ஹஜ் ஏன்?

 


 

துல் கஅதா    மாதம் அல்லாஹ்  புனிதமாக்கியிருக்கிற நான்கு மாதங்களில் ஒன்றாகும்ஹஜ்ஜுடைய அமல்களுக்கான நாட்கள் ஆரம்பிப்பதும் அங்கிருந்து தான்.

ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்கிற புனித பயணாளிகள் பயண அறிவிப்பை சொந்தபந்தம்அண்டை அயலார்உறவுகள் நட்புகள் மஹல்லா வாசிகள் என              

அனைவரிடமும் சொல்லி முடித்து, பயணம் மேற்கொள்ள துவங்குகிற மாதமும் கூட.

 

விருந்துகள்பிரிவுபச்சாரங்கள்ஹஜ் விளக்க கூட்டங்கள் என இப்போதே நாம் ஹஜ் தொடர்பான பல சபைகளை அலங்கரிக்கத் தொடங்கி இருப்போம்.

 

இந்த சபைகளைக் கடக்கிற போதோ அல்லது அவைகளில் அமர்கிற போதோபுனித பயணாளிகளைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிற போதோ மறக்காமல் அல்லாஹ்விடம் நாம் வைக்க வேண்டிய முக்கிய வேண்டுகோளில் ஒன்று “அல்லாஹ்வே எனக்கும்என் மனைவி மக்களுக்கும்என் குடும்பத்தார்களுக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவாயாகஉன்னுடைய உயர்தர ஆலயத்தை தரிசிக்கும் வாய்ப்பை இந்த எளியோனுக்கும் இந்த எளியோனின் மனைவி மக்களுக்கும்இந்த எளியோனின் குடும்பத்தார்களுக்கும் வழங்கி கௌரவிப்பாயாகஎன்று மனமுருகி நம்முடைய ஆசையை வெளிப்படுத்த வேண்டும்.

 

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்கிற நஸீபை வழங்குவானாகஆமீன்!.

 

இஸ்லாம் வலியுறுத்தும் எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் சரி அதற்கென கால, நேரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட அந்த கால, நேரத்திற்குள் அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

 

ஹஜ்ஜும் அப்படித்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

 

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا

 

மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்ற வேண்டிய கடமையாகும்.                              ( அல்குர்ஆன்: 3: 97 )

ஆனால், இன்று முஸ்லிம் சமூகத்தில் ஹஜ் செய்வதற்கு உடல் மற்றும் பொருளாதாரம், கால, நேரம் ஆகிய வசதிகள் பெற்றிருந்தும் ஹஜ் செய்ய அதிக தாமதம் செய்கின்றார்கள்.

 

அதிகமான வயோதிகர்கள் ஹஜ் செய்கிற நாடுகளில் இந்தியாவும், இலங்கையும் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழகம் முன்னணியில் இருக்கிறது.

 


உலகம் முழுவதும் ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றிட புனித கஅபாவை நோக்கி இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பயணித்து வரும் நிலையில் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான  ஹஜ் குறித்து சில விஷயங்ளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கிழக்கே சீனா முதல் மேற்கே அமெரிக்கா வரை உலகிலுள்ள எல்லா நாடுகளில் இருந்தும் முஸ்லிம்  சமுதாயத்தைச் சார்ந்த எல்லா மனிதர்களும் நிறம், இனம், தோற்றம், பணம், பதவி போன்ற பாகுபாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட இடத்தில் , குறிப்பிட்ட நாட்களில் ஒன்று கூடி, தங்களின் ஒரே இறைவனை ஒரே உடையில் மிகவும் எளிய தோற்றத்தில் வணங்கிடும் அமல் தான் ஹஜ்ஜுடைய அமலாகும்.

ஹஜ் மற்ற  இஸ்லாமிய வணக்கங்களை காட்டிலும் பல்வேறு மகத்துவங்களை கொண்டதாகும்

 

இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஹஜ் தனிக்கவனம் பெறுகிறது.காரணம் அது உடல்,பொருள் இரண்டும் சார்ந்த கடமையாகும்.ஹஜ் கடமயாகுவதற்கு உடல் பலமும்,பொருள் வளமும் தேவையாகும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹஜ்ஜுடைய காலம் துவங்கி விட்டது.உலகெங்கிலும் இருந்து ஹாஜிகள் தங்களின் புனித பயணத்திற்கு தயாராகி வருகின்றனர்.நாற்பதாண்டு கனவு,ஐம்பதாண்டு கனவு நினைவாகும் காலம் நெருங்கி வருகிறது.

ஹஜ் 2024 க்கு இந்தியாவில் இருந்து மொத்தம் 1,75,025 ஹாஜி களுக்கு களின் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது, இந்திய ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் ஹாஜிகளுக்கு 1,40,020 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் 35,005 யாத்ரீகர் ஹாஜி கள் தனியார் ஹஜ் குழு ஆபரேட்டர்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

 ஹஜ் 2024 க்கு, 70 வயதுக்கு மேற்பட்ட 6,370 பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, மேலும் 5,162 பெண்கள் 'மெஹ்ரம்' (ஆண் துணை) இல்லாமல் புனித யாத்திரை செல்ல விரும்பும், இந்திய ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

 

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

பதில் :அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

 

ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை கணவன், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவினர் துணை இருந்தால் தான் ஹஜ் கடமையாகும். இல்லாவிட்டால் கடமையாகாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

மற்ற பயணங்களுக்குத் தான் பெண்களுக்குத் தக்க ஆண் துணை அவ்சியம். ஹஜ் பயணம் பாதுகாப்பாக இருந்தால் ஆண் துணை இல்லாவிட்டாலும் பெண்கள் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

 

முதல் சாரார் முன்வைக்கும் வாதங்கள்!

ஒரு பெண் மஹ்ரமுடனே தவிர பயணம் செய்யக் கூடாது என்ற நபிமொழி பெண்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை, நிபந்தனையை விதித்து விடுகின்றது.

 

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ قُلْتُ لِأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ

 

'திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1086, 1087

 

 ஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது இவர்களது வாதம்.

 

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرٍو عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ وَلَا يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا وَامْرَأَتِي تُرِيدُ الْحَجَّ فَقَالَ اخْرُجْ مَعَهَا

 

'எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து 'அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக' என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233

 

 

ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே உணர்த்தி விடுகிறார்கள்.

 

இவையே முதல் சாராரின் வாதங்களாகும்.

 

பெண்கள் துணையின்றி ஹஜ் செய்யலாம் என்று கூறும் இரண்டாவது சாராரின் ஆதாரங்களைப் பார்ப்போம்.

 وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا

(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. திருக்குர்ஆன்  3:97

 இந்த வசனம் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவாகவே ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹ்ரம் துணை இல்லாமல் ஹஜ் செய்வதை அனுமதித்துள்ளனர்.

 

صحيح البخاري

 

1782 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يُخْبِرُنَا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، - سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ فَنَسِيتُ اسْمَهَا -: «مَا مَنَعَكِ أَنْ تَحُجِّينَ مَعَنَا؟»، قَالَتْ: كَانَ لَنَا نَاضِحٌ، فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ، لِزَوْجِهَا وَابْنِهَا، وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ، قَالَ: «فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ، فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ» أَوْ نَحْوًا مِمَّا قَالَ

 

எங்களுடன் நீங்கள் ஏன் ஹஜ்ஜுக்கு வரவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணிடம் கேட்டார்கள். எங்களுக்கு தண்ணீர் இறைக்கும் ஒரு ஒட்டகம் இருந்தது. அதில் என் மகனும் என் கணவனும் ஏறிச் சென்று விட்டனர். நாங்கள் தண்ணீர் இறைக்க ஒரு ஒட்டகத்தை விட்டுச் சென்று விட்டனர் (இந்த பணியின் காரணமாக ஹஜ்ஜுக்கு வரவில்லை) என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதம் வந்ததும் உம்ரா செய். ஏனெனில் ரமலானில் உம்ரா செய்வது ஹஜ் ஆகும் என்றார்கள். நூல் புகாரி 1782

எங்களுடன் ஏன் ஹஜ்ஜுக்கு வரவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணிடம் கேட்டதில் இருந்து பெண்கள் மஹ்ரம் துணை இல்லாமலும் ஹஜ் செய்யலாம் என்பதை அறியலாம்.

 


ஹஜ்ஜின் அவசியம் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இந்த உம்மத்துக்கு விளக்கவேண்டிய தேவையில்லை எனும் அளவிற்கு பரிட்சயமானது.

 

 

ஹஜ் கடமை வழங்கிய படிப்பினைகள்

ஹஜ்ஜானது நபி (ஸல்) அவர்களது உம்மத்துக்கு மாத்திரம் விதியாக்கப்பட்ட ஒரு கடமையன்று மாறாக அதுகாலகாலமாக மனித சமூகத்தால் நிறைவேற்றப்பட்டு வருகின்ற ஓர் இஸ்லாமியக் கடமையாக இருந்து வருகின்றது. அந்த வகையில், ஹஜ் கடமைப் பலவகையான படிப்பினைகளை எமக்குக் கற்றுத் தந்துள்ளது. சுருக்கமாக அவற்றை பின்வரும் அடிப்படையில் நோக்க முடியும்.

 

1. நபி இப்றாஹீம் (அலை) அவர்களை ஞாபகப்படுத்தல்:- உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியான ஒரு கதாபாத்திரமாக இப்றாஹீம் (அலை) அவர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக எதிர்நோக்கிய கஷ்டங்களையும், துன்பங்களையும் ஹஜ் கடமையானது எமக்கு ஞாபகப் படுத்துகின்றது.

 

அதுபோல, இந்த உலகில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும், யூதர்களும் ஏற்றுக் கொள்கின்ற ஒரே நபியாக இப்றாஹீம் (அலை) காணப்படுகிறார்கள். தனது சமூகம் சிலை வணக்கத்தில் மூழ்கிக் காணப்பட்ட போது அதனை எதிர்த்து நின்று, உறுதியாகப் போராடிய நபி இப்றாஹீம் (அலை) அவர்களது வரலாற்றை அல்குர்ஆன் அழகாகப் பதிவு செய்திருக்கின்றது. (அல் அன்ஆம்-78,79) இத்தகைய தூய்மையான இறை நம்பிக்கையின் காரணமாக உலகம் அழியும் வரை முஸ்லிம்கள் தங்களது தொழுகைகளில் ஞாபகப்படுத்துமளவுக்கு அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களை கண்ணியப்படுத்தி இருக்கின்றான்.

 

2. இஸ்லாமிய குடும்ப அமைப்பிற்கான முன்மாதிரி:- ஹஜ் கிரியை நினைவூட்டும் மற்றுமோர் அம்சமாக இப்றாஹீம் (அலை) அவர்களது குடும்பத்தினரின் முன்மாதிரி திகழ்கின்றது சத்தியத்தை எடுத்துரைத்த ஒரே காரணத்திற்காக இப்றாஹீம் (அலை) அவர்கள் தமது சமூகத்தால் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள், பல நாடுகளுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அவர்களுக்கு இருந்த ஒரேயொரு கவலை தன் மரணத்தின் பின் தனது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல சந்ததி இல்லாமலாகிவிட்டது என்பது மட்டுமே இந்தக் கவலையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தை வழங்கினான். என்றாலும், இவ்வாறு தவமிருந்து பெற்ற குழந்தையை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்த போது, எவ்வித தயக்கமுமின்றி இறைவனின் கட்டளையை நிறைவேற்ற முன் வந்தமையான ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. எனவேதான் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றத் துடிக்கும் கணவன், கணவனுக்கு முழுமையாகன கட்டுப்பட்டு நடக்கின்ற மனைவி, பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்கும் பிள்ளை போன்றோரை நாம் காண முடியும்.

 

3. இஸ்லாத்திற்காக தியாகம் செய்தல்:- ஹஜ் கடமை எமக்குக் கற்றுத் தரும் இன்னுமொரு படிப்பினையாக இது காணப்படுகிறது. இஸ்லாத்திற்காக இந்த உலகில் வாழ்கின்ற போது பலவகையாக கஷ்டங்களையும், துன்பங்களையும் ஒரு மனிதன் எதிர்கொள்ள நேரிடும் என்பது பொது நியதி.

 

இந்த உண்மையை நாம் நபிமார்கள், ஸஹாபாக்கள், நல்லடியார்கள் போன்றோரின் வாழ்வில் காண முடியும். இப்றாஹீம் (அலை) இஸ்லாத்திற்காகப் பட்ட கஷ்டங்களையும், தியாகங்களையும் ஹஜ்ஜிலே நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு அம்சமும் எம் மனக்கண் முன் கொண்டு வருகின்றது.

 

ஹாஜரா (அலை) தனது ஏக புதல்வனை அல்லாஹ்வின் கட்டளை என்பதற்காக அறுப்பதற்கு விட்டுக் கொடுத்தமை இஸ்மாயீல் (அலை) தனது தந்தைக்கு ஏவப்பட்ட கட்டளையை மறுக்காமல் மனதார ஏற்றுக் கொண்டமை என்பன அல்லாஹ்விற்காகவும்,

 

இஸ்லாத்திற்காகவும் மனிதர்கள் இந்த உலகில் எதையும் இழப்பதற்கு, தியாகம் செய்வதற்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

 

4. சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும்:- மிக முக்கியமான இந்த இரண்டு விடயங்களையும் முஸ்லிம் சமூகம் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை ஹஜ் கடமை தெளிவாக முன்வைக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது இறுதிப் பேருரையில் கூட இந்த அம்சத்தை வலியுறுத்தி இருப்பதனை அவதானிக்க முடியும்.

 

மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவனே. மேலும் உங்களுடைய தந்தையும் ஒருவரே உங்களில் எந்தவொரு அரபியும் ஓர் அஜ்மியை விடவோ அல்லது எந்தவொரு சிவப்பனும் கறுப்பனைவிடவோ சிறந்தவன் அல்ல தக்வாவில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்

 

இன்று பிரதேசம், நிறம், அந்தஸ்து எனவேற்றுமைப் பட்டிருக்கின்ற மனித சமூகத்தை ஒரே கோஷம், ஒரேதிசை, ஒரே ஆடை, ஒரே இலக்கு என ஒற்றுமைப்படுத்துகின்ற ஓர் உன்னதமான கிரியையாக ஹஜ் திகழ்கின்றது. இந்த விடயத்தை மெளலான மெளதூதி (றஹ்) பின்வருமாறு விபரிக்கின்றார்கள். “உலகின் நாலாதிசைகளிலும் இருந்து பல்வேறு உருவங்கள், நிறங்கள், மொழிகள் வேறுபட்டவர்கள் ஒரே கேந்திரத்தை நோக்கி வந்து, இஹ்ராம் என்ற ஒரே சீருடையை அணிந்து கொள்கிறார்கள். ஒரே கோஷத்தை எழுப்புகின்றார்கள் இதன் மூலம் அவர்கள் முழு உலகிற்கும் விடுக்கின்ற செய்தி, முழு அகிலத்துக்கும் பேரரசனான இறைவனின் இந்தப் படை, உலகின் ஆயிரக் கணக்கான சமுதாயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கின்ற இந்தப் படை ஒரே பேரரசின் படைதான்! என்பதாகும்

 

5. நற்பண்பாடுகளை வாழ்வில் அணிகலனாகக் கொள்ளுதல்:- ஹஜ் கடமையானது மனித உள்ளங்களை விட்டும் உலக ஆசைகள், பேராசைகள் போன்ற ஷைத்தானியப் பண்புகளை விரண்டோடச் செய்கின்றது. அல்லாஹ்வுக்கு பூரணமாகக் கட்டுப்படுகின்ற மனோ நிலையை மனிதர்களில் ஏற்படுத்துவதோடு, மறுமைக் காட்சிகளை மனக்கண் முன் கொண்டு வருகின்றது. மேலும் உலோபித்தனத்தில் இருந்து உள்ளங்களை விடுவித்து, தாராளப் பண்பை சமூகத்திற்குள் நுழையச் செய்கின்றது.

 

இதனால்தான் இமாம் அபூ ஹனீபா (றஹ்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்னால், இஸ்லாமிய வணக்கங்களில் எதுமிகவும் சிறந்தது? ஏனத் தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தார்கள்.

 

இவர்கள் ஹஜ் செய்து, அதில் மறைந்திருக்கின்ற எண்ணற்ற பயன்களைக் கண்ட போது அனைத்தையும் விட ஹஜ் நிச்சயமாக சிறந்தது எனத் தயக்கமின்றி தம் முடிவைத் தெரிவித்தார்கள்.

 

 

 

 

 

இளமையில் ஹஜ்

ஹஜ் என்பது அவசரமாகவும் ஆரோக்கியமாகவும் செய்ய வேண்டிய அமல் என்பதை மட்டும் இப்போதைக்கு சமுதாயத்துக்கு சொல்லவேண்டியது மிகவும் கட்டாயமானதாகும்.ஏனெனில் ஹஜ்ஜை இறுதிகாலத்தில் செய்யும் அமலாக இந்த உம்மத் ஆக்கிவிட்டது.

ஹஜ் கடமையாக்கப்பட்டதில் வேண்டுமானால் இறுதியாக  இருக்கலாம் ஆனால் உண்மையில் ஹஜ் என்பது இறுதி                  அமல் அல்ல,இளமை அமல் என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்னும் வாழ்க்கை இருக்கிறது,நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.
குழந்தைகளின் திருமணத்தை பார்க்க வேண்டும்.வீடு கட்டி முடிக்க வேண்டும் பேரக்குழந்தைகளை காணவேண்டும்என்றெல்லாம் ஏமாற்று வார்த்தைகளை கொண்டு ஷைத்தான்         இந்த உம்மத்தை ஏமாற்றிக்கொண் டிருக்கிறான்.

ஹஜ் நிறைவேற்றாத மக்கள் குறித்து:

 

வசதி இருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாதவர்கள் பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கை:

وجاء فيما يرويه الرسول صلى الله عليه وسلم عن ربه عز وجل قوله: « إن عبداً صححت له جسمه ووسعت عليه المعيشة يمضي خمسة أعوام لا يفد إليّ إنه لمحروم
».அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்அவர்கள் கூறுகிறார்கள்.
ஓர்  அடியானுக்கு உடல் ஆரோக்கியத்தைக்கொடுத்துவாழ்க்கையில் பல பரக்கத்துக்களையும் செய்து,அதே நிலையில் 5 வருடங்கள் கழிந்தும் ஹஜ்ஜின் மூலமாக என்னை சந்திக்காவிட்டால் மறுமைநாளில் என்னை சந்திப்பதை விட்டும் அவன் துர்ப்பாக்கியவனாக மாறிவிடுகிறான்.
ஹஜ்ஜு கடமையாக இருந்தும் அதை நிறைவேற்றாதவரின் ஈமான் மறுபரிசீலனைக்குரியது. அறிவிப்பவர்அபு சயீத் அல்-குத்ரி இப்னு ஹிப்பான் (3703), மற்றும் அல்-பைஹகி (10695)

இவர்கள் குறித்து நபி ஸல் அவர்களின் எச்சரிக்கை:

"
من ملك زاداً وراحلة تبلغه إلى بيت الله، ولم يحج، فلا عليه أن يموت يهودياً أو نصرانياً


எவர் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையான அளவு பொருளை அல்லது வாகனத்தை பெற்றிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர் ஒரு யூதனாக அல்லது கிருஸ்துவனாக மரணிக்கட்டும். திர்மிதீ -812--(உமர் ரலி கூறியதாக )இப்னுகஸீர்  2/85

ஹஜ் தாமதம் - ஒரு பெரும் அபாயம் யார் அறிவார் அடுத்த ஹஜ் வரை நாம் இருப்போம் என்று. பொருளாதாரம் இருக்கிறது  அல்ஹம்துலில்லாஹ்,

உடலில் வலிமையும் இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ்,
வாகன வசதியும் இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ்,

ஆனால் இன்னும் 40-50-வயது கூட ஆகவில்லை  அதற்குள் எதற்கு  ஹஜ்ஜெல்லாம் என்றுபலரும் சொல்கிறார்கள்.

மரணம் எப்போது வரும் என்று  நமக்குத் தெரியாது.

 

فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَۚ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். 3:97. 

 

அல்லாஹ் வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர்களை எச்சரிக்கிறான் .


கடமையான ஹஜ்ஜை விரைவாக நிறைவேற்றிவிடுங்கள். ஏனெனில், உங்களில் ஒருவருக்கு என்ன தடை நேரும் என்பதை அவர் அறியமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர் : இப்னு (ரலி), நூல் : அஹ்மத்)

 

 

உண்மையில் இந்த கஃபா அந்தளவுக்கு கண்ணியமானதும் கண்ணியப்படுத்துவதற்குமுறிய ஒரு இடம்அதனை நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலைஅவர்கள் கட்டினார்கள்அது சிலை வணக்கத்திற்கெதிரான போராட்டத்தின் பின் ஏகத்துவத்தின் கோட்டையாகவும் இறை வணக்கத்திற்கான இடமாகவும் அமைய வேண்டும் எனக் கட்டினார்கள்இப்றாஹீம் (அலைஅவர்கள் ஏகத்துவ வெற்றியை உறுதிப்படுத்தி நிராகரிப்பிற்கு முற்றுப் புள்ளியாக அவர்களும் அவரது புதல்வர் இஸ்மாயீல் (அலைஅவர்களும் கட்டினார்கள்.

இப்பூமியின்
 முதலாவது பள்ளிவாயல் இதுவாகும்இதற்குப் பிறகுதான் கிழக்கிலும் மேற்கிலும் பள்ளிவாயல்கள் கட்டப்பட்டன.
இந்த
 கண்ணியமிக்க பள்ளிவாயல் முஸ்லிம்களின் கிப்லாவாகக் காணப்படுகிறதுவழிபாடுகளில் ஹஜ் மிகப் பெரியதாகவும்வழிபடும் இடத்தால் ஹஜ்ஜிற்குரிய இடம் அருள் வளம் நிறைந்ததாகவும்ஹஜ்ஜிற்குரிய மாதமும் நாட்களும் மகத்துவமும் சங்கையும் நிறைந்ததாகவும் இருக்கின்றது.

உண்மையில்
 ஹஜ் என்பது எவ்வளவு மகத்துவம் வாய்ந்த ஓர் இறைவழிபாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

1.ஆத்மாவை பரிசுத்தப்படுத்தி பக்குவத்தை தரும்.

பாவங்களில் இருந்தும், மனோஇச்சைகளில் இருந்தும் ஆத்மாவை பரிசுத்தப்படுத்தி மனித உள்ளத்தில் உலகப் பற்றின்மையை ஏற்படுத்தும் வலிமை ஹஜ்ஜுக்கு உண்டு.

உலக ஆசைகளில், சுகபோகங்களில் மூழ்கி கிடக்கும் மனிதனை பக்குவப்படுத்திடும் பல்வேறு விஷயங்கள் ஹஜ்ஜில் உண்டு.


இஹ்ராம் ஆடை : இஹ்ராம் உடை இச்சைகளில் இருந்து மனிதனை தடுக்கக்கூடியது.அத்துடன் அது ஆத்மாவின் இச்சைகளை விட அல்லாஹ்வையே அதிகம் சிந்திக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும்.

  
தல்பிய்யா: ‘இறைவா! உனக்கு அடிபணிந்து விட்டேன் எனும் சொல் அதற்கு சாட்சியமாக அமையும்.


தவாஃப்: மனிதனின் உள்ளம் அல்லாஹ்வை சுற்றியே இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.


சயீ: மனிதன் அல்லாஹ்வின் மன்னிப்பையும், ரஹ்மத்தையும் நோக்கி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும்.


அரஃபா மஹ்ஷரையும், கல்லெறிதல் மட்டமான குணங்களை தூக்கியெறிய வேண்டும் என்பதையும், அறுத்து பலியிடுதல் அல்லாஹ்வுக்காக உயிரையும் தருவோம் என்பதையும் மனிதர்களுக்கு ஏற்டுத்தும்.
ஆக ஹஜ் மனிதனை பக்குவப்படுத்தும்.

 

 

ஹஜ்ஜின் மூலம் மனித சமூகம் அடையும் பயன்பாடுகள்.


செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதுஎன்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதுஎன்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி
சுவனமே பரிசு
ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773

தவிடுபொடியாகும் தவறுகள்
அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “நான்  மன்னிக்கப்பட வேண்டும்என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள்.
(
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173),

 

இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(
இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்என்று கூறினார்கள்.

(
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092)

 

 

 

1.மனிதன் தூய்மை நிலைக்கு சென்று விடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் கூறினார்கள்: “யார் அல்லாஹ்விற்காக இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறார்களோமேலும்அதில் எந்த பாவத்தையும்தீங்கையும் செய்யவில்லையோ அவர் அன்று பிறந்த பாலகன் போன்றாகிறார்.”

2.சுவர்க்கமே கூலி.
நன்மையான ஹஜ்ஜுக்கு சுவனம் தான் கூலியாகும்”. என நபி {ஸல்அவர்கள் அருளியதாக ஆதரப்பூர்வமான ஆறு கிரந்தங்களின் இமாம்களும் பதிவு செய்திருக்கின்றார்கள்.

3. மறுமையில் ஷஃபாஅத் செய்யும் பாக்கியம்.
عن أبي سعيد الخدري حديث الشفاعة الطويل (فو الذي نفسي بيده ما منكم من أحد بأشد مناشدة لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامة لإخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم أخرجوا من عرفتم) الحديث.


நரகில் வேதனை செய்யப்படுகின்ற சில பாவிகளான முஃமின்களைப் பார்க்கும் சுவனத்து முஃமின்கள் அல்லாஹ்விடத்தில் “யா அல்லாஹ்இவர்கள் எங்களோடு தொழுதார்கள்

எங்களோடு நோன்பும் பிடித்தார்கள்மேலும்ஹஜ்ஜும் செய்தார்கள்” எனக் கூறுவார்களாம்அப்போதுஅல்லாஹ் உங்களுக்கு 

அறிமுகமான அவர்களை அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறுவான்.

 என மாநபி {ஸல்அவர்கள் கூறியதாக

 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

ü    4.அருள் மழையில் நனைகிறார்.

وعن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ينزل كل يوم على حجاج بيته الحرام عشرين ومائة رحمة ستين للطائفين وأربعين للمصلين وعشرين للناظرين". قال المنذري في الترغيب والترهيب رواه البيهقي بإسناد حسن

நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்: “பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ் ஒவ்வொரு நாளும் 120 வகையான அருளை இறக்குகின்றான்கஅபாவை தவாஃப் செய்பவர்கள் மீது 60 ரஹ்மத்தும்கஅபாவில் தொழுபவர் மீது 40 வகை ரஹ்மத்தும்கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது 20 வகை ரஹ்மத்தையும் இறக்குகின்றான்.”

5. ஏழ்மையை விரட்டும்பாவங்களை அழித்திடும்.

(( تابعوا بين الحج والعمرة؛ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب إلا الجنة )) رواه الترمذي (810) وابن خزيمة في صحيحه (2512) والنسائي (2631)
ஹஜ்ஜையும்உம்ராவையும் தொடர்ச்சியாக செய்யுங்கள்ஏனெனில்அது கொல்லனின் நெருப்பு தங்கம்வெள்ளியில் இருக்கும் அழுக்கை அழிப்பது போன்றுவறுமையையும்பாவத்தையும் அழித்து விடும்.” என நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.

6. முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

(( أما علمت ـ يا عمرو! ـ أن الإسلام يهدم ما كان قبله؟ وأن الهجرة تهدم ما كان قبلها؟ وأن الحج يهدم ما كان قبله؟ )) رواه مسلم (321).

அம்ர் இப்னுல் ஆஸ் (ரலிஅவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது நபி {ஸல்அவர்கள் “அம்ரேஒருவர் முஸ்லிமாகி விட்டால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றனஒருவர் ஹிஜ்ரத் செய்தால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றனஒருவர் ஹஜ் செய்தால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என்று கூறினார்கள்.

ஹாஜி கடைபிடிக்கவேண்டிய சில  விஷயங்கள்

 1. 
இறையச்சம் வேண்டும். وتزودوا فإن خير الزاد التقوى

ஒரு ஹாஜி ஹஜ்ஜின் எல்லா அமல்களிலும் பக்தியை கடைபிடிக்க வேண்டும்.

 

2.நிய்யத்தை சரி செய்தல்.

 

 

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

6:163 لَا شَرِيْكَ لَهٗ‌ۚ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ‏

6:162. நீர் கூறும்: மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

 

6:163. “அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)

 


3
.எதற்காக ஹஜ்ஜுக்கு செல்கிறோம் என்ற எண்ணத்தை
சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்...
 
இப்னு உமர் (ரலிஅவர்கள் தன் தந்தை உமர் ரலி அவர்களுடன்
சபா மலையில் நின்றுகொண்டு ஹாஜிகளின் கூட்டத்தை பார்த்து மகிழ்ந்து,தன் தந்தையிடம்,ஹாஜிகளின் கூட்டம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதுஎன்றார்கள்.அப்போது உமர் (ரலிஅவர்கள்

மகனேபயணிகள் அதிகம்.ஹாஜிகள் இதில் குறைவுதான்.என்றார்கள்.
அதாவது:அவர்களின் உள்ளங்களின் எண்ணங்களை அல்லாஹ் அறிந்தவன்

3.அங்கு தங்கிருக்கும் காலமெல்லாம் பொருமையை கடைப்பிடிக்க வேண்டும்.ஏனெனில் ஹஜ் கடமையானவர்களுக்கு அல்லாஹ் முதலாவது செய்யும் உபதேசம்

اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏

2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.

 

ஹாஜிகளின் உணர்வுகள் கூட அல்லாஹ்விடம் உற்றுநோக்கி கவைக்கப்படுகின்றது.
4.ஹாஜிகள் அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்க

வேண்டிய துஆ
اللهم اجعل حجي مبرورا وذنبي مغفورا وسعيي مشكورا

அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடப்பதில் அறிவுக்கு

முதலிடம் கொடுக்கக் கூடாது.

ஒரு பாவம் செய்து விட்டால் உடனடியாக அதற்குப் பரிகாரம் 

தேடிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஹஜ்ஜுடைய வணக்கத்தில் ஈடுபடுகிற ஒவ்வொரு ஹாஜியும் அதன் ஒவ்வொரு அர்கானிலும்கிளை இபாதத்களிலும்

இஹ்ராமின் நிலைகளிலும் மிகச் சரியாக ஈடுபட வேண்டும்.

அவ்வாறு ஈடுபட முடியாது போகும் பட்சத்தில் அதற்காக கஃப்ஃபாரா குற்றப் பரிகாரத்தில் ஈடுபட வேண்டும்
5.கட்டளைகளை மீறுவதில் துணிவு கூடாது.


 
அறிவுலக மாமேதை இமாம் ஃகஸ்ஸாலி (ரஹ்அவர்கள் கூறும் போது..

ஜகாத் மற்றும் நோன்புதொழுகை போன்ற இபாதத்களில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகளையும் பயன்பாடுகளையும் அறிவால் ஒருவனால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஆனால்ஸயீ செய்வதுஷைத்தானுக்கு கல் எறிவதுஸஃபா மர்வா மலைக்குன்றுகளுக்கு இடையே ஓடுவது போன்ற செயல்களைச் செய்யும் போது மனிதனின் உள்ளத்தால்மனிதனின் அறிவால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

அல்லாஹ் ஏவியிருக்கின்றான் செய்கிறோம்நபிகளார் {ஸல்அவர்கள் செய்து காட்டியிருக்கின்றார்கள் செய்கிறோம் எனும்

 உணர்வு மாத்திரமே எழுகிறது.

ஹஜ்ஜிலே அறிவுக்குரிய அதிகாரம் நீக்கப்பட்டுமுழுமையாய் தன்னை அல்லாஹ்விற்கு முன் சரணடைத்தல்கீழ்ப்படிதல்அடிமைப்படுதல் போன்ற உயரிய பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஆதலால் தான்வேறெந்த இபாதத்துக்கும் (தொழுகைநோன்புஜகாத்கற்றுத் தராத வாக்கியங்களை பெருமானார் {ஸல்அவர்கள் ஹஜ்ஜுடைய வணக்கத்திற்கு மட்டும் கற்றுத்தந்தார்கள்.

லப்பைக்அல்லாஹும்ம லப்பைக்… என்று.
                                           (
நூல்இஹ்யா உலூமித்தீன்)

இறைவழிபாட்டில் தன்னை முழுமையாக சரணடைத்திட வேண்டும்.

உலகில் எந்த ஒரு பயணத்தை மனிதன் மேற்கொண்டாலும் அதனால் தனக்கு கிடைக்கும் உலகாதாய நோக்கங்களை வெகுவாகவே விரும்புகிறான்.
ஆனால்இங்கே ஹஜ்ஜிற்கான பயணத்தின் போதோ தம் 

உடல்உயிர்உறவுகள்வீடுவியாபாரம்பொருளாதாரம்

ஆசைஇன்பம் என தன்னுடைய உலகாதாயங்கள் 

அனைத்தையும் அல்லாஹ்விற்காக முற்றிலுமாய் 

சரணடைத்து விடுகின்றான்.

இந்த நிலை ஹஜ்ஜோடு நின்று விடாமல் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் நீடித்திருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகின்றான்.

ஆதலால் தான் ஹஜ்ஜைப் பற்றிய அறிமுகம்அதன் சிறப்புகள்அதன் மகத்துவம் பற்றி பேசும் இறைவன் அந்த இறைவசனத்தின் முடிவிலே இப்படிக் கூறுவான்:

அல்லாஹ்விற்கு அஞ்சி அவனுடைய கட்டளைகளுக்கு மாறு செய்யாமல் வாழுங்கள்திண்ணமாகஅல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.” அல்குர்ஆன்:2:196)

                                            (

 

 

 

[ஹஜ் என்றால் என்ன? ]

இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். மக்கா சென்று வர பொருள் வசதியும், உடல் சக்தியும் உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரு தடவை புனித மக்கா சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவது கட்டாய கடமையாகும்

 

  وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ 

அல்லாஹ்வின் உவப்பைப் பெற ஹஜ்ஜையும் உம்ராவையும்  நிறைவேற்றுங்கள். [அல்குர்ஆன் 2:196]

 وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلً

அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும் [அல்குர்ஆன் 3:97]

  وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ‏ 

ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்[அல்குர்ஆன் 22:27]

 

செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதுஎன்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதுஎன்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்என்றார்கள். புகாரி 26

[சிறப்பு விருந்தினர்]

2893- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ : الْغَازِي فِي سَبِيلِ اللهِ ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ ، وَفْدُ اللهِ ، دَعَاهُمْ ، فَأَجَابُوهُ ، وَسَأَلُوهُ ، فَأَعْطَاهُمْ.

அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இப்னுமாஜா 2884

[ஹஜ்ஜூ செய்ய பிறரை தூண்டுபவருக்கும் அழகிய கூலி கிடைக்கிறது.]

 عَنْ أَبِي مَسْعُودِ نِ الْبَدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : مَنْ دَلَّ عَلَي خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ.

எவர் நன்மையின் பால் வழிகாட்டுவாரோ, அவருக்கு அந்த நன்மையைச் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமஸ்வூத் பத்ரீ  (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் , திர்மிதீ 2671 )

[ஏழைகளின் ஹஜ்...]

ஒரு ஏழை ஹஜ் செய்ய நிய்யத் வைக்கிறார். ஆனால் அவர் ஹஜ் செய்ய வசதியில்லை. அவரின் அழகிய நிய்யத்திற்காக‌ அழகிய கூலி கிடைக்கிறது.

 قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “‏ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ،

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. [புகாரி 01]

 

 

ஹாஜிகளே நம் ஹஜ்ஜை அலங்கரிக்க ஒரு ப்ளான் போடுங்க..

1.நாம் இந்த ஹஜ்ஜினை தஹஜ்ஜத் தொழுகையின் மூலம் அலங்கரிப்போம்:

நான் நபி அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளைக் கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவுகளிலுமாகும்என்று நபி அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

கடமையான தொழுகைகளுக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும். (முஸ்லிம் 2157.)

2.[நாம் இந்த ஹஜ்ஜினை ஒழுவோடு இருப்பதின் மூலம் அலங்கரிப்போம்:]

ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம்பிலாலேஸ இஸ்லாத்தில் இணைந்த பின் நிர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்என்று விடையளித்தார்கள் [ஸஹீஹ் புகாரி 1149]

3.நாம் இந்த ஹஜ்ஜினை ஐந்து நேரம் இமாம் ஜமாத்தோடு கஃபத்துல்லாஹ்வில்  தொழுவதின் மூலம் அலங்கரிப்போம்:]

இலட்சம் மடங்கு சிறந்தது.

”(மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்­ஜிதுல் ஹராமில் தொழு­வது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்­ளியில் (மஸ்­ஜி­துன்ந­பவியில்) தொழு­வது 1000 மடங்­காகும். பைதுல் மக்­திஸில் தொழு­வது 500 மடங்கு சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்( ரலி) நூல்: ஸகீர் பைஹகீ)

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்புகாரி 1190 .

 

4.[நாம் இந்த ஹஜ்ஜினை சுன்னத்தான நபிலான தொழுகைகளை அதிகமாகதொழுதலின் மூலம் அலங்கரிப்போம்:]

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் தொழுவதை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்அஹ்மத் 14167, இப்னுமாஜா 1396

எவர் பன்னிரெண்டு ரக்அத்துகள் நியமாகத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை எழுப்புவான், ளுஹருக்கு முன் நான்கு ரக்அத், ளுஹருக்குப் பின் இரண்டு ரக்அத், மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நஸாயீ )

எனவே நாம் இந்த ஹஜ்ஜின் நாட்களில் நிறைய நபிலான சுன்னத்தான தொழுகைகளை தொழுது கொள்ள வேண்டும்.

 

5[நாம் இந்த ஹஜ்ஜினை 24 மணி நேரமும் இறை சிந்தனையின் மூலம் அலங்கரிப்போம்:]

என் அடியான் என்னைப்பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே அவனுடன் நடந்து கொள்கிறேன், அவன் என்னை நினைக்கும் போது நான் அவனுடன் இருக்கிறேன், அவன் என்னை (தன்) மனதில் நினைத்தால் நானும் அவனை மனதில் நினைக்கிறேன், என்னைப் பற்றிச் சபையில் நினைவு கூர்ந்தால் அச்சபையைவிடச் சிறந்த மலக்குகளின் சபையில் நானும் அவனைப் பற்றி நினைவு கூறுகிறேன், என் அடியான் என் பக்கம் ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் ஒரு முழம் அவன் பக்கம் நெருங்கி வருகிறேன், அவன் என் பக்கம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவன் பக்கம் இரண்டு முழம் நெருங்குகிறேன், அவன் என் பக்கம் நடந்து வந்தால், நான் அவன் பக்கம் ஓடி வருகிறேன்என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 7536 )

6.நாம் இந்த ஹஜ்ஜினை அதிகமாகதுஆக்கள் கேட்பதின் மூலம் அலங்கரிப்போம்:]

புனித ஹஜ்ஜுடைய நாட்களில் துஆக்கள் ஒப்புக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கிறது.

 

அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 744

துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி3509

 

[அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)]

மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன். முஸ்லிம் 1976

7[நாம் இந்த ஹஜ்ஜினை அதிகமாக பாவமன்னிப்பு தேடுதலின் மூலம் அலங்கரிப்போம்:]

ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் பாவம் செய்பவர்களே! பாவம் செய்பவரில் சிறந்தவர் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்பவர்என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

8. [ஹாஜிகளே தீய செயல் வேண்டாம்தக்வா வேண்டும்:]

  اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ

ஹஜ்(ஜுடைய காலம் அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே இம்மாதங்களில் எவரேனும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால், ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக் கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது. மேலும், நீங்கள் ஏதேனும் நன்மை செய்தால் அதனை அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கின்றான். மேலும், நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித் துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். எனவே நல்லறிவுடையோரே! எனக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்[அல்குர்ஆன் 2:197.]

9.[ஹாஜிகளே மாநபியை சந்திக்கும் முன்  மாநபி மீது அதிகமாகஸலவாத் சொல்லுவோம்.]

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.[33:56]

 

யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸாயீ 1221

10. [ஹாஜிகளே முகஸ்துதி வேண்டாம் இக்லாஸ் வேண்டும்:]

மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தொழுதாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் நோன்பு நோற்றாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தர்மம் செய்தாரோ, அவர் நிச்சயமாக இணைவைத்துவிட்டார்என்று நபி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

[ஹஜ்ஜில் உளத்தூய்மை மிக அவசியம்.]

ஹஜ் கடமையைப் பற்றி கூறப்படும் வசனம் லில்லாஹி என்று தான் துவங்குகிறது.

உளத்தூய்மை இல்லாமல் ஹஜ் செய்பவர்களின்எண்ணிக்கை கடைசி காலத்தில் பெருகும் என்பதைப்பற்றியும்

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا (97ال عمران) عن أنس رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم يأتي على الناس زمان يحج أغنياء الناس للنزاهة وأوساطهم للتجارة وفقراؤهم للمسألة وقراؤهم للسمعة والرياء (كنز العمال)

தன்னுடைய அமலைப்பற்றி தானே பெருமைப்பட்டுக்கொள்வது மனிதனை  நாசமாக்கும் செயல்களில்ஒன்றாகும்

عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثٌ مُهْلِكَاتٌ شُحٌّ مُطَاعٌ وَهَوًى مُتَّبَعٌ وَإِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ، وَثَلَاثٌ مُنْجِيَاتٌ خَشْيَةُ اللهِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ، وَالْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَكَلِمَةُ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ (بيهقي)

ஹாஜியிடம் நமது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற ஆதரவும்,  அதே நேரத்தில் நம்முடையஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஆகி விடுமோ என்ற அச்சமும் இருக்க வேண்டும். இத்தகையவர் தன் அமலைப்பற்றி  பெருமைப்பட மாட்டார்..

 


ரப்புல் ஆலமீன் அவனது அளப்பெரும் கிருபையால் இவ்வருடம் ஹஜ் செய்கிற எல்லா ஹாஜிகளின் ஹஜ்ஜையும் மக்பூலான மப்ரூரான ஹஜ்ஜாக ஆக்குவானாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!