ஓரினச் சேர்க்கைபற்றி இஸ்லாம்




[லூத் (அலை) அவர்களின் சமுதாயம் அழிக்கப்பட்டது ஏன்? ]

ஓரினச் சேர்க்கை வழக்கில் இதுவரை நடந்தவை:
2001: ஓரினச் சேர்க்கை சட்டப் பூர்வமானதாக அறிவிக்க வேண்டும் என்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் 'நாஸ்' தன்னார்வ அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தது.
செப்டம்பர் 2004: டெல்லி ஐகோர்ட் 'நாஸ்' தன்னார்வ அமைப்பின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து மனுவை சீராய்வு செய்யக் கோரப்படுகிறது.
நவம்பர் 3, 2004: மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுகிறது.
டிசம்பர் 2004 : டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான'நாஸ்' தன்னார்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டை அனுகுகிறது.
ஏப்ரல் 3, 2006: ஓரினச் சேர்க்கையாளார்களின் கோரிக்கை மனுவை ஏற்குமாறு டெல்லி ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.
அக்டோபர் 4: ஓரினச் சேர்க்கைக்கு எதிராக பாரதீய ஜனதா மூத்த தலைவர் சிங்கால் தொடர்ந்த மனுவை டெல்லி ஐகோர்ட் ஏற்கிறது.
செப்டம்பர் 18, 2008: ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்கிறது.
செப்டம்பர் 25: மத்திய அரசு தங்கள் அடிப்படை உரிமைகளை அத்துமீற முடியாது என ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
செப்டம்பர் 26: இந்த பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகமும் இரு வேறு நிலைப்பாடுகளை தெரிவித்ததை அடுத்து டெல்லி ஐகோர்ட் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது.
செப்டம்பர் 26: தனது கருத்தை தெரிவித்த மத்திய அரசு இதனை சட்டப்பூர்வ ஆக்குவதால் சமூக அந்தஸ்து குறையும் மேலும் ஓரினச் சேர்க்கை என்பது தவறான புத்தியின் பிரதிபலிப்பு என்று என்று கூறியது.
அக்.15, 2008: அரசின் மத ரீதியான வாதங்களை ஏற்க மறுக்கும் ஐகோர்ட் மருத்துவ ஆதாரங்களை முன்வைக்குமாறு கேட்கிறது.
ஜூலை 2, 2009: ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது.
ஜூலை 9, 2009: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடுக்கிறார்.
மார்ச் 27, 2012: வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைக்கிறது.
டிசம்பர் 11, 2013:இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய குற்றம் என்று தீர்ப்பு அளிக்கிறது. 
06.09.2018

ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் அமர்வு தெரிவித்துள்ளது 

நபி இப்றாஹீம் (அலை) அவர்களை தொடர்ந்து ஒரு நபியைக் குறிப்பிடுவதாக இருந்தால் லூத் (அலை) அவர்களைத் தான் குறிப்பிட வேண்டும்.ஏனெனில் இந்த இருவரும் ஒரே காலத்தில் வெவ்வேறு இடங்களுக்கு இறைதூதர்களாக அனுப்பட்டார்கள்.
லூத் (அலை) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் சகோதரர் புதல்வர் ஆவார். விவிலியம் பழைய ஏற்பாட்டில் லோத்து எனும் பெயரில் அவர்கள் குறிப்பிடபட்டுள்ளர்கள்.
நபி லூத் (அலை) அவர்கள் கிழக்கு ஜோர்டானில் உள்ள சதூம் (சோதோம்) பகுதி மக்களை நல்வழிபடுத்த அனுப்பப்பெற்றார்கள். அந்த மக்கள் செய்துவந்த குற்றங்களை எதிர்த்து அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அந்த மக்களிடம் இருந்து வந்த கெட்ட பழக்கங்களில் முதன்மையானது ஓரினச்சேர்க்கை(SODOMY).
அதற்கு முன்புவரை இந்தப் பழக்கம் மனித சமுதாயத்தில் இருந்ததில்லை. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; "நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்துவிட்டீர்கள்.(29:28)
சதூம் வாசிகளிடையே தான் இந்தப் பழக்கம் முதன் முதலில் தோன்றியது. இதை எதிர்த்து லூத் (அலை) அவர்கள் கடுமையாகப் போராடினார்கள். தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்கள். (எய்ட்ஸ் நோய் உருவாக ஓரினச்சேர்க்கையும்காரணமாகும்என்பதுகுறிப்பிடத்தக்கது.
லூத் (அலை) அவர்களின் பிரச்சாரத்தை ஏற்க மறுத்து அந்த மக்கள் மேலும் மேலும் அந்த தீமையைச் செய்யலானார்கள். இதனால் கோபம் கொண்ட இறைவன் வானவர்களை அனுப்பி அந்த சமுதாயத்தைஅழித்தான்.
லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தை அழிக்க வந்த வானவர்கள் அழகிய ஆண்களின் தோற்றத்தில் இருந்ததன் காரணத்தால் அவர்களையும் அந்த சமுதாயத்திலுள்ள ஆண்கள் தகாத உறவுக்குஅழைத்தனர்.
லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தை அழிக்க வந்த இந்த வானவர்கள் முதலில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி கூறிவிட்டு பின்னர் லூத்துடைய ஊரை நோக்கிப் புறப்பட்டனர்.
லூத் (அலை) அவர்களைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் இத்துடன் முடிவடைகிறது. லூத் (அலை) அவர்களின் சமுதாய மக்கள் ஆரம்பித்து வைத்த இந்த ஓரினச் சேர்க்கை இன்றைய சமுதாய மக்களிடமும் காணக்கிடக்கின்றன. இந்த தீமையைச் செய்த லூத் நபியின் சமுதாயம் இறைவனின் கோபத்திற்க்குள்ளாகி எந்தளவிற்குக் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மையைச் சிந்தித்தாவது இந்த மாபெரும் தீமையிலிருந்து நமது சமுதாயம் தன்னைத் தற்காத்து கொள்ளவேண்டும். ஓரினச் சேர்க்கை, விபச்சாரத்தை விடவும் கொடூரமாக வர்ணிக்கப்படுகிறது.

இதுபற்றிநபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.உங்களில் எவரேனும் நபி லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செயலைக் கண்டால் செய்பவனையும், செய்யப்படுபவனையும் கொன்றுவிடுங்கள்
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். 29:28

أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنكَرَ ۖ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَن قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும்செய்கின்றீர்கள்;உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை. 29:29
قَالَ رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ
அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். 29:30
லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செய்து வந்த குற்றம் ஒன்று இருந்தது. அதுதான் ஆணும் ஆணும் புணர்வது. அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘உங்களுக்கு முன்னால் உலக மக்கள் யாரும் செய்திராத மானக்கேடான செயல்களை நீங்கள் செய்கின்றீர்கள். (மோகம் கொண்டு) ஆண்களிடம் செல்கின்றீர்கள், வழிப்பறி செய்கின்றீர்கள், உங்கள் சபைகளில் வைத்தே தீய செயல்களில் ஈடுபடுகின்றீர்கள்’. அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில், ‘நீர் உண்மையாளராயின் அல்லாஹ்வின் வேதனையை எங்களுக்குக் கொண்டுவாரும்’ என்பதாகவே இருந்தது” (29;28,29) இந்த இழிவான படுமோசமான குற்றத்துக்காக அதைச் செய்தவர்களை அல்லாஹ் நான்கு வகையான தண்டனைகளைக் கொடுத்துத் தண்டித்தான். வேறெந்த சமூகத்தையும் அல்லாஹ் இப்படித் தண்டித்ததில்லை. அவை: 1.அவர்களின் கண்களைக் குருடாக்கினான். 2.அவர்கள் வசித்த ஊரை தலைகீழாக புரட்டினான். 3.அவர்களின் மீது சுட்ட கற்களை தொடர்ந்து பொழியச் செய்தான்.4. அவர்கள் மீது பேரிடியை விழச் செய்தான்.
(முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த) இந்த ஷரீஅத்தின் சரியான கூற்றின்படி வாளால் வெட்டிக் கொல்வதே இக்குற்றத்தைச் செய்த இருவரின் தண்டனையாகும். அவ்விருவரும் சுய விருப்பத்தின்படி அதைச் செய்திருந்தால். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக் கூடியவர்களை நீங்கள் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்று விடுங்கள்’அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்
இது போன்ற மானக்கேடான செயல்களால் நம் முன்னோர்களின் காலத்தில் இல்லாத உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் போன்ற பல்வேறு தொற்று நோய்கள் இன்றைய காலத்தில் பரவி வருவதைப் பார்க்கும் போது இக்குற்றத்துக்கு இத்தகைய தண்டனை விதித்திருப்பதில் இறைவனுடைய நுட்பம் நமக்குத் தெரிய வருகிறது.
அந்த பாவத்தில் இருந்து தவிர்ந்து கொள்ள அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் வழிகாட்டி உள்ளார்கள்.
இளைங்கர்களே, உங்களில் திருமணம் செய்ய சக்தி பெற்றவர்கள் திருமணம் செய்யட்டும், யாருக்கு சக்தி இலலையோ அவர்கள் நோன்பு வைக்கட்டும், தவறான வற்றிலிருந்து அது உங்களை காக்கும்.
(முஸ்லிம்)
இது மட்டும் அல்லாமல் இஸ்லாதில் கற்று தந்த சில பண்புகளை பேணுவதின் மூலமும் தவிர்ந்து கொள்ளாம்.
.1.நல்ல நண்பர்களுடன் சேர்ந்து இருத்தல்
2.சமுதாய நல பணிகளில் நம்மை அதிகம் இனைத்து கொள்ளல்
3.வணக்கவழி பாடுகளை அதிகம் செய்தல்
4.ஆண், பெண் கலந்து இருக்க கூடிய சபையிலிருது தவிர்ந்து கொள்ளல்
 
5.தொலைகாட்சி, இனையத்தலதை பயன் படுத்துவதற்கு முன் ஷைத்தானை விட்டும் அல்லஹ்விடத்தில் பாதுகாப்பு தேடி கொள்ளல்.
யார் தமது இறைவன் முன்னே
 நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.அல்குர்ஆன் 79- 40,41.
 ஓரிணச்சேர்க்கை கூடுமா..?
இது இஸ்லாதில் அறவே கூடாது, இதற்க்கு கடுமையான் தண்டனையும் உள்ளது. கிழ்கண்ட வசனத்தை சிந்திதால் விளங்கும்.
7:80   وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ
7:81   إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاءِ ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
7:82   وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَن قَالُوا أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ ۖ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ
7:83   فَأَنجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ
7:84   وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ


லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). "உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?'' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.
"நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.)
"இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.
எனவே அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.அவர்களுக்கு பெருமழையைப் பொழிவித்தோம். குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு இருந்தது?' என்பதைக் கவனிப்பீராக!அல்குர்ஆன் 7:80-84
அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; 15:74
காலத்தில் அவர்களின் சமூகத்தார்களின் மீது அல்லாஹ் எவ்வாறு கோபம் கொண்டு அவ்வூரை தலை கீழாக புரட்டினான் என்பதை சுருக்கமாப் பார்ப்போம் . லூத் (அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக தேர்வு செய்யப்பட்டார்கள் அவர்களுடைய சமுதாயத்து மக்களிடம் தான் நபியாக தேர்வு செய்யப்பட்ட செய்தியை கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான் : ''நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.''ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள். 26:160, 163

அந்த மக்களும் இதற்கு முந்தைய மக்கள் போன்றே அல்லாஹ்வுடைய வேதத்தை பொய்ப்பித்தனர், அவனுடைய தூதரை நபியாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர், . .லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர். : 54: 33
அத்துடன் அவர்களுக்கு முந்தைய எந்த சமுதாயத்தவர்களும் செய்திடாத செய்யத் துனியாத, மனித சமுதாயம் வெட்கி தலைகுணியக் கூடிய செயலைச் செய்தனர். ...உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?'', ''மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள்- நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.'' அல்குர்ஆன் 7:80 லிருந்து 81 வரை
எவ்வளவோ அச்சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை செய்தும் அவவர்கள் திருந்தவில்லை, தங்களது இழி செயலுக்காக வருந்தவுமில்லை தொடர்நது அவைகளை நாகரீகமெனக் கருதி செய்து கொண்டிருந்தார்கள் இறைத்தூதர் அவர்கள் அருவெருக்கத்தக்க அச்செயலைக் கண்டு மிகவும் சஞ்சலப்பட்டார்கள். நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக் ''இது நெருக்கடி மிக்க நாளாகும்'' என்று கூறினார். 11:77
இப்படியாக காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன அவர்களுக்கும் அல்லாஹ்விடமிருந்து எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன, ஆனாலும் அந்த அநாகரீகச் செயலை செய்யும் அநியாயக் காரர்களுக்கு அச்செயலை ஷைத்தான் அழகாக்கி காட்டியும், அச்செயல் ஒரு நாகரீகம் வாய்ந்தவை போல் ஆக்கியும் காட்டினான். அச்செயலை செய்பவர்கள் தங்களை நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் வீற்றிருந்ததாக பறைசாட்டிக் கொண்டனர். இன்றைய மேற்கத்திய நாகரீக ? கள் போன்று என்றால் மிகையாகாது .குர்ஆன் முழுவதும் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகி பேரழிவைத் அடைந்து கொண்ட முன்னாள் சமுதாயத்தவர்களுடைய வரலாற்றையும், இன்னாள் மேற்கத்தியர்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அநேகமாக என்பதை விட முழுமையாக ஒத்துப்போவதை தெளிவாக காணமுடியும். அது மட்டுமல்ல மேற்கானும் ஓரினச் சேர்க்கை சம்பவம் இலைமறை காயாக நடந்து வந்ததை இன்றைய மேற்கத்திய அரசாங்கம் அதை சேடிஸ்டுகளுக்கு முறையான அரசு அங்கீகாரத்தை வழங்கி கவுரவிக்கவும் செய்திருக்கிறது என்பதை நாம் மிகைப் படுத்திக் கூற வில்லை அவர்களுடைய ஊடகங்கள் வாயிலாகவே அறியவும் செய்தோம்.(அது திருமன பந்தமாம் ?) அந்ந வரம்பு மீறிய சமுதாயத்தை அழித்தொழிக்க அல்லாஹ் முடிவு செய்து விட்டான் எந்த ஒரு சமுதாயத்திடமும் தன்னுடையை வேதனைiயை இறக்குவதற்கு முன் ஒரு சோதனையை அனுப்புவான் அந்த சோதனையில் அவர்கள் அளவு கடந்து வரம்பு மீறும்போது அந்த வரம்பு மீறலையே அவர்களுக்கு முடிவாக அமைத்து விடுவான் .
ஒரு நாள் சோகமே உருவாக லூத் (அலை) அவர்கள் தங்களுடைய இல்லத்தில் அமர்ந்திருக்கும் போது வான தூதர்கள் இளைஞர் தோற்றத்தில் அவர்களுடைய இல்லத்திற்கு வருகை தருகிறார்கள் அவர்களிடத்தில் இவர்கள் வரம்பு மீறுவார்கள் என்று அல்லாஹ் அறிந்திருந்ததால் அவ்வாறு மலக்குகளை இளைஞர் தோற்றத்தில் அனுப்பி வைத்தான்.(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது. 15:61 (அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்'' என்று (லூத்) சொன்னார், 15:62 (அதற்கு அவர்கள்,) ''அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;.15:63 (உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம். 15:64
இறைத் தூதர் அவர்களுடைய வீட்டில் ஊருக்குப் பரிச்சயமில்லாத இளைஞர்கள் வந்திருக்கிற செய்தி நகருக்குள் பரவவே இறைத்தூதருடைய வீட்டை சேடிஸ்டுகள் சூழ்ந்து கொள்கிறார்கள் (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள். 15:67
அவர்களைக் கண்ட இறைத்தூதர் செய்வதறியாது திகைத்துப் போய் அவர்களை எச்சரித்து ஙெ;கிருந்த வெளியேற்ந முயற்சி செய்கிறார்கள் (லூத் வந்தவர்களை நோக்கி;) ''நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;' ''அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்'' என்றும் கூறினார். 15:69 இறைத் தூதருடைய எச்சரிக்கையை பொருட்படுத்தாத அந்த சேடிஸ்டுகள் அவர்கள் விரும்பாத மற்ற விஷயங்கள் எதைப் பற்றியும் எங்களிடம் பேச வேண்டாம் என்று ஏளனமான பதிலை நக்கலுடன் கூறுகிறார்கள். அதற்கவர்கள், ''உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்டார்கள். 15:70 செய்வதறியாது திகைத்துப்போன லூத்(அலை) இறுதியில் என்னுடைய மகள்களையேனும் திருமணம் செய்து கொள்ளுங்கள் இவர்களை விட்டு விடுங்கள் எனக் கெஞ்சத் தொடங்குகிறார்கள். ''இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்'' என்று கூறினார். 15:71 ஆனாலும் அவர்கள் நபியுடைய மகள்கள் தேவையில்லை அவர்களுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்த இளைஞர்களை தங்களது துர்ச்செயலுக்குட்படுத்துவதில் தீவிரமடைகிறார்கள் அல்லாஹ் அவர்களுடைய பார்வையைப் பறித்து விடுகிறான். அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். 54:37
அல்லாஹ்வுடைய கோபம் மனிதர்கள் மீது இறங்கத் தொடங்கினால் இவ்வாறே படிப்படியாக இறங்கத் தொடங்கும், ஒவ்வொன்றும் பலமான அடியாக விழத்தொடங்கும், அத்துடன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வசுவாசம் கொண்டவர்களை அக்கொடியவர்களின் வேதனையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதால் அவர்களின் பார்வையைப் பறித்து அவ்விடத்திலேயே அவர்களை குருடர்களாக்கியும் அந்த மலக்குகள் மூலமே நபிக்கு தனது தண்டனை இறங்கவிருப்பதையும், அதனால் நபியையும் அவரது குடும்பத்தாரையும் இடம் பெயரச் சொல்கிறான். மேலும்,'இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்'. 15:66 இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று (த் தூது)வர்கள் கூறினார்கள். 15:65
ஆகவே இறைத்தூதரும் அவர்களுடன் ஈமான் கொண்ட முஸ்லீம் குடும்பத்தினரும் இடம் பெயரத் தொடங்குகிறார்கள், அல்லாஹ்வுடைய பேரிடி முழக்கம் ஒன்று அம்மக்களைப் பிடித்துக் கொள்கிறது. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. 15:73 இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. 7:84பயங்கர இடிமுழக்கத்துடன் கூடிய கொடுங்காற்று சுடப்பட்ட கற்களை அவ்ஊர் ழககள் மீது வீசி எறிந்து அனைத்து அநியாயக்கார வரம்பு மீறிய மக்களையும் அழித்து அவ்வூரை அல்லாஹ் தலைகீழாக புரட்டி விடுகிறான் . பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். 15:74
இவ்வாறு அல்லாஹ்வுடைய வேதனை அம்மக்கள் மீது இறங்கியது, அல்லாஹ் தன்னுடைய வேதனையை ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இறக்கி அழித்திருந்தாலும் இச்சமுதாயத்து மக்களை அழித்து அவர்கள் வசித்த ஊரையும் புரட்டியதன் நோக்கம் யாதெனில் , அல்லாஹ் மனிதனுக்கு உருவாக்கி கொடுத்த இயற்கை அமைப்பை சிர் குலைத்து தலை கீழாக மாற்றி தேவையுள்ளதை விட்டு தேவையில்லாதை எடுத்து இயற்கை சித்தாந்தத்தை புரட்டினார்கள் . அதனால் அந்த மக்கள் வசித்த ஊரையே அல்லாஹ் புரட்டி விட்டதுடன் அதை பின் வரும் மக்களுக்காக அத்தாட்சியாக்கினான் (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். 15:72 .நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 15:75 நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது. 15:76 திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது. 15:77
புரட்டப் பட்ட ஊர் அரேபியப் பிரதேசத்தில் ஜோர்தான் கடல் கரையில் அமந்துள்ளது அதன் மீது கடல் சூழ்ந்திருக்கிறது கடல் தண்ணீர் தேங்கி நிற்கும் குறிப்பிட்ட அவ்விடத்தில் யாரும் கால் பதித்தால் அவர்களை கடல் நீர் உள் வாங்குவதில்லை. அவர்களை மிதக்கச் செய்து விடும் பலகை மிதப்பது போல் மிதப்பார்கள். காரணம் அதன் கீழ் புரட்டப்பட்ட அந்நகரம் இருப்பதாலேயாகும். ( இது சமீபத்தில் கேரளா குழுவினர் உலகம் முழுவதும் சுற்றுலா மேற்கொண்டு குர்ஆன் கூறும் அதிசய இடங்களை ஆய்வு செய்து அவ்விடங்களை வீடியோ கேமராவில் பதிவு செய்து பல்லாயிரம் பிரதிகள் எடுத்து மக்களிடம் அனுப்பியுள்ளனர். இவர்கள் அந்நகரங்களுக்கு சென்று அங்கு வாழும் மக்களிடமும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஒன்றுக்கு பலமுறை கேட்டறிந்து ஊர்ஜிதமானப் பிறகே வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது )
லூத் நபி காலத்தில் நடந்த அருவெருக்கத்தக்க செயலை அல்லாஹ் தொடர்ந்து லூத் (அலை) அவர்கள் மூலம் எச்சரித்துக் கொண்டேயிருந்தும் அவர்கள் அதை ஏற்று நடக்காததால் இறுதியில் கல்மாறியை பொழியச் செய்து அவ்வூரை தலைகீழாகப் புரட்டியது இறைவனின் கோபத்தின் தெளிவான வெளிப்பாடு தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். குர்ஆனின் கூற்றிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்வதுடன் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்சி நடப்பதுடன் , அவனுடைய சட்டங்களை நமது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
. 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001