நாம் நபிஸல் நேசிப்பது உண்மை தானா?

 


 

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

‏‏(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்… {அல்குர்ஆன் 3:31}

தொழுகை, நோன்பு, ஸதகா, போன்ற அமல்கள் நம் பாவங்களை போக்குவது போல், நபியை நேசிப்பதும் நம் பாவங்களை போக்கும் பொக்கிஷமாக விளங்குகிறது.

 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-

– « لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

உங்களில் ஒருவர் தன்னுடைய குழந்தையை விட இன்னும் தன்னுடைய பெற்றோரை விட இன்னும் அனைத்து மக்களை காட்டிலும் என்னை பிரியப்படுகின்ற வரை அவர் முழுமையான முஃமினாக மாட்டார் என்று பெருமானார் ﷺ அவர்கள் கூறினார்கள். [புஹாரி 15]

நபிகளாரை உயிருக்கும் மேலாக நேசிக்கும் 180 கோடிக்கும் அதிகமான அல்லாஹ்வின் அடியார்களுக்கும்

அல்லாஹ்வின் அன்பை பெற விரும்பினால் என்மீது அன்பு வையுங்கள், எனது அன்பை பெற விரும்பினால் என் குடும்பத்தார்களை மீது அன்பு வையுங்கள். [திர்மிதி 3814]

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார்.

1 அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது,2.ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,3.நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’  [புகாரி 16]                                                                                                  இறைத் தூதரை நேசிப்பவர்கள் தான் ஈமானிய சுவையை அனுபவிக்க முடியும் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடுகின்றார்கள்.

நபியின் மீது நம் நேசம் எந்த அளவு நிறைந்திருக்க வேண்டும்?

ஒரே வயிற்றில் பிறந்ததால் நாம் சகோதர, சகோதரிகளை நேசிக்கின்றோம்.சேர்ந்து வாழ்வதால் நாம் மனைவியை நேசிக்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை நேசிப்பதும், அவர்களின் மீதான நேசத்தை வெளிப்படுத்துவதும் சமீப காலமாக விமர்சனத்திற்குள்ளாகி இருப்பதை சமூகத்தில் காணமுடிகிறது.

அந்த அல்லாஹ் ஒருவனென்றும், அவனையே, அவனை மட்டுமே வணங்கவேண்டுமென்ற ஏகத்துவ நிழலின் கீழ் இளைப்பார வைத்தவர்கள் அவர்கள்.

நாம் அவர்களை நேசிப்பதற்கு  பல காரணங்கள் உண்டு. ஏனென்றால், அவர்கள்நம் உயிரினும் மேலானவர்கள்”…!

அவர்களின் உம்மத் எனும் பேறு பெற்ற சமுதாயத்தில் என்னையும், உங்களையும் நாம் கேட்டுப் பெறாமலே, மன்றாடிக் கேட்காமலே ஒரு அங்கமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றானே அந்த ஒன்றிற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் வள்ளல் நபி மீது நேசம் கொண்டிட கடமைப் பட்டிருக்கின்றோம்.

1.ஹிதாயத் எனும் நேர்வழிக்கு ஒளி {ஸல்} அவர்கள்.

ஹிஜ்ரி 8 ஷவ்வால் மாதம் நடைபெற்ற யுத்தம் தான் ஹுனைன் யுத்தமாகும். மக்கா வெற்றி அரபிகள் யாரும்எதிர்பார்த்திடாதவெற்றியாகும்.                                                         இதை அக்கம் பக்கத்திலுள்ள அநேக கூட்டத்தினர்கள் அதை ஒப்புக்கொள்ளமுடியாமல் ஹவாஸின், ஸகீஃப் ஆகிய கோத்திரத்தார்களின் தலைமையில் முஸ்லிம்களை எதிர்த்திட அணி திரண்டனர்.                                           

 முஸ்லிம்களின் மக்கா வெற்றியை ஏற்றுக்கொள்வதை பெரும் தன்மானப் பிரச்சனையாகவும், கண்ணியக்குறைவாகவும் கருதிய கைஸ், ஜுஷம், நஸ்ர், ஸஅத் இப்னு பக்ர், ஆகிய கோத்திரத்தாரும்கைகோர்த்துக் கொண்டனர்.                                               

 இறுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனீமத் பொருட்கள்கிடைத்தன.                                                         

கிட்டத்தட்ட ஆராயிரம் அடிமைகள், இருபத்தி நான்காயிரம் ஒட்டகைகள், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் ஊக்கியா வெள்ளிகள், கனீமத்தாக {வெற்றிப் பொருளாக} கிடைத்தன.   கனீமத் பொருட்களை மாநபி {ஸல்} அவர்கள் பங்கு வைத்த போது, இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் {ரலி}, அபூ சுஃப்யான் {ரலி} போன்றோருக்கும், இன்னும் சில முஹாஜிரீன்களுக்கும் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தார்கள்.                                         

 புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும்நிறையகொடுத்தார்கள்.                                         ஆனால், நீண்ட காலமாக தங்களோடு உற்ற துணையாக இருந்த அன்ஸாரிகளுக்கு அந்த அளவு வழங்கவில்லை.                          

 இதனால் மன வருத்தமடைந்த சில அன்ஸாரிகள் பலவாறாகப் பேசினர்.                                                        

அவர்களில் சிலர்அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி {ஸல்} அவர்கள் தங்களது கூட்டத்தினருக்கே வாரி வாரி வழங்குகின்றார்கள்என்று பேசினார்கள்.                                                     

 சூழ்நிலை வேறு விதமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த ஸஅத் இப்னு உப்பாதா {ரலி} அவர்கள் வேகமாக நபிகளாரிடம் வந்துஅன்ஸாரிகளில் சிலர் உங்களின் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்கு கிடைத்த கனீமத் பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும், ஏனைய கோத்திரத்தாருக்கும் வாரி வழங்குனீர்கள். ஆனால், அன்ஸாரிகளுக்கு அந்த அளவுக்கு நீங்கள் வழங்கவில்லை. இது தான் அவர்களின் மன வருத்தத்திற்கு காரணம்என்றார்கள்.  அப்போது நபி {ஸல்} அவர்கள்ஸஅதே! நீங்கள் அது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.                                  

நானும் எனது கூட்டத்தாரில் ஒருவன் தானே!” என்று ஸஅத் {ரலி} அவர்கள் பதில் கூறினார்கள்.                                   

உடனே நபி {ஸல்} அவர்கள்சரி எனக்காக உங்கள் கூட்டத்தார்களை தடாகத்திற்கருகே ஒன்று சேர்த்துவிட்டு என்னை வந்து அழையுங்கள்என்றார்கள்.                            

அங்கிருந்து வெளியேறிய ஸஅத் {ரலி} அவர்கள் உடனடியாக தமது கூட்டத்தாரிடம் வந்து குறிப்பிட்ட தடாகத்தில் ஒன்று கூடுமாறு கட்டளையிட்டார்கள்.                                        

அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கும் அங்கே அமர்வதற்கு ஸஅத் {ரலி} அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.                                         

  இது கேள்விப் பட்டு மேலும் சில முஹாஜிர்கள் அங்கு வந்தனர். ஆனால், ஸஅத் {ரலி} அவர்கள் கூட்டத்தில் பங்கெடுக்க அவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டார்கள்.                              

அனைவரும் ஒன்று சேர்ந்ததும், நபி {ஸல்} அவர்களிடம் சென்று ஸஅத் {ரலி} அவர்கள்வாருங்கள்! அல்லாஹ்வின் தூதரே! அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்என்றார்கள்.                                                    

   நபி {ஸல்} அவர்கள் அங்கு வந்ததும் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு! அன்ஸாரிகளே! உங்களைப் பற்றி என்னிடம் சொல்லப்பட்ட செய்தி உண்மையா? என் மீது நீங்கள்கோபம்அடைந்துள்ளீர்களாமே?...                                                        

 “ நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? அல்லாஹ் என்னைக் கொண்டு உங்களுக்கு நேர்வழி காட்டினான்.                                                               

  நீங்கள் வறியோர்களாக, ஏழைகளாக இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களை செல்வச் சீமான்களாக்கினான்.                  

 நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், எதிரிகளாகவும் இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கிடையே நேசத்தை ஏற்படுத்தினான்.” என்று கூறினார்கள். அதற்கு அன்ஸாரிகள்ஆம்! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கூறியதுமுற்றிலும்உண்மைதான்.”                                                       அல்லாஹ்வும் அவன் தூதரும் எங்கள் மீது பெருங் கணையோடும், பேருபகாரத்தோடும் நடந்து கொண்டனர்.” என்று கூறினார்கள்.                                                   

 பின்னர் மீண்டும் அன்ஸாரிகளை நோக்கி நபி {ஸல்} அவர்கள்! அன்ஸாரிகளே! நீங்கள் எனக்கு பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.                                                   

 அதற்கு அன்ஸாரிகள்அனைத்து கருணையும், பேருபகாரமும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது எனும் போது நாங்கள் உங்களிடம் என்ன பதில் கூறப் போகிறோம்?    என்றார்கள்.

 

              அதற்கு மாநபி {ஸல்} அவர்கள்அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பொய்ப்படுத்தப்பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் உங்களை உண்மை படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்ட நிலையில் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு உதவியும், உபகாரமும் செய்தோம். சொந்த மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் பெரும் சுமையுடன் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு ஆதரவளித்தோம்.” என்று ஒருவேளை நீங்கள் பதில் கூறலாம்.                                

 அப்படிக் கூறினால் அதுவும் உண்மைதான். அதையும் நாம்ஏற்றுக்கொள்கின்றோம்.                                         

  அன்ஸாரிகளே! இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திற்காகவா நீங்கள் என் மீது கோபப்பட்டீர்கள்?” ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். “மக்களில் சிலரின் இஸ்லாம் பூரணமாக வேண்டும் என்பதற்காக நான் அப்படி வாரி வாரி வழங்கினேன்.                  உங்களை உங்களது சங்கையான இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன். {உங்களது இஸ்லாம் மிகவும் வலிமை மிக்கது என்பதை நான் அறிவேன்}                                                                                                               அன்ஸாரிகளே! மற்ற மக்களெல்லாம் தமது இல்லங்களுக்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது, நீங்கள் உங்களது இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரையல்லவா அழைத்துச் செல்கின்றீர்கள்? உங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டாமா?”…                                                       

இந்த முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையாயின் நான் அன்ஸாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்.                              

 மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று, அன்ஸாரிகள் மட்டும் வேறு வழியில் செல்வார்களாயின் நான் அன்ஸாரிகளின் வழியில் தான் சென்றிருப்பேன்.                                                 

 யா அல்லாஹ்! அன்ஸாரிகளுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும், அவர்களின் சந்ததியினரின் சந்ததியினருக்கும் அருள் புரிவாயாக!”” என்று கூறி மாநபி {ஸல்} அவர்கள் தங்களது உரையை முடித்தார்கள்.                                               

 கேட்டுக் கொண்டிருந்த அன்ஸாரிகளெல்லாம் தங்களின் தாடிகள் நனையுமளவுக்கு அழுதார்கள்.                                   

அல்லாஹ்வின் தூதரே! எங்களது பங்கை நாங்கள் பொருந்திக் கொண்டோம்.                                                     

 நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைக் கொண்டு நாங்கள் திருப்தி அடைந்தோம்.” என்றார்கள்.                                    

 பின்னர் நபி {ஸல்} அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். அதன் பின்னர் அன்ஸாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்நூல்:தப்ரானீ, ஹதீஸ் எண்:3994, முஸ்னத் அப்து ஹுமைத்,         ஹதீஸ் எண்:923. அஹ்மத், ஹதீஸ் எண்:11153.

மேற்கூறப்பட்ட வரலாற்றில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? என்னைக் கொண்டு தானே அல்லாஹ் நேர்வழி காட்டினான்.” என்று அன்ஸாரிகளைப் பார்த்து மட்டும் கேட்க வில்லை. மாறாக, நம்மிடமும் தான் அந்தக் கேள்வி கேட்கப் படுவது போல் இருக்கிறது.                                                         

 ஆகவே, நேர்வழியின் பக்கம் நம்மை அழைத்துச் சென்றமைக்காக வேண்டி நாம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மீது நேசம் கொள்ள வேண்டாமா? …

2.நிரந்தர நரகிலிருந்து காத்தவர்கள் {ஸல்} அவர்கள்.

அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள்:

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணமாகிறது நெருப்பை மூட்டிய ஒரு மனிதனுக்கு உதாரணமாகும். அவன் நெருப்பை மூட்டினான். அதில் விட்டில் பூச்சிகளும், வெட்டுக்கிளிகளும் பறந்து வந்து வீழ்ந்தது. அவன் அவைகளை விரட்டிய போதும், தொடர்ந்து வந்த வண்ணமும், அதில் விழுந்த வண்ணமும் இருந்தன. நானும் அப்படித்தான் உங்களை நரகில் வீழ்வதிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன். நீங்களோ என்னை மிகைத்து விட்டு அதில் விழுந்து கொண்டிருக்கின்றீர்கள்நூல்: இப்னு ஹிப்பான், ஹதீஸ் எண்:6545. முஸ்லிம்,4242.

 3.அல்லாஹ்வின் பாதையை காண்பித்தவர்கள் {ஸல்} அவர்கள்.

முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும், மார்க்கத்திற்கும் மக்கா எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இல்லை என்று நினைத்த போது, அண்ணலார் முஸ்லிம்களை ஹபஷாவிற்கு இடம் பெயர்ந்திடுமாறு அனுப்பி வைத்தார்கள்.                                               அங்கு சென்ற முஸ்லிம்கள் மிக நிம்மதியோடு இருப்பதை தெரிந்து கொண்ட மக்கா தலைவர்கள், முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு அம்ருப்னுல் ஆஸ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆ ஆகிய வீரமும், தீரமும் நிறைந்த இருவரை ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷியைக் காண அனுப்பி வைக்கின்றார்கள்.                                           

 அங்கு நடை பெற்ற உரையாடல் நமக்கெல்லாம் தெரியும். என்றாலும், மக்காவில் இருந்து வந்த இருவரும் சுமத்துகின்ற குற்றச்சாட்டு குறித்து நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என்று முஸ்லிம்களைப் பார்த்து மன்னர் நஜ்ஜாஷி கேட்ட போது…        ஜஅஃபர் இப்னு அபூதாலிப் {ரலி} அவர்கள் சொன்ன பதில் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.              நஜ்ஜாஷி மன்னர் கேள்வியை கேட்டதும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜஅஃபர் இப்னு அபூதாலிப் {ரலி} அவர்களைப் பதில் கூறுமாறு அழைத்தனர்.                          ஜஅஃபர் {ரலி} அவர்கள் இப்படிப் பதில் கூறினார்கள்: “அரசே! நாங்கள் மடமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தோம்; கற்சிலைகளை இறைவனாக நினைத்து வழிபட்டு வந்தோம்;                       செத்த பிராணிகளை உண்டு வந்தோம்; மானக்கேடான காரியங்களைச் செய்து வந்தோம்; உறவுகளை உதறித் தள்ளி, அண்டை வீட்டாருக்கு துன்பம் விளைவித்தோம்; எங்களிலுள்ள எளியோரை வலியோர்கள் அநீதியால் ஆட்டிப் படைத்தோம்.                  இப்படியே நாங்கள் சீர்கெட்டுப் போயிருந்த கால கட்டத்தில் தான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்கு தூதராக அனுப்பினான்.                                                        அவரின் பாரம்பரியத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை உடையவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு விளங்கியிருந்தோம்.                                       “ நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது முன்னோர்களும் தெய்வங்களாக கருதி வழிபட்டு வந்த கற்சிலைகளை விட்டும் விலகி இருக்க வேண்டும்; சத்தியத்தையே சான்று பகர வேண்டும்;                              அடைக்கலப் பொருட்களை உரியவர்களிடம் வழங்க வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டும்; அண்டை அயலரோடு அழகிய முறியில் நடந்து கொள்ள வேண்டும்;                                                                                       அல்லாஹ் தடை செய்தவற்றையும், கொலை மற்றும் மாபாதகக் குற்றங்களை விட்டும் விலக வேண்டும்என அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்.                                                   மேலும், மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அநாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்களின் மீது அபாண்டம் சுமத்துதல் ஆகிவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார்.                 அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு     தொழ வேண்டும்; ஏழைகளின் உரிமைகளை  கொடுக்க   வேண்டும்; என்றும் அத்தூதர் எங்களுக்கு ஆணையிட்டார்.             எனவே நாங்கள் அவரை உண்மையாளராக ஏற்றுக் கொண்டோம்; அவரை விசுவாசித்தோம்; “அவர் எங்களுக்கு அறிமுகப் படுத்திய அல்லாஹ்வின் பாதையைமார்க்கத்தைப் பின் பற்றினோம்;” அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; இணை வைப்பதை விட்டொழித்தோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம்.                                                     

 இதனால் எங்களது இனத்தவர்கள் எங்கள் மீது அத்துமீறினர்; எங்களுக்கு சொல்லெனா துன்பம் விளைவித்தனர்; எங்களை மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திருப்பிட முயற்சி மேற்கொண்டனர்.                    எங்களின் உயிருக்கும் மார்க்கத்திற்கும் அவர்கள் தடையான போது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் புகலிடம் தேடி வந்தோம்.                அரசே! இங்கு எங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என நாங்கள் நம்புகின்றோம்என்று கூறி ஜஅஃபர் இப்னு அபூ தாலிப் {ரலி} அவர்கள் விளக்கம் கூறிமுடித்தார்கள்.

நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:68,69,70.

 இங்கே ஜஅஃபர் {ரலி} அவர்கள், ”மாநபி {ஸல்} அவர்கள் தான்  எங்களுக்கு அல்லாஹ்வின் பாதையை காட்டித்தந்தவர்கள்.              நாங்கள் எவைகளையெல்லாம் தீயவைகள் என விளங்கிக் கொண்டோமோ அவைகளையும், நாங்கள் எவைகளையெல்லாம் நன்மை தரும் செயல்களாக தெரிந்து கொண்டோமோ அவைகளையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தான்எங்களுக்குக் காண்பித்துத் தந்தார்கள்என அழகாக சுட்டிக் காட்டுகின்றார்கள்.

 4.ஈமானின் பூரணத்துவம் பெற்றுத்தருபவர்கள் {ஸல்} அவர்கள்.

அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள்:

 நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ உங்களின் எவருடைய ஈமானும்இறை நம்பிக்கையும் பூரணத்துவம் அடையாது. நான் ஒருவருடைய பிள்ளையை விடவும், அவரின் தாய், தந்தயரை விடவும், உலக மக்கள் அனைவரையும் விடவும் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை

 நூல்: புகாரி,ஹதீஸ் எண்:32, முஸ்லிம், ஹதீஸ் எண்:33

5.ஈமானின் சுவையை உணரச் செய்பவர்கள் {ஸல்} அவர்கள்.

அப்பாஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

 நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ எவர் அல்லாஹ்வை தமது {ரப்} அதிபதியாகவும், இஸ்லாத்தைத் தாம் பின் பற்றும் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மத் {ஸல்} அவர்களை நபியாகவும், வழிகாட்டும் தலைவராகவும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றாரோ அவரே ஈமானின் {இறை நம்பிக்கையின்} சுவையை இன்பத்தைச் சுவைத்தவராகிறார்.”

நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்:34.

அல்லாஹ்வுக்கு முழுமையாக பணிந்து நடந்து, இஸ்லாமிய ஷரீஆவை பின்பற்றி வாழ்ந்து, மாநபி {ஸல்} அவர்களை தமக்கு வழி காட்ட வந்த இறுதித்தூதர் என்று உளப்பூர்வமாக ஏற்று திருப்தி கொள்ளும் மனிதன் இந்த முடிவுக்கு வந்து விடுகின்றான்.                  அதாவது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தான் பணிந்து வாழப்போவதில்லை என்றும், எந்நேரத்திலும் எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறியினையே கடைபிடிப்பதென்றும், பெருமானார் {ஸல்} அவர்களைத் தவிர வேறெந்த மனிதனின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் தான் வாழப்போவதில்லை என்றும் அவன் முடிவுக்கு வந்து விடுகின்றான்.                                             இப்படியொரு அசாத்திய நிலையை அடைந்து விட்ட மனிதன் ஈமானின்இறை நம்பிக்கையின் சுவையைச் சுவைத்து விடுகின்றான்.

6.உலக மக்களின் அருட்கொடை {ஸல்} அவர்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

 ”நபியே! நாம் உம்மை உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்”.

அல்குர்ஆன்:21:107.

 இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ {ரஹ்} அவர்கள் மேற்கூறிய இறை வசனத்திற்கு விளக்கம் தருகிற போது…“உலக மக்கள் அனைவருமே நபிகளாரின் தூதுத்துவத்தின் மூலம் பயனடைகின்றனர். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களைப் பின் பற்றுபவர்கள் உலகிலும், மறுமையிலும் பெரும்பயனைஅடைகின்றனர்.                                                      அண்ணலாரை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களை எதிர்ப்பவர்கள் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், எதிர்த்துக் கொண்டு இருக்கும் ஒவ்வொரு கணமும் பாவத்தை தான் சுமக்கின்றனர்.                             ஒரு வகையில், அவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். ஏனெனில், உலகின் அவர்களின் வாழ்நாள் மறுமையில் அவர்களின் தண்டனையை அதிகரிக்கும். இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு அருட்கொடை தான்.

 

 7.முஸ்லிம்உம்மத்தின் மீது அளவு கடந்த பாசம் உள்ளவர்கள் {ஸல்} அவர்கள்.

 அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள்அறிவிக்கின்றார்கள்:                                                         ”நபி {ஸல்} அவர்கள், இப்ராஹீம் {அலை} அவர்கள் பிரார்த்தித்ததாக கூறும்என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டில் ஆழ்த்திவிட்டன; (என்னுடைய வழித்தோன்றல்களும் இவற்றால் வழி கெடலாம்; எனவே, அவர்களில்) எவர்கள் என்னுடைய வழியின் படி நடந்தார்களோ, அவர்கள் தாம் திண்ணமாக என்னைச் சார்ந்தவர்கள். எவர்கள் எனக்கு முரணான வழியினை மேற்கொண்டார்களோ அவர்களின் விஷயத்தில் திண்ணமாக நீ பெரிதும் மன்னிப்போனாகவும், கருணையாளனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன்:14:36.) எனும் வசனத்தை ஓதும் போதும்,                                              

 ஈஸா {அலை} அவர்கள் அல்லாஹ்விடத்தில் முறையிட்டதாகக் கூறும்நீ அவர்களுக்கு தண்டனை அளித்தால்  அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடிமைகளே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும் அவர்கள் உன்னுடைய அடிமைகளே!) நீயே யாவற்றையும் மிகைத்தோனுமாகவும், நுண்ணறிவு படைத்தோனுமாகவும் இருக்கின்றாய்”. (அல்குர்ஆன்:5:118.) எனும் இறை வசனத்தை ஓதும் போதும்,                                                       

 ”கைகளை உயர்த்தி அழுதவர்களாக யா அல்லாஹ்! என் உம்மத்தின் நிலை என்ன? என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ஜிப்ரயீல் {அலை} அவர்களை அனுப்பி ஏன் என்னுடைய ஹபீப் அழுகிறார்? என்ன காரணம் என்று கேட்டு வரச் சொன்னானாம்.  ஜிப்ரயீல் {அலை} அவர்கள் வந்து அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் வந்திருக்கின்றேன்,                                                    

உங்கள் அழுகைக்கான காரணம் என்ன வென்று அல்லாஹ் கேட்டு வரச் சொல்லி அனுப்பியுள்ளான் என்றார்களாம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நடந்தவற்றை ஜிப்ரயீல் {அலை} அவர்களிடம் கூறினார்களாம்.                                         

 அதற்கு அல்லாஹ் ஜிப்ரயீல் {அலை} அவர்களிடம்முஹம்மதே! உம் உம்மத்தார்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். உமக்கு அல்லாஹ் தீங்கேதும் இழைக்க மாட்டான்என்று நான் கூறியதாக முஹம்மத் {ஸல்} அவர்களிடம் கூறிவிடும் என்றான்அப்படியே ஜிப்ரயீல் {அலை} அவர்கள் தங்களிடம் கூறியதாக நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.     நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்: 468.

அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் உடனே பதிலளிக்கும் ஒரு துஆவை நல்கியிருக்கின்றான். அனைத்து நபிமார்களும் அதை பயன் படுத்திவிட்டனர். ஆனால், நான் நாளை மறுமை நாளில் என் உம்மத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்காத நிலையில் மரணித்து விட்டவர்களுக்கு பரிந்துரை செய்வதற்காக பிற்படுத்தி வைத்திருக்கின்றேன்என்றார்கள்.   நூல்: மிர்காதுல் மஃபாதீஹ், 9/1523.

 7. நம் உயிரை விட மேலானவர்கள் {ஸல்} அவர்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

 திண்ணமாக, இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட நபி {ஸல்} அவர்கள் தான் முன்னுரிமை பெற்றவராவார்கள். மேலும், நபி{ஸல்}அவர்களின்பரிசுத்தமனைவியர்அவர்களுக்குஅன்னையராவார்கள்.”                               (அல்குர்ஆன்:33:6.)

 

8. நம்மை சந்திக்கத் துடிக்கும் நல் உள்ளம் {ஸல்} அவர்கள்.

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் போதுநான் என் சகோதரர்களைக் காண ஆவலாக இருக்கின்றேன் என்றார்கள்.                                          

அப்போது நபித்தோழர்கள்அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களின் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள்.               அதற்கு நபி {ஸல்} அவர்கள்இல்லை, நீங்கள் இல்லை. நீங்கள் என் தோழர்கள். என் சகோதரர்கள் என்று நான் சொன்னது உங்களுக்கு பின்னால் வருகின்ற என் மீது நேசம் வத்திருக்கின்ற என் உம்மத்தினர்கள்என்று நபி {ஸல்} பதில் கூறினார்கள்நூல்: முஸ்லிம்.

   9. நம் மீது பொழியப்பட்ட பேருபகாரம் {ஸல்} அவர்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

 “திண்ணமாக, அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருபகாரம் புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைபடுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கற்றுக் கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில் தான் இருந்தார்கள்.”                     (அல்குர்ஆன்:3:164.)

10.மக்கள் ஈடேற்றம் பெற தம்மையே அர்ப்பணித்தவர்கள் {ஸல்} அவர்கள்.

 அல்லாஹ் கூறுகின்றான்: “ நபியே! இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே சென்று, கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக் கொள்வீர் போல் இருக்கிறதே! 18:6)

இதற்காக மட்டுமல்ல, இன்னும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கின்றன அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மீது நாம் நேசம் வைத்திட.. பிரியம் வைத்திட

ü நபித்தோழர்களின் வரை முறையற்ற நேசம்

1.ஸவ்பான் {ரலி அவர்களின் நேசம்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால் விலைக்கு வாங்கி உரிமை விடப்பட்ட அடிமை தான் ஸவ்பான் {ரலி} அவர்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் பணியாளராக பரிணமித்தவர்கள்.                      நபிகளார் {ஸல்} அவர்கள் ஊரில் இருந்தாலும், பிரயாணத்தில் இருந்தாலும் நபிகளாருடனேயே தங்களின் பெரும் பாலான நேரங்களைச் செலவிட்டவர்கள்.  நபிகளாரின் மீது அளவு கடந்த நேசமும், காதலும் கொண்டிருந்தார்கள்.                                              

 ஒரு நாள் ஸவ்பான் {ரலி} அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் தர்பாருக்கு வருகை தருகின்றார்கள். அவரின் நிலை கண்டு மாநபி {ஸல்} அவர்கள் கவலையுற்றவர்களாக, என்ன ஸவ்பான் இந்த நிலை? உடலெல்லாம் நிறம் மாறி மஞ்சனித்து இருக்கிறதே? ஏன்? என்று கேட்டார்கள்.                                         அதற்கு, ”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நோயோ, அல்லது உடலில் ஏற்பட்ட நோவினையின் காரணமாகவோ, என் நிலை இப்படியாகவில்லை. மாறாக, உங்களைக் காணாத போது எனக்கு கடுமையான மனக்கவலையும், கஷ்டமான இந்த நிலையும் ஏற்படுகிறது.”                                                              மீண்டும் உங்களை நான் பார்த்து விட்டேன் என்றால் நான் சகஜ நிலைக்கு திரும்பி விடுகின்றேன்.  இந்த உலகத்தில் இப்படி என்றால் நாளை மறுமையில், என்ன நடக்கும் என சிந்தித்தாலே நான் இந்த நிலைக்கு உள்ளாகிவிடுறேன். என்னை கவலையும் சூழ்ந்து கொள்கின்றது.                                                         

ஏனெனில், நாளை மறுமையில் ஒரு வேளை நான் சுவனவாசியாகி, உங்களைப் பார்க்க வேண்டுமென நான் ஆவல் கொண்டால் அது நடக்குமா? நீங்களோ உயர்வான இடத்தில், உயர்ந்தோர்களான நபிமார்களோடு வீற்றிருப்பீர்கள்.                            நானோ குறைவான அந்தஸ்தோடு சுவனத்தில் எங்கோ ஓர் மூலையில் இருப்பேன். உங்களைப் பார்க்க இயலுமா? அல்லாஹ்வின் தூதரே!...,                                                                 

 ஒரு வேளை நான் சுவனவாசியாக இல்லையெனில், ஒருக்காலமும் உங்களைக் காண முடியாதே அல்லாஹ்வின் தூதரே! என்று கவலை தோய்ந்த முகத்துடன் பதில் கூறினார்கள்.     அப்போது அல்லாஹ்எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறை வழியில் உயிர்த்தியாகம் செய்தவர்கள், நல்லோர்களான உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்! இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும், (இந்த மக்களுடைய) உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அல்குர்ஆன்:4:69,70. ஆகிய இறை வசனங்களை இறக்கி வைத்தான்.                 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களுக்கு இந்த இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். என்று அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்.            நூல்:தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அல் குர்துபீ. துர்ருல் மன்ஸூர், பாகம்:2, பக்கம்:182.

                    

அப்துல்லாஹ் துல் பிஜாதைன் ரலி (அப்துல் உஸ்ஸா)  

அவர்களின் நேசம்.

உள்ளத்தை உருக்கும்இந்த உண்மைச் சம்பவம்           

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் அவர் பெயர் அப்துல் உஸ்ஸா. உஸ்ஸாவின் அடிமை என்று பொருள். உஸ்ஸா என்பது சிலையின் பெயர்.16 வயது வாலிபர்.

மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே இருந்தமாசானிய்யாகோத்திரத்தைச் சேர்ந்தவர். செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர். உயர்தர உடை. பயணிக்க இரண்டு குதிரைகள். பெற்றோர் இருக்கவில்லை.சிறிய தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்தார்.

ஹிஜ்ரத்எனும் நாடுதுறத்தலின்போது அனேக நபித்தோழர்கள் இவர் வசித்த கிராமம் வழியாகத்தான் மதீனாவுக்குச் சென்றனர்.அப்போது முஹாஜிர் தோழர்கள் ஓதிய அல்குர்ஆன் வசனங்களை இவர் செவியுறுகின்றார். இஸ்லாத்தை ஏற்கின்றார்.

ஒவ்வொரு நாளும் அன்றைய தினம் மக்காவிலிருந்து மதீனா நோக்கி செல்பவரிடம் இருந்து அல்குர்ஆன் வசனங்களைக் கற்றுக்கொள்ள ஆவலுடன் பாலைவனத்திற்கு ஓடிவருவார்,

          குதிரையிலும், ஒட்டகங்களிலும் செல்லும் தோழர்களுக்குப் பின்னால் சென்று, “ சற்று நில்லுங்கள் ! உங்களுக்குத் தெரிந்த குர்ஆன் வசனங்களைச் சொல்லித் தாருங்கள் !” என்று கேட்டவாறு ஓடுவார்.

இங்கு ஏன் இருக்கிறாய்? மதீனாவுக்கு வா. அங்குதான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருக்கின்றார்கள்என்று அவர்கள் கூற,

      என் சிறிய தந்தையை விட்டுவிட்டா? அவருக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவரையும் அழைத்துக் கொண்டுதான் நான் மதீனா வருவேன்என்று இவர் கூறுவார்.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தன் கிராமத்தில் தன்னந்தனியாக எவருக்கும் தெரியாமல் ஒரு முஸ்லிமாக வாழ்ந்தார். ஊரே சிலை வணக்கத்தில் ஈடுபட ...இவர் மட்டும் தனிமையில் எவரும் பார்க்காவண்ணம் பாலைவனத்திற்கு படைத்த இறைவனை வணங்க வருவார்.

ஒவ்வொரு நாளும் தன் சிறிய தந்தையிடம் வந்துமுஹம்மத் என்பவரைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். அவர் அல்லாஹ்வின் தூதர்.அவர் இப்படி இப்படிக் கூறுகிறார்,” என்று சொல்லி குர்ஆனில் உள்ள வசனங்களை ஓதிக்காட்டுவார்.பயன் இல்லை.மோசமான ஏச்சு பேச்சுக்களே கிடைத்தன.

மூன்று  ஆண்டுகள் தன்னந்தனியாக... ஊரில் இவர் மட்டும் முஸ்லிமாக...! என்ன ஓர் உறுதி...! என்ன ஒரு நிலைகுலையாமை..! இங்கு நான் மட்டும்தானே முஸ்லிம் என்று சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டிருக்கவில்லை. சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, நான் மட்டும் எப்படி உறுதியுடன் இருக்க முடியும் என்று பின் வாங்கவில்லை.      

ஒரு தீர்மானத்துடன் ஒரு நாள் சிறிய தந்தையிடம் வந்து, “ சிறிய தந்தையே..! இறைத்தூதரைச் சந்திக்க என் இதயம் துடிக்கிறது. தாங்கள் என்னைத் தாமதப்படுத்துகிறீர்கள். நான் முஸ்லிமாகிவிட்டது உங்களுக்குத் தெரியும். உங்களையும் அழைத்துக் கொண்டுதான் மதீனா செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் பயன் இல்லை. நான் மட்டும் செல்கிறேன். இதைத் தெரிவிக்கவே இப்போது வந்தேன்என்றார்.

இஸ்லாம்தான் உனக்கு முக்கியம் என்றால்... உன் சொத்து எதுவும் உனக்குக் கிடைக்காதுஎன்ற பதிலே வந்தது சிறிய தந்தையிடமிருந்து.

 விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள், அல்லாஹ்வும்,ரசூலும் எனக்குப் போதும்என்றார் அப்துல் உஸ்ஸா.

உறுதியும் நிலைகுலையாமையும்:

மதீனா செல்வதில் தீவிரம் காட்டியபோது... சிறிய தந்தை வெறுமனே விட்டுவிடவில்லை.அவரின் செல்வங்களைப் பிடுங்கிக்கொண்டார்.. ”செல்வம்தானே வேண்டும்..வைத்துக்கொள்ளுங்கள்..” என்று அனைத்தையும் விட்டு விட்டு குதிரையில் ஏறினார்.

சிறிய தந்தை அழைத்து,“அப்துல் உஸ்ஸா ! நீ பயணிக்கும் இந்தக் குதிரை..?” என்றார்.

  குதிரையும் வேண்டுமா.. இதோ எடுத்துக்கொள்ளுங்கள்.”

விடவில்லை சிறிய தந்தை, அப்துல் உஸ்ஸா !  நீ அணிந்திருக்கும் விலை உயர்ந்த ஆடை..? என்று நினைவுபடுத்தினார்.

 இதுவுமா  வேண்டும்..? வைத்துக்கொள்ளுங்கள்..” என்று அணிந்திருந்த ஆடையையும் அவிழ்த்துக் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

இஸ்லாத்தை ஏற்றதால்தானே இத்தனை இழப்பும்..? ஈமான் கொண்டதால்தானே இத்தனை துயரமும்..? மதீனாவும் வேண்டாம்; இஸ்லாமும் வேண்டாம்.. நபியைச் சந்திக்கவும் வேண்டாம்.. என்று நினைத்தாரா? இல்லை...

வீட்டை விட்டு வெளியே வந்தவர் தெருவோரம் கிடந்த ஒரு கம்பளி ஆடையைக் கண்டெடுத்து அதனை இரண்டாகக் கிழித்து அணிந்தவாறு அங்கிருந்து புறப்பட்டு விட்டார் மதீனாவை நோக்கி..நபியைக் காண.

மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்க ஒரு வித்தியாசமான கோலத்தில் நபிக்கு முன் வருகை தருகிறார். முதன்முதலாக நபியைக் கண்களால் காண்கிறார்,

நபி (ஸல்) கேட்ட முதல் கேள்வியேயார் நீங்கள் ? ஏன் இப்படி ஆடை அணிந்துள்ளீர்கள்? “ என்றுதான்.

தன் கதையை விளக்கி... தன் தாமதமான வருகைக்கான காரணம், சிறிய தந்தையே என்பதைக்கூறி.. “ மூன்று ஆண்டுகள் பொறுமை காத்தேன் இறைத்தூதர் அவர்களே! இனியும் முடியாது என்று முஸ்லிமாக உங்களிடம் வந்துள்ளேன்என்று தன் கதையைக் கூறினார்.

நபி (ஸல்) அவர்களுக்கோ வியப்பு, “ இப்படி நடந்ததா? அப்படி நடந்ததா? “ என்று அதிசயப்பட்டு கேட்க,

ஆம் இறைத்தூதர் அவர்களே!” என்று இவர் நடந்தது அத்தனையும் கூற, நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்: “ இன்று முதல் நீங்கள் அப்துல் உஸ்ஸா அல்ல!அப்துல்லாஹ் துல் பிஜாதைன்,

தாங்கள் அணிந்துள்ள இந்த இரண்டு துண்டுத் துணிகளுக்குப் பகரமாக சொர்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு உயர்ந்த ஒரு வீட்டையும்- அழகான ஆடைகளையும் தயார் செய்து வைத்துள்ளான்.

அதில் நீங்கள் விரும்பியதை அணியலாம், விரும்பியவற்றைச் சாப்பிடலாம்.

அதற்குப் பின் ஏழு ஆண்டுகள் மதீனாவிலேயே நபியுடன் இருக்கிறார்கள். ஒரு கண நேரம் கூட நபியை விட்டுப் பிரியவில்லை.

ஒருநாளாவது.... ஐயோ என் செல்வம் எல்லாம் போய்விட்டதேஎன்றோ, ‘என் சிறிய தந்தையைப் பார்க்கவேண்டும் என்றோ, ‘ஏன்தான் மதீனா வந்தேனோஎன்றோ அவர் யோசித்ததே இல்லை.பாறை போல் உறுதியாக இருந்தார்.

திருக்குர்ஆனுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தினார். நபிகளாரே ஆச்சர்யப்படும் அளவிற்கு தொழுகையில் குர்ஆனை அழகாக ஓதத் துவங்கினார்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ( ரலி ) தெரிவிக்கிறார்:

தபூக் போர்க் களத்திலிருந்து நாங்கள் திரும்பி வந்துகொண்டிருந்தோம்.ஒரு நாள் கூடாரத்தில் நான் தூங்கிக்கொண்டிருந்த பொது (கடுமையான இருளும்- குளிரும் அப்போது) இரவில் மண் தோண்டும் சப்தம் கேட்டு கண் விழித்தேன்.

படுக்கையில் நபி(ஸல்) அவர்களையோ, அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோரையோ காணவில்லை.கூடாரத்திலிருந்து வெளியே வந்தபோது தூரத்தில் மூன்று பேர் நிற்பது தெரிந்தது. அருகே போன போது அங்கே நபி(ஸல்) அவர்கள் ஒரு குழி தோண்டிக்கொண்டிருக்க ...மற்ற இருவரும் விளக்கு பிடித்துக் கொண்டிருந்தனர்.

நபி (ஸல்) அவர்களிடத்தில் ,” என்ன செய்கின்றீர்கள் இறைத்தூதர் அவர்களே ? ” என்று கேட்டேன்.

தலையை உயர்த்தி என்னைப் பார்த்த நபிகளாரின் கண்களில் கண்ணீர்,

உமது சகோதரர்  துல் பிஜாதைன் இன்றிரவு மரணமடைந்துவிட்டார்என்றார்கள் நபி (ஸல்).

நான் அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோரிடம்,” நபியைக் குழி தோண்ட விட்டு விட்டு நீங்கள் வெறுமனே நிற்கிறீர்களா?” என்று கேட்டேன்.

நான்தான் குழிதோண்டுவேன் என்று நபி (ஸல்)எங்களைத் தடுத்து விட்டார்கள்என அபூபக்கர் (ரலி) கூறினார்.

பின், நபி (ஸல்) அப்துல்லாஹ் துல் பிஜாதைனின் ஜனாஸாவைக் கொண்டுவருமாறு கூற...

அபுபக்கரும் (ரலி), உமரும் (ரலி) சற்று வேகமாகக் கொண்டுவர ,  நபி (ஸல்) பதற்றம் அடைந்தவர்களாகமெதுவாக... மெதுவாகக் கொண்டு வாருங்கள்.

இவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் நேசிக்கக்கூடியவராக இருந்தார்என்றார்கள்.

இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் கண்ணீர் கபன் துணி மீது விழுவதை நான் கண்டேன். பிறகு குழியில் உடலை வைத்து விட்டு, அங்கேயே நின்று இரு கைகளையும் வான் நோக்கி உயரத்தியவர்களாக,

யா அல்லாஹ் ! இந்த மாலை நேரம்  அப்துல்லாஹ் துல் பிஜாதைனை மனமாரப் பொருந்திக்கொண்டேன், நீயும் பொருந்திக் கொள்வாயாக!

யா அல்லாஹ் ! இவர் குர்ஆனை அழகாக ஓதக்கூடியவராகவும், உனது தூதரை நேசிக்கக்கூடியவராகவும் இருந்தார். நீ அவருக்கு அருள் பாலிப்பாயாக! “ என்று அழுத வண்ணமே பிரார்த்தனை செய்தார்கள்.

இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகின்றார்: “ அந்த இளைஞராக நான் இருந்திருக்கக் கூடாதா என்று அன்றைய தினம் நான் ஏங்கினேன் .” (அல்பிதாயா, அஹ்மத்)

கொண்ட கொள்கைக்காக இவர் எதிர்கொண்ட தியாகங்கள்தான் எவ்வளவு ..! இழப்புகள்தான் எத்தனை ,,! ஆயினும் ஒரு கண நேரம்கூட நிலை தடுமாறவில்லையே..! உறுதியை இழக்கவில்லையே..!

தன்னந்தனியாக ஒரு கிராமத்தில் வசித்த போதும், சொத்து சுகங்கள் அனைத்தையும் இழந்த போதும், ஊர் விட்டு ஊர் வந்து வசித்த போதும் .. எல்லாம் போயிற்றே என்று முனகவில்லை. நிலைகுலையாத் தன்மையையும் அவர் இழக்கவில்லை எனில், நிம்மதியையும் கண்டிப்பாக இழந்திருக்கமாட்டார்தானே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001