உலகம் இரண்டின் இழுவை ..

 🕊️ உலகம் இரண்டின் இழுவை 🕊️


                  ════❁✿❁════


🔹 சில நேரங்களில் வாழ்க்கை நம்மை இரண்டு பக்கங்களாக இழுக்கிறது,


🔸 ஒரு பக்கம் பெற்றோரின் விருப்பம்... மற்றொரு பக்கம் மனைவி மற்றும் பிள்ளைகளின் உரிமை,


🔹 யாரையும் காயப்படுத்த விரும்பாத ஒரு மனிதன், நடுவில் நின்று அமைதியாக உடைந்து கொண்டிருக்கிறான்.


🔸 ஆனால் ஒரு முஸ்லிமின் முடிவு உணர்ச்சியின் அடிப்படையில் இருக்கக்கூடாது; 


அல்லாஹ்வின் கட்டளையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.


🔹 பெற்றோருக்கு நன்மை செய்வது ஒரு பெரிய வணக்கம்,


🔸 மனைவி, பிள்ளைகளின் உரிமைகளை நிறைவேற்றுவதும் அல்லாஹ் விதித்த கடமையாகும்.


🔹 இரண்டையும் சமநிலைப்படுத்துபவரே உண்மையான வெற்றியாளர்,


🔸 இந்த ஒரு கட்டத்தில் மட்டும் வெற்றி அடைந்து விட்டால், 


🔹அவர் முழு குடும்பவியல் வாழ்வில் வெற்றி அடைந்து விட்டார்...!


🔸 அல்லாஹ் கூறுகிறான் :


﴿إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ﴾


"நிச்சயமாக அல்லாஹ் நீதியையும் நன்மையையும் கட்டளையிடுகிறான்." 


(ஸூரத்துன் நஹ்ல் 16:90)


🔹 யாருடைய அநீதியாலும் அல்லாஹ்வை மகிழ்விக்க முடியாது,


🔸 யாருடைய மகிழ்ச்சிக்காகவும் அல்லாஹ்வின் எல்லைகளை மீறக்கூடாது,


🔹 சில சமயங்களில் மௌனமாக இருப்பது தீர்வு அல்ல,


🔸 நீதியாக இருப்பதே தீர்வு,


🔹 உன் இதயம் இரண்டாக கிழிந்தாலும்,


🔸 உன் தீர்ப்பு அல்லாஹ்வின் ஷரீஅத்தை விட்டு விலகாதிருக்கட்டும்,


🔹 அல்லாஹ்வை மகிழ்வித்தவன், 


🔸 இறுதியில் மனிதர்களின் இதயங்களையும் அல்லாஹ்வே இணைத்துவிடுவான்.


                       ════❁✿❁════


🔹 பெற்றோர் தரப்பில் ஏற்படும் உளவியல் தவறுகள் ;


🔸 "நாங்களா? இல்லை அவளா?" என்ற தேர்வு செய்ய வைப்பது.


🔹 மகனின் அன்பை, மனைவியுடன் போட்டியாகப் பார்ப்பது.


🔸 திருமணத்திற்குப் பிறகும், மகனின் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் கட்டுப்படுத்த முயற்சிப்பது.


🔹 மனைவியை குடும்ப உறுப்பினராக அல்ல; வெளி நபராக நடத்துவது.


🔸 குற்ற உணர்வை (Guilt) உருவாக்கி மகனை கட்டுப்படுத்த முயற்சிப்பது.


🔹 "நீ மாறிவிட்டாய்" போன்ற வார்த்தைகளால் மனஅழுத்தம் கொடுப்பது.


                         ════❁✿❁════


🔸 மனைவி தரப்பில் ஏற்படும் உளவியல் தவறுகள் ;


🔹 கணவன் பெற்றோருடன் பேசுவதையே சந்தேகமாகப் பார்ப்பது.


🔸 "நான் மட்டும்தான் முக்கியம்" என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவது.


🔹 கணவனின் பெற்றோருடனான உறவை மெதுவாகத் துண்டிக்க முயற்சிப்பது.


🔸 ஒவ்வொரு கருத்து வேறுபாட்டிலேயும் "நீ உன் அம்மா பக்கம்" என்று குற்றம் சாட்டுவது.


🔹 கணவனின் மனஅழுத்தத்தைப் புரிந்துகொள்ளாமல், மேலும் அழுத்தம் கொடுப்பது.


🔸 பிள்ளைகளை குடும்ப மோதலின் கருவியாக பயன்படுத்துவது.


                       ════❁✿❁════


🔹 அந்த மனிதனின் மனநிலை...

🔸 அவன் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் சிக்கியவன்.


🔹 ஒரு பக்கம் பெற்றோரின் கண்ணீர்,

🔸 மறுபக்கம் மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்பார்ப்பு.


🔹 யாரையும் இழக்க விரும்பவில்லை,


🔸 ஆனால் அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கும்போது,


🔹 அவன் உள்ளுக்குள் அமைதியாக உடைந்து கொண்டிருக்கிறான்.


                          ════❁✿❁════


🔹 இஸ்லாம் சொல்லும் தீர்வு,


🔸 பெற்றோருக்கு இஹ்ஸான் (நன்மை) செய்ய வேண்டும்.


🔹 மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நீதி (அத்ல்) செய்ய வேண்டும்.


🔸 அன்பு யாருக்கும் குறையக்கூடாது.


🔹 ஆனால் தீர்ப்பு அல்லாஹ்வின் சட்டத்தின்படியே இருக்க வேண்டும்.


﴿إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ﴾


🔸 "நிச்சயமாக அல்லாஹ் நீதியை ஏவுகிறான்.

"

(ஸூரத்துன் நஹ்ல் 16:90)


🤲 யா அல்லாஹ்....! 


🔹 எங்கள் குடும்பங்களில் அன்பையும், நீதியையும், பரஸ்பர புரிதலையும் நிலைநாட்டி,


🔸 யாருக்கும் அநீதி செய்யாமல் வாழும் பாக்கியத்தை எங்களுக்கு அருள்வாயாக 🤲 


آمين بجاه سيد المرسلين صلى الله عليه وآله وصحبه وسلم 💞


                              ════❁✿❁════

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

மக்தப் மதரஸாவின் வளர்ச்சி மார்க்கத்தின் எழுச்சி...!