இடுகைகள்

இஸ்லாமிய தமிழ் மாத இதழ்கள்

1. முஸ்லிம் முரசு                           எண்   49   கே.எம்.தெரு    ராஜ அண்ணாமலைபுரம் சென்னை   600 028       தொலைபேசி :   2495 1648 2. இஸ்மி மாத இதழ்                                                                                                               ...

நரகில் பெண்கள் - ஓர் விளக்கம்

                       '' இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே! '' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2911) உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று , பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம் , '' நரகத்தில் பெண்களே அதிகம் '' என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.) '' நான் (மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையேக் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன் ''. என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3241, 5198) மேற்கண்ட நபிமொழியை முன்வைத்து , இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும் ...

அழைப்புப்பணியில் இருக்கும் ஆண்கள் பேண வேண்டியவை

அழைப்புப்பணியில் இருப்பவர்கள் பேண வேண்டியவை ‍‍‍‍‍‍1. எந்த காரியத்திற்கும் நிய்யத் முக்கியம் என்கிற அடிப்படையில் தாவா செய்யும் களத்திலும் கூட நமது எண்ணங்கள் சரியான முறையில் அமைவது அவசியம். மறுமையே குறிக்கோளாக கொள்ள வேண்டும். 2. தாவா செய்வது இந்த சமுதாயத்தின் மீது விதியாக்கப்பட்டிருக்கிறதே தவிர , ஏதோ நாம் விருப்பப்பட்டு இந்த தாவா களத்தில் இருப்பதாய் நாம் நினைத்து விடக்கூடாது. நன்மையை ஏவுவதும் தீமையை விட்டும் தடுப்பதும் நபியின் உம்மத்தினராக பிறந்த நம் ஒவ்வொருவர் மீதும் கட்டாயக்கடமையாக உள்ளது (பார்க்க: அல்குர்ஆன் 3:110, 2:143) 3. நாம் ஒரு கொள்கையை கொண்டிருக்கிறோம் என்றால் அக்கொள்கையில் நாம் முதலில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். நாம் இருப்பது தான் நேரானவழி என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வேண்டும். சிறு ஊசலாட்டம் இருப்பவர்களும் தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தாத வரை தாவாவில் இறங்கக்கூடாது. 4. எந்த கொள்கையில் நாம் இருக்கிறோமோ அந்த கொள்கையில் நின்று தாவா செய்ய வேண்டும் , எந்த நிலையிலும் யாருக்காகவும் வளைந்து கொடுக்கக்கூடாது. நடுநிலை வேஷம் போடுபவர்கள் ...

நற்குணங்கள்

    S இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது. '' உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். '' ( அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் “ நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன் ” என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா) உண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள். இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை...

முஸ்லிம் பெண்களுக்கு அழைப்புப்பணிக்கான 33 யோசனைகள்

பெண்களும் அழைப்புப் பணியும் ? இதைக் கேட்டவுடன் பல முஸ்லிம்களுக்கு முதலில் தோன்றும் எண்ணம் : ‘ ஆனால் பெண்கள் வீட்டில் தானே தங்கி இருக்க வேண்டும் !.  உண்மைதான் , அல்லாஹ் மகத்துமிக்க குர்ஆனில் கூறுகிறான் . o ‘ உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள் !.... ( அல் அஹ்ஸாப் , 33) இந்த வசனம் முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவேக் கூடாது என்று சொல்லவில்லை . ஒரு பெண் தன் தேவைகளுக்காக வெளியே செல்லலாம் உதாரணமாக அழைப்புப்பணிக்காக ஒரு பெண் தகுந்த மஹ்ரமான ஆண் துணையோடு அழைப்புப் பணிக்காக பயணம் மேற்க்கொள்ளலாம் இங்கு கூறப்பட்டுள்ள அழைப்புப்பணிகான யோசனைகளை மேற்கொள்ள ஒரு பெண் தொலை தூர பயணங்களை மேற்க்கொள்ள வேண்டிய அவசியமில்லை அவள் தன் வீட்டில் இருந்த - படியே செய்யலாம் . எனவே நீங்கள் ஒரு வேலைக்குச் செல்லும் பெண்ணாகவோ , ஒரு தாயாகவோ அல்லது இல்லத்தரசியாகவோ இருப்பினும் உங்களால் இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியும் . இன்ஷா அல்லாஹ் ( அல்லாஹ் நாடினால் ) ஒரு முஸ்லிமான பெண் தன் சகோதரிகளுக்கும் சி...