இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்
اَللهُ
الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ
مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ
[الروم: 54]
இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது; இஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது.
உலகில் சத்தியம் நிலைக்கவும், அசத்தியம் அழியவும், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே!
நபி
(ஸல்)அவர்கள்தமதுஏகத்துவப்பிரசாரத்தை, ஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, அதிகளவு விரும்பி ஏற்று, செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே!
நபி
(ஸல்)
அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் ஆத்மீக, பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது
ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும் பயன்படுவதில்லை என்பதையும் தாண்டி இஸ்லாத்திற்கும்முஸ்லிம்களுக்கும் பாதிப்பைஏற்படுத்திக்கொண்டிருப்பதுதான்
வேதனையிலும் வேதனை.
இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய
கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு
பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய
கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே
முஸ்லிம்கள் ஆகிய எம்மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை காணலாம்.
இத்தகைய காலச்சூழலில் வாழும் நம் இளைஞர்களை இஸ்லாமிய இலட்சிய வாதிகளாக உருவாக்குவதும் அவர்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் உயர்வு ஏற்படும் விதம் வழிநடத்துவதும் காலத்தின் அவசரத்தேவை.
ü 1)சிறுபிராயம், வயோதிகம் எனும் இரு பலவீனங்களுக்கிடையில் உள்ள ஒரு பலமான பருவமே வாலிபம்.
اَللهُ
الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ
مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ
அல்லாஹ் தான் (ஆரம்பத்தில்)பலஹீனமானநிலையில்படைக்கிறான்; பலஹீனத்திற்குப்பின்னர்,அவனேபலத்தை(யும்உங்களுக்கு)உண்டாக்குகிறன்;(அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன். 30:54
மேலுள்ள வசனதிலிருந்து, பருவ வயதை அடைந்ததிலிருந்தே வாலிபம் துவங்கி விடுகிறது என்பதை அறியலாம்.
வாலிபம் என்பது பருவமடைந்தது 15
முதல் துவங்கி நாற்பதாம் வயதில் நிறைவடைகிறது என்பதை விளங்கலாம்.
ü
2) வாலிபம்
என்பது இறைவனின் தனிப்பெரும் அருட்கொடை.
'உனக்கு, ஐந்து
விஷயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து
அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்’ என நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசமாக கூறினார்கள். அவை:
1. முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்.
2. நோய் வருமுன் உடலாரோக்கியத்தையும்.
3. வறுமை வருமுன் செல்வநிலையையும்'
4. அதிக வேலை பழுக்கள் வருமுன் ஓய்வு நேரத்தையும்.
5. மரணம் வருமுன் வாழ்க்கையையும்.
அறிவிப்பவர்
: இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : ஷுஅபுல்
ஈமான்.
ü 3)வாலிபம் குறித்து விசாரனை
வாலிபம்
தனிப்பெரும் அருட்கொடை என்பதால்தான் இறைவனின் அருட்கொடைகள் பற்றிய விசாரணையில் ]பொதுவாக வயது பற்றி ஒரு
விசாரணை இருந்தும்[ வாலிபம் குறித்தும் தனியொரு விசாரணை நடைபெறும் என வருகிறது.
'மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. என நபி
(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அவை:1. தனது
(உலக)
வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினான்?
3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்? அதை எவ்வாறு செலவழித்தான்?4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தான்?
அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரலி)நூல் : தபரானி.
ü 4) சுவனவாசிகள் வாலிபர்களாகவே இருப்பார்கள்
வாலிபம் தனிப்பெரும் அருட்கொடை என்பதால்தான் இறைவனின் அருளையும் சுகங்களையும் அனுபவிக்கும் சுவனவாசிகள், வாலிபர்களாகவே இருப்பர்
நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், "(இனி)
நீங்கள் ஆரோக்கியத்துடனேயே
இருப்பீர்கள்; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்; ஒருபோதும் இறக்கமாட்டீர்கள்.
இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்"
என்று அறிவிப்புச் செய்வார்.
"இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்"
(7:43)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 5457.
ü
5) இந்த
பருவத்தில் செய்யப்படும் அனைத்து நல்ல செயல்களுக்கும் அல்லாஹ்விடம் தனிப்பெரும் வெகுமதிகள் உண்டு.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின்
நிழலைத் தவிர வேறு நிழல்
இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு
பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் வளர்ந்த வாலிபர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு
படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான
ஒரு பெண் தவறான வழிக்குத்
தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும்
தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்:
ஸஹீஹுல் புஹாரி 660.
ü 6)இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் உயர்விலும் முற்காலத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்திருக்கிறது.
இஸ்லாத்தின் வரலாறுகளில் இளைஞர்களின் பங்களிப்பு.
இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் உயர்விலும்
முற்காலத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்திருக்கிறது. இஸ்லாத்துக்கு
அன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஆற்றிய பணியும் மகத்தான சேவகளின் துளிகளுமே இன்று பரந்த
விரிந்து கிளைவிட்டு காணப்படும் முஸ்லிம் சமூகம். அன்றைய இளைஞர்களிடம் காணப்பட்ட, தியாகம், வீரம், நல்லொழுக்கும்
இன்மையே இந்த பலமான முஸ்லிம் சமூகம் இன்று பலவீனமடைவதற்கான மிகமுக்கிய
காரணியாகும்.
ü சிந்து சமவெளியை
முஹம்மத் பின் காஸிம் கைப்பற்றிய போது அவர்களிம் வயது 17. பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தை முஹம்மத் பின் பாதிஹ்
கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது 23.
ü ஸ்பெயினை தாரிக்
பின் முறாத் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது 21. இது போன்ற வீரதீர செயல்களை செய்து இஸ்லாத்தின் வளர்சிக்கு தூண்களாக இருந்த
இளைஞர்கள் இன்று எமது சமூகத்தில் எங்கே?
ü நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு இஸ்லாத்தை
போதிப்பதற்காக அனுப்பப்பட்ட ஸஹாபி முஸ் அப் பின் உமைர் (ரழி) ஒரு இளைஞர்.
ü அபிசீனியாவுக்கு
முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த ஆண்களும், பெண்களும் இளைஞர்களும், யுவதிகளுமே
ஆவார்கள்.
ü யெமனுக்கு நீதிபதியாகவும், விரிவுறையாளராகவும்
அனுப்பட்ட முஆத் பின் ஜபல் (ரழி) ஒரு இளைஞர்.
ü மூத்த ஸஹாபாக்கள்
பங்கு பற்றிய ஒரு படையணிக்கு தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா பின் ஸைத் (ரழி) ஒரு
இளைஞர்.
ü அபூபக்கர் (ரழி) அவர்களது
காலத்தில் அல் – குர் ஆனை ஒன்றுதிரட்டும்
பணியில் பங்கு கொண்டர்வகளுள் பலர் இளைஞர்களே ஆவார்கள்.
ü இப்ராஹிம் (அலை)
அவர்கள் ஏகத்துவத்தை தனது தந்தைக்கு எத்திவைத்த பொழுது அவர்களின் வயது 14. சிலை வணங்கிகளின் சிலைகளை உடைத்த இவரை குர் ஆன் ஒரு
இளைஞர் என குறிபிடுகின்றது. அது மாத்திரமன்றி இறை நிரகரிப்பளார்கள் மற்றும்
நம்ரூத் போன்ற பல கொடுங்கோள் மன்னர்களுடன் போராடியதும் அவர்களது இளமை பருவத்திலே
ஆகும்.
ü யூஸுப் (அலை) அவர்கள் முகங்கொடுத்த இன்னொரன்ன துன்பங்களை, இன்னல்களை
தமது இளமை பருவத்திளே சந்தித்து அழகிய முறையில் வெற்றி கொண்டதையும் ஸூரா
யூஸுப்பில் அழகிய படிப்பினைகளாக குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம்.
ü
ஸுலைமான்
(அலை) துல்கர்னைன் (அலை) மூஸா (அலை) அவர்கள் தமது இளமை பருவத்தையே எல்லாம் வள்ள
அல்லாஹ்வுக்கே அர்பணித்திருப்பதை காணாலாம், ஸூரா கஃப் குறிப்பிடப்படும்
இளைஞர்களின் வரலாறு என பல்லாயிரம் படிப்பினைகளை கொண்டுள்ள எமது இன்றைய முன்மாதிரி
இளைஞர்கள் எங்கே?
ü
மது, மாது, அனாச்சாரம், அட்டூழியம், என
ஜாஹிலியத்தின் உச்ச நிலையில் அந்த குறைஷிக் குலத்தில் உத்தமராக வாழ்ந்த நபி
முஹம்மத் (ஸல்) அவர்களும் இளைஞர்களே.
ü
இஸ்லாம்
மார்கத்தை வளரப்பதற்கு தமது உயிர்களை தியாகம் செய்த, பல இன்னோரன்ன துன்பங்களை, இன்னல்களை
அனுபவித்த, நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுக்க முன்மாதிரிகளை அணுவளவும்
பிசகாது வாழ்ந்த ஸஹாப்பக்களும் இளைஞர்களே ஆவார்கள்.
ü அல் குர்ஆனுக்கு விளக்கமளிப்பதில் சிறந்து விளங்கிய ஒருவர்
தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நபித்தோழர்கள் அவரை அல் ஹப்ரு (அறிஞர்)
என்ற பெயர் கொண்டு அழைத்தனர். அவர் நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களைத் தேடிப்பிடிக்கக்
கூடியவராகக் காணப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவரது வயது
பதிமூன்று,
நபி (ஸல்) அவர்கள் அவர்களை ஆரம்பத்தில் ஆதரித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் நிராகரித்தவர்களில் அதிகமானோர் முதியவர்கள்
இளைஞர்களின் இன்றய நிலை
ü 1)சமீப காலமாக கலாச்சார சீரழிவுகளில் தங்களையும் இணைத்துக் கொள்ளும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் மாறிக் கொண்டிருக்கின்றது.
அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர் சமூகம் தங்களை ஈடுபடுத்தி, தங்களின் இஸ்லாமிய அடையாளங்களை இழந்து வரும் போக்கும் அதிகரித்திருக்கின்றது.
ü 2)ஹேர் ஸ்டைல்
இன்றய நவீன காலத்தில் நபிவழியை பின்பற்ற வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள் நடிகர்களின் வழியைப் பின்பற்றி தங்களின் ஹேர் ஸ்டைலை வித விதமாக அமைத்துக் கொள்கிறார்கள்
தலைமுடியையும்.தாடிமுடியையும் அழகு படு்த்த வேண்டும் தான் அதே நேரத்தில் அது நபி வழிக்கு மாற்றமாக இருந்து விடக்கூடாது.
தலைவிரி கோலமாக மஸ்ஜிதுக்கு வந்த ஒருவரை நபியவர்கள் முடிகளை சரிசெய்து வரும்படி கூறினார்கள்.
அதே போன்று போலிஸ் கட்டிங் போன்று பாதி முடியும் பாதி மொட்டையுமாக முடி வெட்டுவதை தடை செய்தார்கள்.
பாதி முடியை வெட்டி மீதப் பாதியை விட்டுவிடுவது யஹூதிகளின் பழக்கம் அவ்வாறு முடி வெட்டிய ஒரு சிறுவரை கண்ட நபியவர்கள் கண்டித்தார்கள்.அதை தடை செய்தார்கள்.
ü 3)போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல்:-
இன்றைய இளைஞர்களில் அதிகமானவர்கள் சூழல் தாக்கத்தின் காரணமாக விஸ்கி, பியர், ஹெரோயின், கஞ்சா, அபின், பீடா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை உபயோகிக்க பழகுகின்றனர்..
இன்று புதிய புதிய பெயர்களில் போதைப் பொருட்கள், விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இளைஞர்கள் அடிமையாகி தமது நிரந்தர இருப்பிடமாக நரகத்தை தெரிவு செய்துகொள்கின்றனர்.
ü 4.தீய நண்பர்களின் தாக்கம்:-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக கவனி(த்து தேர்ந்தெடு)க்கட்டும்.'
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்: அபூதாவூது).
ஒருவர் தான் யாருடன் பழகுகின்றேன் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தீய நண்பர்களின் தூண்டுதலே எமது நெறிபிறழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. இதனை நபியவர்கள் விளக்கி பின்வருமாறு கூறினார்கள்.
·
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து இரண்டிலொன்று உமக்கு உறுதியாக கிடைக்கும். (1) நீர் அதை விலைக்கு வாங்கலாம்: (2) அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய உடலையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!"அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 2101
குறிப்பாக ஒருசில இஸ்லாமிய பெண்களிடம் தீய நட்புகள் குடிகொண்டு ஈமானை இழக்கக்கூடய நிலைகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றது.
·
சிறந்த நண்பர்கள் யார் என்று கேட்டதற்கு நபியவர்கள் கூறிய பதில்
கெட்ட நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள் மறுமை நாளில் கைசேதப்படுவார்கள்.
يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ
اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا
“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”(25:28)
لَقَدْ اَضَلَّنِىْ عَنِ
الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا
“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.)(25:29)
ü 5) கலாச்சார சீரழிவிற்கு விதை தூவும் திரைப்படங்களைப் பார்த்தல்:-
இன்று அதிகமான இளைஞர்களின் நேரங்கள் சினிமாக்களினால் வீணடிக்கப்படுகின்றன.
ஓய்வு என்பது அல்லாஹ் எமக்கு அருளிய அருளாகும். அதனை இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். இன்றைய ஆய்வுகளின்படி ஒரு மாணவன் வாரத்தின் பாடசாலை நாட்களாகிய திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் 36 மணிகள்
தொலைக்காட்சியில் செலவழிப்பதாகவும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் இது இரு மடங்காக அதிகரிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் சினிமாக்களை பார்ப்பதுடன் நின்றுவிடாமல் அங்கு வரும் நடிகர்கள், நடிகைகள் போன்று நடை, உடை, பாவனைகளை அமைத்துக் கொள்வதும் எமது ஈமானையும் இஸ்ஸலாமிய பற்றுதலையும் பாதிக்கிறது என்பது பேரபத்தான ஒன்றல்லவா?
ü 6. பாடல்களையும் இசைகளையும் செவிமெடுத்தல்:-
பெரும்பாலான இளைஞர்கள் தமது கைகளில் உள்ள கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி விகாரமான பாடல்களை வீதி ஓரங்களிலும், தூக்கத்தின் முன்னரும் கேட்டு மகிழ்கின்றனர். இவை உண்மையில் எமது ஈமானை பறித்துவிடும். எவ்வாறு பாலைவன மணலில் நீரை ஊற்றுகின்ற போது மிக வேகமாக உறிஞ்சி எடுப்பது போன்று இசையானது எமது ஈமானை உறிஞ்சி எடுத்துவிடும்.
ü 7. கையடக்க தொலைபேசிகளை இணையத்தளங்களுடன் தொடர்பு கொண்டு மோசமான விஷயங்களை கண்டுகளித்தல்:-தவறாக பயன்படுத்தல்:-
இன்று கையடக்க தொலைபேசிகள் அவசியமான தொடர்புக்கு உதவியாக இருக்கும் அதே நேரத்தில் பல இளைஞர்களின் ஈமானிய உணர்வை அது சீரழித்துக் கொண்டிருக்கின்றது.
அதில் திரைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர். ஷைத்தானின் ஓசைகள் இளைஞர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
வீதி ஓரங்களில் சென்று கொண்டிருக்கின்ற வயது பெண்களை படம் எடுத்துக் கொள்கின்றனர். பெண்கள் இருக்கின்ற வீடுகளுக்கு அழைப்புகளை கொடுத்து தொல்லைப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் நரகத்தின் வேதனைக்கே எம்மைக் கொண்டு சேர்க்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
இணையத்தளங்களை தவறாக பயன்படுத்தி பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய படங்கள், காட்சிகளை பார்த்து ரசிக்கின்றனர். இதன் மூலமும் அல்லாஹ்வுடனான எமது நெருக்கம் துண்டிக்கப்படுகின்றது.கக
அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்பதுடன், விலக்கியவற்றை தவிர்ந்து வாழ வேண்டும். அதற்காக இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெற்று, அல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கையை, இளமை
பருவத்தை அல்லாஹ், இரசூலின் வழிகாட்டலுக்கேற்ப
பெரியவர்கள் சொல் கேட்டு இவ்வுலகிலும் மறுஉலகிலும் வெற்றிபெறுவதற்க்கு
முயற்சிக்க வேண்டும் .
பொதுவாகவே அறிவுரை கூறுவதையும் கண்டிப்பு செய்வதையும் இன்றைய இளைய தலைமுறை விரும்புவதே இல்லை. ஆனால் உளி படாத கற்கள் சிற்பமாகுவதில்லை. பட்டை தீட்டாத வைரங்கள் ஜொலிப்பதில்லை என்பது உண்மையே!
கருத்துகள்
கருத்துரையிடுக