாக வணங்கி அநியாயத்திலும் 🚫, அக்கிரமத்திலும் ஈடுபட்டு அமைதி 😣இழந்த மக்களை "#ஒன்றே👆#குலம் , #ஒருவனே ☝#இறைவன்"👈எனும் உயரிய கொள்கையின் பக்கம் இப்ராஹிம் நபி (அலை) 🗣அழைத்தார்.


🔺மேலும் எண்ணிலடங்கா♒ அருட்கொடைகளை👁👅👂🌎🌤⛈🌊 வழங்கிய இறைவனுக்கு முற்றிலும் 🚶🏻கட்டுப்பட்டு வாழ்வதன் மூலமே 👉நிலையற்ற 🌎இவ்வுலகிலும்👈 , இறப்பிற்கு 🛌பின் உள்ள 👉நிலையான 🌁சுவனத்திலும்👈அமைதியும் , வெற்றியும் கிடைக்கும் என தெளிவாக எடுத்து🗣கூறினார்.அதில் உறுதியாக நம்பிக்கை💪🏻 கொண்டார்.


♨இப்ராஹிம் நபி (அலை) அவர்களின் இறை நம்பிக்கையை பலவழிகளில் , பல நேரங்களில் படைத்த இறைவனான அல்லாஹ்☝ 👉🙇🏻சோதித்தான்.👈

இறைகட்டளையை நிறைவேற்ற எந்த வித கேள்வியும் , அவகாசமும் கேட்காமல் பல்வேறு துன்பங்களையும் சகித்துக்கொண்டு🙇🏻 பல தியாகங்களின் மூலம் தன் இறைநம்பிக்கையை இவர் 👍வெளிப்படுத்தினார்.


ஆம் ❗ இவ்வுலக வாழ்க்கை என்பது 👌நல்லவர்கள் யார் ❓ தீயவர்கள் 🚫யார் ❓என இனம் பிரிக்க இறைவன் நடத்துகின்ற தேர்வுக்கூடம்📋 என்கிறது  📕திருக்குர்ஆன்...


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


🔹இன்னும் இப்ராஹிம் நபி (அலை) அவர்களுக்கு 👉தள்ளாத வயதில்👈 வழங்கிய குழந்தையை🏃🏼 இறைவனுக்காக பலி 🔪 கொடுக்க வேண்டும் என இறைகட்டளை வர அதையும் நிறைவேற்ற சற்றும் அவர் 🚫தயங்கவில்லை.


🔚இறுதியில் அல்லாஹ் குழந்தைக்கு 🏃🏼பதிலாக ஒரு ஆட்டை 🐐 பலி 🔪கொடுக்க கட்டளையிட்டான்..❗


🔺விஞ்ஞானம் 📡🔬🔭 மிகவும் வழர்ந்த👌 இக்காலத்தில் கூட குழந்தைகளை 🔪🏃🏼🔪நரபலி கொடுக்கும் செய்திகள் 📰 அன்றாடம் வருகின்ற வேளையில் 👉அறியாமைக்காலம் , 👥 இருண்ட காலம் 👈என அழைக்கப்படுகின்ற 👉5000👈 வருடங்களுக்கு முன் 🔪நரபலிகள் சாதாரன விஷயம்.நரபலிகளை இறைவன் ஒருபோதும் 🚫அங்கீகரிக்கவில்லை 🚫என அன்றே நரபலிகளுக்கு முதன் முதலில் முற்றுப்புள்ளி 💠வைத்து முழுமையாக 👉ஒழித்துக்கட்டி புரட்சி செய்தது👈இஸ்லாம் மட்டுமே.❗


♨மேலும் ⏩"பலி கொடுக்கப்படும் பிராணிகளின் 🐐🐄 மாமிசமோ , இரத்தமோ🐾 அல்லாஹ்வை 🚫சென்றடைவதில்லை , மாறாக உங்களின் 👉இறையச்சமே👈அவனை சென்றடைகிறது"⏪ என்கிறது திருக்குர்ஆன்.


🔺பிராணிகளின் மாமிசத்தை ??‍👩‍👦‍👦உரவினர்கள் , 🙇🏻ஏழை எளியவர்கள் , அண்டை🏘 வீட்டுக்காரர்கள் என பலருக்கும் பகிர்ந்தளிக்கச் சொல்கிறது இஸ்லாம். ஆம் 👉இறைவன் எவரிடமிருந்தும் , எதனிடமிருந்தும் எந்தவிதமான #தேவையுமற்றவன்.👈 இறைகட்டளைக்கு கீழ்படிவதால் நன்மை👌 அனுபவிப்பது மனித 👨‍👩‍👦‍👦சமுதாயம் தானே தவிர இறைவன் அல்ல.அதுபோல் இறைகட்டளையை மீறுவதால் , நிராகரித்தால் அதனால் பாதிப்படைவதும் மனித 👨‍👩‍👦‍👦சமுதாயம் தான். 


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


அடுத்து , இந்த தியாகத் திருநாளை முன்னிட்டு 👉ஹஜ்👈எனப்படும் இஸ்லாத்தை ஐந்தாவது கடமையும் நிறைவேற்றப்படுகிறது.

இக்கடமை வசதியும்💵 , உடல் ஆரோக்கியமும் 💪🏻பெற்ற முஸ்லிம்களுக்கு வாழ்நாளில் 🌎ஒருமுறையேனும் நிறைவேற்றுவது கடமையாகும்.❗


🔹உலகின் முதல் முதலாக கட்டப்பட்ட இறை ஆலயமான 🕋#காஃபாவில் வைத்து ஹஜ் கடமையை நிறைவேற்றவேண்டும்.இந்த ஆலயத்தில் தான் உலகில்🌎 பல்வேறு நாடுகளில் வாழும் 👉25 லட்சத்திற்கும்👈 மேற்பட்ட முஸ்லிம்கள் " 👉#நாடு , #மொழி , #நிறம் , #இனம் , #ஏழை , #பணக்காரன் என எவ்வித பாகுபாடும் , பேதமும் இன்றி👈வருடந்தோறும் ஒரே இறைவனை☝வணங்க ஒன்று ❇கூடுகிறார்கள்..


🔰உலகில் வல்லரசாக முயலும் நமது நாடு, சாதி🌀 தீண்டாமையை ஒழிக்க ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து பிரச்சாரம் செய்தும் இன்றுவரை இக்கொடுமை 👉தலைவிரித்தாடுவதை அன்றாடம் செய்தித்தாள்களில்📰 காண்கிறோம்.👈

பொருளாதாரம் 💵மற்றும் நாகரீகத்தின் 🔭உச்சியல் நிற்கிறோம் என தன்னைதானே 😊பெருமைபடுத்திக்கொள்ளும் மேற்கத்தியநாடுகளில் இன்னும் #நிற வெறியால் 🙍🏿🙎பாதிக்கப்படும் #கருப்பர்கள் 🙍🏿ஏராளம்.இவ்வாறு உலகெங்கும் 🌎நிறவெறியால் 👉உயர்ந்தவன் , தாழ்ந்தவன் என்று மனவியாதியை ஆதிக்க குணத்தை தகர்த்தெரிந்து💪🏻 ,👈


⏩" மனிதர்கள் 👨‍👩‍அனைவரும் ஒரே தாய் ☝👩, தந்தைக்கு☝👱 பிறந்தவர்கள்.நீங்கள் அனைவரும் 👨‍👩‍👦 சகோதரர்கள் ❗ உண்மையில் உங்களில் சிறந்தவர் அதிக இறையச்சம் கொண்டவர்கள் தாம்"⏪ என்கிறது திருக்குர்ஆன்.


🔹 எனவே அனைத்து மனிதர்களும் 👨‍👩‍👦‍சமமே , இறைவனின் வழி காட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே 👈என்பதை ஹஜ் கடமை உணர்த்தி இந்த "உலக #சகோதரத்துவத்தை" நிலைநாட்டுவதன் மூலம் உலகில் நிலவும் 👉#தீண்டாமை , #நிறவெறி , #இனவெறி , #மொழிவெறி👈 என அனைத்து கொடுமைகளுக்கும் 😖சாவு மணி அடித்து 🔔உலக அமைதிக்கு🌎😊 இஸ்லாம் தெளிவாக வழி காட்டுகிறது.❗


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


🔰ஆகையால் பொதுவாக 👉பண்டிகைகள்👈 குறிப்பிட்ட மதத்தை தோற்றுவித்தவருக்காகவோ , புது வருடப்பிறப்பை முன்னிட்டோ , அல்லது சில கடவுளின் பிறந்த நாளை முன்னிட்டோ🎉 கொண்டாடப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய பண்டிக்கைகளின் போது தனி மனிதனுக்கும் , மனித சமுதாயத்திற்கு 👉கேடு விளைவிக்கும் செயல்கள் , ஆபத்தான வீண் விழையாட்டுகள் பணத்தை வீணாக்குதல் ,👈 கொண்டாட்டம் என்ற பெயரில் தொல்லை தருதல் என எவ்வித பாதிப்பும் இன்றி🚫 அமைதியாக , மகிழ்ச்சியாக😊 கொண்டாடப்படுவதை நடைமுறையில் காணலாம்.ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் : ⏩"யார் தனது நாவினாலும,🗣 கரத்தினாலும் 👐பிறருக்கு தீங்கு செய்யவில்லையோ அவனே 👉உண்மையான முஸ்லிம👈" .❗⏪


🔹 எனவே தியாகப் பெருநாளின் நோக்கத்தினை உணர்ந்து மகிழ்ச்சியாக😊 கொண்டாடுவோம்.❗


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


⏩👆"அல்லாஹ் உங்களை #அமைதி 💟 வீட்டின்பால் 🌉 அழைக்கிறான்.தான் நாடியோருக்கு நேரான🗻 பாதையை காட்டுகிறான்."⏪


📕உலகப்பொதுமறை குர்ஆன் 10:25


⏩(முஹம்மதே❕) "உமது இறைவனிடமிருந்து 👆 உமக்கு அருளப்பட்டதே 👍 #உண்மை'' என்று #கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். புகழுக்குரிய மிகைத்தவனின் #வழியை அது காட்டுகிறது.⏪


📕உலகப்பொதுமறைக் குர்ஆன்  34:6

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001